Dec 27, 2011

கேரள போராட்டக்குழு தலைவர் வெளியேற்றப்பட்டார்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

கடந்த சனிக்கிழமை (24.12.2011) கொச்சியில் நடந்த கேரள எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த தீர்வை விளக்கினோம். பலத்த கர ஒலியுடன் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். 

பிரபல எழுத்தாளர்கள் திரு. சிவிசந்திரன், திரு. சி.ஆர் நீலகண்டன், முனைவர் லதா, உட்பட பலரும் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள். புதிய அணை வேண்டாம் என்பதை முல்லைப்பெரியாறு பேராட்டக்குழு தனது 6ம் ஆண்டு துவக்க நாளில் அறிவிக்க வேண்டும் என்று திர்மானம் நிறைவேறியது.

இடுக்கி சப்பாத்துவில் போராட்டத்தின் 6ம் ஆண்டு துவக்க நாளில் எங்களை பேச அழைத்தார்கள்.

25.12.2011 கிறித்துமசு தினத்தன்று 5ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. 

// ஒரு போராட்டம் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். பிரச்சனையே பிரச்சனைக்கு தீர்வாகாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கதவு அடைக்கப்பட்டதும், 9 கதவுகள் திறந்துள்ளன. புதிய அணை தேவை இல்லை. அதே நேரத்தில் தற்போதைய அணையின் பயன்பாட்டை குறைக்க தமிழகம் முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் போராட்ட வெற்றியை உறுதி செய்யுங்கள். ஒரு போராட்டத்தின் வீரியத்துக்கு அதன் முழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய டேம்(அணை) புதிய கரார்(ஒப்பந்தம்) என்ற உங்கள் முழக்கத்தை மாற்றுங்கள். பிரச்சனை ஒரு வாரத்தில் தீரும் என்பதை வலியுறுத்தி பேசினேன்.//

 தொடர்ந்து இதை பலரும் வலிறுத்தினார்கள். ஆனால் அங்கிருந்த சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  புதிய அணை ஒன்று தான் தீர்வு, 999 ஒப்பந்தத்தை மாற்றியே தீரவேண்டும் என முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தார்கள். இதனால் பதட்டம் ஏற்பட துவங்கியது. சிலர் செருப்புகளை எறிந்தார்கள். 

உடனடியாக போராட்ட குழு தலைவர் சி.பி ரோய், எழுத்தாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் எங்களை மீட்டு பத்திரமாக கோவைக்கு அனுப்பி வைத்தார்கள். 

தொடர்ந்து அப்போதே இந்தியாவிசன் செய்தி சேனலில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது. புதிய அணை வேண்டாம் என்று போராட்டக்குழு தலைவர் உறுதிபட தெரிவித்தார். இதை கேட்டதும் சிலர் ரோய் அவர்களை தாக்கினார்கள். 
ஆனாலும் திரு. ரோய் தனது முடிவில் மாற்றம் இல்லை. இலக்கு இல்லாத போராட்டத்திற்கு தலைமை தாங்க நான் தயாரில்லை என்பதை கூறினார். இதை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் கலவரத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் அங்குள்ள மக்களின் நியாயமான குரலின் சத்தம் அடங்கிப்போனது.

திரு.ரோய் அவர்கள் தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு தனிமனிதனாக போராட்டத்தை துவங்கிய திரு.ரோய் நேற்று தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டார். 

போராட்டக்குழுவில் இருந்து துரோகி பட்டம் கட்டி வெளியேற்றப்பட்டது குறித்து ரோயிடம் மீடியாக்கள் கேட்டன.

அவரின் பதில் உண்மையில் கண்கலங்க வைத்தது.

// 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த போராட்டத்தை நான் தான் துவங்கி வைத்தேன். இன்று வரை தலைவர் பொறுப்பில் இருந்து போராட்டத்தை அமைதி வழியில் நேர்வழியில் நடத்தி வந்துள்ளேன். மக்களின் உயிர்பாதுகாப்பு ஒன்று தான் முக்கியம். அதை தமிழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அதை ஏற்க வேண்டும். 

உயிர்பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் விளையாட்டுகளுக்கும் வியாபாரத்துக்கும் இடம் கொடுக்க கூடாது. புதிய அணை தேவை இல்லை என்பதை நான் இன்று உணர்ந்துகொண்டேன். இந்த உணர்வு இடுக்கியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் படிப்படியாக வரும். அப்போது ஒட்டுமொத்த கேரள மக்களும் புதிய அணை வேண்டாம் என்று முழங்குவார்கள். அன்று அதை அரசியல்வாதிகள் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.//
இவ்வாறு திரு ரோய் கூறினார்.

திரு ரோய், மற்றும் திரு கம்பம் அப்பாசு ஆகியோர் பேசிய சிடியை முழுமையாக ஒளிபரப்பி சுமூகதீர்வை தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தியாவிசன் செய்தி சேனலுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமூக தீர்வு வரும் வரை எங்கள் முயற்சி தொடரும்.

Dec 22, 2011

சீமான், வைகோ தீக்குளிக்க முயற்சி

நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம். இன்று வரை முல்லைப்பெரியாறுக்காக யாரும் யாரையும் அடிக்கவில்லை என்பது தமிழ்தாயின் மீது சத்தியம். தனிப்பட்ட வைராக்கியத்துக்காக ஒரு சிலர் போடும் ஆட்டத்தை பெரிதுபடுத்தி குளிர் காய்கின்றன பத்திரிக்கைகள். 

கேரள தமிழர்களுக்காக தயவு செய்து தமிழக தமிழர்கள் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். தமிழகத்தை விட கேரளாவில் நாங்கள் மிகமிக பாதுகாப்பாக இருக்கிறோம்.

சில உதாரணங்களை சொல்கிறேன்.

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை என்ற வாசகத்தை எனது வீட்டிலும், வாகனத்திலும் எழுதி வைத்துள்ளேன். அதை பார்க்கும் போதெல்லாம் தமிழக போலீசாருக்கும் மக்களுக்கும் பதட்டம் பற்றிக்கொள்ளும். எதுக்கு இப்படி எழுதியிருக்கிறீங்க, கைது பண்ணீடுவாங்க என்று பலரும் சொல்வார்கள். அவர்களுக்கு நான் தரும் ஒற்றை பதில்

‘நான் கேரள தமிழன். எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு’ இந்த பதிலுக்கு தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி உட்பட பலரும் தலைவணக்கம் தந்திருக்கிறார்கள்.

கேரளாவில் முழுமையான கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஈழம் ஊச்சகட்ட போர் நடந்துகொண்டிருக்கும்போது மேதகு பிரபாகரன் படத்தை கண்டாலே தமிழக காவல்துறையினர் பிடிங்கி கிழித்து விடுவார்கள். படம் வைத்திருப்பவரை தமிழ் தீவிரவாதி என்ற பட்டம் குத்தி வட்டம் போட்டு பின்தொடர்வார்கள். 

ஆனால் கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் ஈழம் குறித்த மூன்று குறும்படங்களை வெளியிட்டார்கள்.

இன்று வரை மேதகு பிரபாகரன் படம் பொறித்த ஆடைகளை கேரள தமிழர்கள் கம்பீரமாக அணித்து நடக்கிறோம். அந்த படத்தை பார்த்து தலைவணக்கம் செலுத்திய மலையாளிகள் பலர்.

கேரளாவில் வண்டிபெரியாறு, ஏலப்பாறை, கட்டப்பனை, ஆலுவா, கொச்சி உட்பட பகுதிகளில் காமராசர் சிலைகள் இன்றளவும் கம்பீரமாக இருக்கின்றன. ஆனால் கோவை, ஈரோடு உட்பட பல பகுதிகளில் காமராசர் சிலைக்கு சாக்கு போட்டு மூடி போலீசார் பாதுகாப்பு இருக்கின்றனர். ஒரு சிலைக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நீங்கள் கேரள தமிழர்களின் பாதுகாப்பு பற்றி ஏன் குடித்து விட்டு ஆடுகிறீர்கள்.  

முல்லைப்பெரியாறுக்காக தமிழகத்தின் போராட்டம் 100% நியாயமானது. ஆனால் அதற்காக இன உணர்வை தூண்டிவிட்டு கலவரம், தீக்குளிப்புகளை அரங்கேற்றுவது ஈனபுத்தி அல்லாமல் வேறு என்ன?

சீமானும், வைகோவும், கொளத்துர் மணியும் தீக்குளிக்கட்டும், அதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உடனே யாரும் பொங்க வேண்டாம். சீமானும் வைகோவும் தீக்குளிக்க முயன்றால் அதையும் படம்பிடித்து பத்துநாள் செய்தியாக்க ஊடகங்கள் தயாராக இருக்கின்றன.  தினமலர் மட்டும் தீவிரவாதி தீக்குளித்தான் என்று எழுதும் அவ்வளவு தான் வித்தியாசம்.

தமிழர்கர்களே கேரள தமிழக உறவு என்பது மலையாளி தமிழன் என்ற இன உறவோடு நின்றுவிடுவதில்லை. இது 50 லட்சம் கணவன்&மனைவி இரத்த உறவு. 

தமிழகத்தில் உள்ள மலையாளிகளை அடித்துவிரட்டு என்ற உங்கள் போராட்டத்தின் அர்த்தம் என்ன? இந்த 50 லட்சம் குடும்பங்களை பிரித்து சின்னாபின்னமாக்குவதா?, 50 லட்சம் தம்பதிகளை விவாகரத்து செய்து விடலாமா?, 

தயவு செய்து கொஞ்சமாவது அடிப்படையில் யோசியுங்கள்.  

முல்லைப்பெரியாறு போராட்டம் நியாயமானது, ஆனால் அதில் இனவெறியை திணிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.  

தமிழக்தில் ஒரு கலவரம் நடந்தால் அது இருபிரிவினர் மோதல் என்று செய்தியாகிறது. ஆனால் இப்போது மட்டும் மலையாளி தமிழனை தாக்குகிறான், தமிழனை மலையாளி தக்குகிறான் என்று செய்திகள் அனல் பறக்கிறது. இத்தகு ஊடகங்களின் செய்தியை நம்பும் மெத்த படித்தவர்களை என்னவென்று சொல்வது?

Dec 21, 2011

இந்து நாளிதழில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது


முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த நிரந்தர தீர்வை தமிழ்மலரில் எழுதிவந்தோம். இந்த திட்டத்தை இருமாநில போராட்டக்குழுவினரிடம் கொண்டு சேர்திருந்தோம். 

இது தொடர்பான செய்திகளை வெளியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஊடகங்கள் முன்வரவில்லை. மாத்தியமம், மங்களம், மாத்ருபூமி ஆகிய மலையாள பத்திரிக்கைள் மட்டுமே வெளியிட்டு இருந்தன. ஆனால் அவை தொடர்ந்து வலியுறுத்தப்படவில்லை.
கோவை, பாலக்காடு, இடுக்கி என 5 முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியிருந்தோம். பலன் ஏதுமில்லை. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் நேற்று மீண்டும் ஒரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினோம். இதன் பயனாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி:-



The Mullaperiyar Agitation Council has suggested that a new tunnel from a height of 50 ft from the Mullaperiyar reservoir will ensure water to Tamil Nadu while ensuring the security of the people living in the downstream areas.
“This will promise more water from the dam to Tamil Nadu’’ C.P.Roy, chairman of the council said and added that this was a proposal accepted by the Ainthumavatta Periyar Vaigai Passana Association, (an organisation of farmers), president K.M. Abass.
He said that the agitation was not against the people of Tamil Nadu, and while giving more water from the existing dam, the dead water storage could be reduced and it will address the fears of the people.
He said that if the dead water stored in the dam is reduced and the opening of the tunnel is changed near to the dam the security threat is addressed while it will provide more water to Tamil Nadu.
He said that the farmers in Theni, Madurai, Dindigul,Sivaganga and Ramanathapuram depended on the water from the Mullaperiyar dam and they will get more water while the water from the Mullaperiyar dam is stored at the New Vaigai dam and Rayapetti dam. He said that the existing dam could ensure enough water to Tamil Nadu while keeping the dead water storage level below 104 ft and changing the opening of the tunnel.
By this, the maximum capacity of 136 ft can be reduced to 100 ft.
He said that while keeping the water level at 100 ft, more water from the existing dam to Tamil Nadu, is ensured. If the water level in the reservoir is reduced, the threat due to the reservoir-induced tremors could also be less, he said.
இது தொடர்பான சுட்டி:- http://www.thehindu.com/news/states/kerala/article2729061.ece

தமிழ் ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரும் சனிக்கிழமை(24.12.2011) கொச்சியில் கேரள எழுத்தாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முல்லைப்பெரியாறு குறித்த தீர்வை தீர்மானமாக வலியுறுத்தி வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளனர். 

அன்றைய தினம் கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம் திரு.ரோய்&கம்பம் அப்பாசு ஆகியோர் தீர்வை ஏற்றுக்கொள்ளும் பேச்சு அடங்கிய சி.டியை அளிக்க இருக்கிறோம்.

கேரள முதல்வர் வாயால் இந்த கோரிக்கை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம். அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்

Dec 20, 2011

இந்து நாளிதழில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த நிரந்தர தீர்வை தமிழ்மலரில் எழுதிவந்தோம். இந்த திட்டத்தை இருமாநில போராட்டக்குழுவினரிடம் கொண்டு சேர்திருந்தோம். 

இது தொடர்பான செய்திகளை வெளியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஊடகங்கள் முன்வரவில்லை. மாத்தியமம், மங்களம், மாத்ருபூமி ஆகிய மலையாள பத்திரிக்கைள் மட்டுமே வெளியிட்டு இருந்தன. ஆனால் அவை தொடர்ந்து வலியுறுத்தப்படவில்லை.

கோவை, பாலக்காடு, இடுக்கி என 5 முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியிருந்தோம். பலன் ஏதுமில்லை. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் நேற்று மீண்டும் ஒரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினோம். இதன் பயனாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி:-



The Mullaperiyar Agitation Council has suggested that a new tunnel from a height of 50 ft from the Mullaperiyar reservoir will ensure water to Tamil Nadu while ensuring the security of the people living in the downstream areas.
“This will promise more water from the dam to Tamil Nadu’’ C.P.Roy, chairman of the council said and added that this was a proposal accepted by the Ainthumavatta Periyar Vaigai Passana Association, (an organisation of farmers), president K.M. Abass.
He said that the agitation was not against the people of Tamil Nadu, and while giving more water from the existing dam, the dead water storage could be reduced and it will address the fears of the people.
He said that if the dead water stored in the dam is reduced and the opening of the tunnel is changed near to the dam the security threat is addressed while it will provide more water to Tamil Nadu.
He said that the farmers in Theni, Madurai, Dindigul,Sivaganga and Ramanathapuram depended on the water from the Mullaperiyar dam and they will get more water while the water from the Mullaperiyar dam is stored at the New Vaigai dam and Rayapetti dam. He said that the existing dam could ensure enough water to Tamil Nadu while keeping the dead water storage level below 104 ft and changing the opening of the tunnel.
By this, the maximum capacity of 136 ft can be reduced to 100 ft.
He said that while keeping the water level at 100 ft, more water from the existing dam to Tamil Nadu, is ensured. If the water level in the reservoir is reduced, the threat due to the reservoir-induced tremors could also be less, he said.
இது தொடர்பான சுட்டி:- http://www.thehindu.com/news/states/kerala/article2729061.ece

தமிழ் ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரும் சனிக்கிழமை(24.12.2011) கொச்சியில் கேரள எழுத்தாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முல்லைப்பெரியாறு குறித்த தீர்வை தீர்மானமாக வலியுறுத்தி வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளனர். 

அன்றைய தினம் கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம் திரு.ரோய்&கம்பம் அப்பாசு ஆகியோர் தீர்வை ஏற்றுக்கொள்ளும் பேச்சு அடங்கிய சி.டியை அளிக்க இருக்கிறோம்.

கேரள முதல்வர் வாயால் இந்த கோரிக்கை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம். அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

Dec 19, 2011

கூடம்குளம் முல்லைப்பெரியாறு ஒரே தீர்வு

தினமலர் சன்டிவி, நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு கூத்தடித்து கும்மாளம் அடிக்க இந்த இரண்டு விசயங்கள் கிடைத்து விட்டது. ஆனால் தென்மாவட்ட மக்களுக்கு உயிர்/உயிர் ஆதாரம் இரண்டும் கொலைநடுங்க வைத்திருக்கிறது.

கூடங்குளம், முல்லைப்பெரியாறு பிரச்சனைகள் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி, சிலருக்கு குடித்துவிட்டு கடங்காரன் கடையில் கல் எறிய கிடைத்த வரப்பிரசாதம். அந்த கயவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணடிப்பதை விட நல்ல விசயத்தையே எழுதுவோம்...

முல்லைப்பெரியாறில் தற்போது உள்ளதை விட ஆழத்தில் கூடுதலாக குழாய்கள் அமைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இந்த திட்டம் எங்கள் திட்டம் அல்ல. 1889ல் தென் மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கடவுளாக அவதாரம் எடுத்த பென்னி குயிக் அவர்களின் கனவு திட்டம்.
அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கம்பம் தேனி, மதுரை இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்கள் ஆண்டாண்டு காலம் போராடி வருகிறார்கள். அனால் எந்த ஊடகங்களும் அதை கண்டு கொள்வது இல்லை. காரணம் அதைபற்றி எழுதினால் பிரச்சனை ஏதும் வெடிக்காதே,    

கூடுதல் குழாய்கள் மூலம் தண்ணீரை கூடலூர் பகுதிக்கு கொண்டு வருதல் முல்லைபெரியாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த திட்டம் கூடங்குளம் பிரச்சனைக்கும் தீர்வை தரும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 104 அடியில் அதிகபட்சமாக 2000 கன அடி தண்ணீரை தமிழகம் எடுத்து வருகிறது. இதோடு புதிதாக 50 அடி ஆழத்தில் கூடுதலாக ஒரு சுரங்கம் அமைத்து தண்ணீரை தமிழகம் எடுக்கலாம். இதனால் கேரள மக்களின் பயத்தை போக்கி அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிபடுத்த முடியும். 

கூடுதலாக தமிழகம் எடுக்கும் தண்ணீரை கொண்டு கூடலூர், கம்பம், ராயப்பட்டி புதிய வைகை அணை போன்ற பகுதிகளில் 10.டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கலம். இவற்றில் இருந்து 1 முதல் 10 மெகாவாட் மின் உற்பத்தி பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட நீர் மின் நிலையங்களை ஏற்படுத்த முடியும்.

தற்போது முல்லை பெரியாற்று நீரில் நான்கு குழாய்கள் வழி 140 மெகா வாட் மின்சாரம் பெறப்படுகிறது. கூடுதலாக 4 குழாய்கள் அமைப்பதன் மூலம் இதை இரட்டிப்பாக்க முடியும். மேலும் தற்போதைய நவீன மேம்பட்ட கய்ப்ரீட் தொழில்நுட்பத்தில் ஒரே குழாயில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும். 

இந்த திட்டங்கள் மூலம் குறைந்த பட்சம் 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யமுடியும். கூடங்குளத்தில் ஒரு அணு உலை மூலம் 1000 மெகாவாட் திட்டமிடப்பட்டுள்ளது. இதை யூரேனியம், மத்திய அரசு, ரசியா, கதிர்வீச்சு என்ற எந்த செலவும் இல்லாமல் முல்லைப்பெரியாற்றில்
இயற்கையாகவே எடுக்கலாமே. 

தற்போது 5 லட்சம் ஏக்கர் திட்டத்தில் இருந்தாலும் வெரும் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே நீர்பாசனம் பெருகிறது. ஆனால் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர்பாசணம் அளிக்க முடியும். 

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பொன்னு விளையும் பூமியாகும். தமிழகத்தின் மின்தேவையையும் மத்திய அரசு உதவி இன்றி சுயமாகவே பூர்த்தி செய்ய முடியும்.

இத்தனை நல்ல விசயங்கள் இருக்கும்போது அதை பற்றி விவாதிக்காமல் மலையாளியை அடித்து விரட்டு, தமிழனை அடித்து விரட்டு என இருமாநில ஊடகங்களும் ஆட்டம் போட்டு வருகின்றன. 

இவர்கள் ஆட்டம் அடங்க மீண்டும் ஒரு செயலட்சுமியோ, புவனேசுவரியோ வரவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு நடிகை எதையாவது செய்ய வேண்டும். அப்போது இந்த கருமம் பிடித்த மீடியாக்கள் அந்த பக்கம் ஒடிவீடும். 

பின்னர் இருமாநில மக்களும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் அந்த நன்னாள் சீக்கிரம் வர மனதுக்குள் வேண்டிக்கொள்வோம்....

Dec 17, 2011

முதுகெலும்பு இல்லாத சில தமிழர்கள்


மிகவும் கேவலத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன். சில தமிழக தமிழர்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக போனது தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும் என்பதில் ஐயமில்லை.

வீரம் பற்றி பேசும் தமிழர்களில் இப்படியும் சில கோழைகள் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

1. முல்லைப்பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளின் கடைகளையும், பத்திரிக்கை அலுவலகங்களையும் அடித்து நொறுக்குபவர்களுக்கு சென்னையில் உள்ள சூரியா டிவி அலுவலகத்தின் மீது ஒரு கல் வீசும் தைரியம் இருக்கிறதா?

2. மலையாளிகளின் கடை விளம்பர பேனர்களை கிளித்து எறியும் வீராசூரர்களுக்கு தினமலர், தினகரன், தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளில் வெளிவரும் மலையாளிகள் விளம்பரங்களை கிழித்து எறியும் தைரியம் உண்டா?, தொலைகாட்சிகளில் ஆலுகாசு, கல்யாண், முத்தூட் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சொல்லவாவாது தைரியம் இருக்கிறதா?

3. முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய கேரள அதிமுக மற்றும் திமுகவை கலைக்க சொல்லும் தைரியம் இருக்கிறதா?

4.ஒன்றும் அறியாத அப்பாவிகள் பயணிக்கும் பேருந்துகள் மீது கல்வீசுபவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் செல்லும் சொகுசு கார்கள், விமானங்களை தடுத்து நிறுத்தும் தைரியம் இருக்கிறதா?

5. கேப்டன் டி.வி நிருபர் ஒருவர் சொல்கிறார் மலையாளிகளை எல்லாம் அடித்து விரட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்ந்து விடுமாம்.  அட அடி முட்டாள்களே இதை தானே கர்நாடகாவில் செய்கிறார்கள். காவிரிப்பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களை அடிக்கும்போது மட்டும் உங்களுக்கு வலிக்கிறதோ?

6. தினகரன் தினமலர் தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளுக்கு கேரளாவில் 1 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது. இந்த பத்திரிக்கைகள் கேரளாவுக்கு அனுப்பக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா? கேரளாவில் இருந்து விளம்பரங்கள் வாங்கக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?

அன்பர்களே கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான உறவு முல்லைப்பெரியாறு மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் 34,500 ஒப்பந்தங்கள் உள்ளன. இதில் 34499 ஒப்பந்தங்கள் சுமூகமாக உள்ளன. இது உலகில் வேறு எந்த இரு அரசாங்கத்திற்கும் இடையேயும் இல்லாத மிகப்பெரிய ஒற்றுமை.

கேரளாவில் 2 தமிழ் எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 5015 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சட்டசபை வரை தமிழில் பெயர்பலகை வைத்துள்ளார்கள். தமிழில் அரசு ஆவணங்கள் உள்ளன. பத்திரப்பதிவு முதல் பிறப்பு&இறப்பு சான்றிதழ் வரை தமிழில் உள்ளது. தமிழ் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. 

தமிழகத்துக்கு வெளியே அதிக தமிழர்கள் வாழும் பகுதியாக கேரளா உள்ளது. எனவே சில முட்டாள் தமிழர்களே!, கேரளா என்றால் மலையாளிகள் மட்டும் தான் என்ற உங்கள் குருட்டு புத்தியை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை ஒரு வியாபாரமாக ஊடகங்கள் கையில் எடுத்துள்ளன. அதற்கு கூழைகும்பிடு போடும் பேடி தமிழர்களே எதார்த்தத்தை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். 

புதிய அணை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி சுமூக தீர்வை வலியுறுத்தி வரும் சம்மந்தப்பட்ட இடுக்கி, தேனி மாவட்ட விவசாயிகள் சொல்வதை கொஞ்சமாவது காதுகொடுத்து கேளுங்கள்.

மீடியாக்கள் அடுத்த பெரிய பிரச்சனை வந்தால் அங்கே போய்விடும். இப்போது கல் எரியும் தியாகிகள் எல்லாம் அப்போது மீடியாக்களுக்கு தமிழ்தீவிரவாதிகளாக தெரிவீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Dec 12, 2011

முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு


முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.ரோய், இதை அறிவித்துள்ளார். 

இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் போராட்ட பந்தலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய் மற்றும் சுரங்கங்களின் ஆழத்தை கூட்டி , அல்லது புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் முழுமையாக தண்ணீரை எடுக்கலாம். இதன் மூலம் தற்போது உள்ள அணையை சமாதான சின்னமாக நிலைநிறுத்தலாம். புதிய அணை தேவை இல்லை. இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என்று திரு ரோய் பேட்டியில் அறிவித்துள்ளார். 

தாழ்வாக புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு போராட்டக்குழ தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்களும் வரவேற்று உள்ளார். 

திரு பென்னிகுயிக் டைரிக்குரிப்பில் உள்ள கூடுதல் கால்வாய்கள் வெட்டும் திட்டத்தை தமிழ்மலரில் எழுதி இருந்தோம். இது தொடர்பாக திரு. கம்பம் அப்பாசு, திரு ரோய் ஆகியோரை சந்தித்து பேசினோம். 

இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இருவரும் ஒரே தீர்வை வலியுறுத்தும் பேட்டி அடங்கிய சி.டியை தமிழ்மலர் ஆசிரியர் திருமதி.உமாமகேசுவரி திரு ரோய் அவர்களிடம் அளித்தார்.

இடுக்கி சப்பாத்துவில் இன்று மாலை இந்த நிகழ்வு நடந்தது. போராட்ட பந்தலில் பட்டினி போராட்டம் நடத்திவரும் அத்தனை பேரும் மகிழ்ச்சி பொங்க சி.டியை பெற்றுக்கொண்டர். திரு.கம்பம் அப்பாசு அவர்களின் பேட்டிக்கு பலத்த கர ஒலி எழுப்பி மலையாளி தமிழர் இனபேதம் இன்றி அத்தனை மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.ரோய் இது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்டனர். பல ஆண்டுகள் தொடரும் எங்கள் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்த வந்த இந்த ஆதரவு குரலை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறோம் என்றனர். 

இன்று இரவு 8.30 க்கு நடந்த இந்த சந்திப்பு நாளை கேரளாவின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் என்று நம்புகிறோம்.

தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் உரக்க சொல்வோம்...

திரு.ரோய் (கேரள போரட்டகுழு தலைவர்) :  09447200707
திரு கம்பம் அப்பாசு (தமிழக போராட்ட குழு தலைவர்) :  9597844100
தமிழ்மலர் :  9787678939]

எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் தீர்க்கலாம்.

பெண்கள் மானபாங்கம்-உண்மையில் நடப்பது என்ன?


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஊடங்கள் நினைத்ததை சாதித்து விட்டன. தமிழர் மலையாளி பிரச்சனையை கிளப்பி கொஞ்சம் காசுபார்த்து விட்டன. அதற்கு சால்ரா போட இங்கு வலைப்பதிவர்களும் வரிந்துகட்டிக்கொண்டுள்ளது தான் உச்சகட்ட வேதனை.

குமுளியில் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக கூறும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தேன். தமிழக ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தியது போல அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

கடந்த வாரம் கூடலூரில் ஒரு இளைஞர் சுயமாக தீக்குளித்தார். ஆனால் தமிழக ஐயப்பசாமி மீது தீ வைத்து விட்டார்கள் என்ற புரலி தமிழகம் முழுவதம் பரவியது. தமிழக போலீசாரின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து அந்த விடயத்தை ஊடகங்கள் கைவிட்டன. அடுத்து எந்த பிரச்சனையை கையில் எடுத்தால் தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது ஊடகங்களுக்கு தெரியாமல் இல்லை. அதை செய்து சாதித்துவிட்டார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒரு இளைஞன் திருச்சூர் ரயிலில் ஒரு கல்லூரி பெண்னை கழ்பழித்து கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். அப்போது கேரள மக்கள் யாரும் அதை தமிழர்கள் செய்ததாக பார்க்கவில்லை. கேரளாவில் உள்ள தமிழர்களையும் தாக்கவில்லை. தனிப்பட்ட ஒரு கொடூரன் செய்ததாக தான் பார்த்தார்கள். 6 மாதங்களில் வழக்கு முடிக்கப்பட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல குமுளியில் தமிழ் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக சொல்லும் கயவர்களை அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். ஆனால் தமிழர்&மலையாளிகள் கலவரத்தைதூண்டி வேடிக்கை பார்க்கின்றன ஊடகங்கள்.
நக்கீரன் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் திடீர் என தமிழக மக்களின் நம்பிக்கைக்குறிய ஊடகங்களானது எப்படி என்று தெரியவில்லை.

தமிழக போராட்டக்குழுவும், கேரள போராட்டக்குழுவும் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள். அதை வெளியிட்டு பிரச்சனை தீர்க்க ஊடகங்கள் முன்வரவில்லை. இதை கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் இன்று மலையாளி தமிழர் பிரச்சனைக்காக வக்காலத்து வாங்குகின்றனர்.

சிலரின் சுயநலத்திற்காக பல அப்பாவிகளின் வாழ்க்கையில் விளையாடும் ஊடகங்கள் நாசமாக போகட்டும் என்று சபிப்பதை தவிர வேறு என்ன சொல்ல?

இன்று கேரளாவிலும் தமிழகத்திலும் மாறி மாறி அரசியல்வாதிகள் உண்ணாவிரத நாடகம் நடத்துகிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் பட்டினி கிடக்கும் தோட்ட தொழிலாளர்களின் வேதனை யாருக்காவது தெரியுமா? தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே உணவு உண்ண முடியும் என்ற நிலையில் உள்ள அடித்தட்டு மக்களை பட்டினி போட்டு கொல்வது தான் உங்கள் போராட்டமா?

உணர்ச்சிவசப்பட்டு எழுதுபவர்களுக்கு உண்மையை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும். அது எத்தனை பேருக்கு இருக்கிறது?

மேதகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு கீரல் விழுந்தாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றார் வைகோ. என்ன நடந்தது? இன்று முல்லைபெரியாறு பிரச்சனையில் தமிழகத்தில் எரிமலை வெடிக்கும் என்கிறார் வைகோ. உணர்ச்சிகளை தூண்டி விடுவது எளிது. ஆனால் அதில் அடிபட்டு சாவது அடித்தட்டு மக்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

எரிமலையும் வெடிக்காது ஒரு ஈரவெங்காயமும் நடக்காது. தமிழகத்தில் மலையாளிகளை அடிப்பீர்கள், கேரளாவில் தமிழர்களை அடிப்பார்கள். பிரச்சனை முற்றினால் ரொம்பரொம்ப நடுநிலையான இந்திய ராணுவம் எல்லையில் குவிக்கப்படும். அப்போதும் எல்லையில் உள்ள தமிழர்கள் தான் சுட்டுக்கொல்லப்படுவார்கள். பிரச்சனையை தூண்டிவிடுபவர்களுக்கு ஒரு கிரல் கூட விழாது. 6 மாதம் எல்லை முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும். குழந்தைக்கு பால்வாங்ககூட வெளியில் இறங்க முடியாமல் பட்டினி கிடந்து சாவோம் . அது அல்லாமல் வேறு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? 

இன்னும் எழுதுங்கள், உங்கள் ஆசை தீர பிரச்சனையை தூண்டி தூண்டி எழுதுங்கள். எங்கள் குழந்தைகளின் கண்ணீர் மட்டும் உங்களை எளிதில் விட்டுவிடாது என்பதை மட்டும் நினைவில் வைத்து எழுதுங்கள்.

ஊடகங்களின் செய்தியை பக்கத்துக்கு பக்கம் பகிர்ந்து கொள்ளும் வலைபதிவர்கள் பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கும் பதிவை பகிந்துகொள்ள தயாரா?

உண்மையில் சமாதானத்தை விரும்பும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் 

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு முழு வெற்றி

இந்த பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்

Dec 9, 2011

ஊடகங்கள் முகத்தில் கரிபூசும் காணொளி - முல்லைப்பெரியாறு

இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்



அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள

இருவரும் சொல்வது :-

திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் : ( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.)

முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


தேனி உண்ணாவிரதப்பந்தலில் திரு.கொள்த்தூர் மணி, திரு.கம்பம் அப்பாசு, திரு. வைகோ, திருவிசயகுமார், திரு.கு.ராமகிருசுணன் உள்ளிட்டோர்.

திரு. வைகோ, திரு.கொளத்தூர் மணி, திரு.விசயகுமார்(தமிழக பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற பொறியாளர்கள் சார்பில் முல்லைப்பெரியாறு காணொளியில் பேசுபவர்). ஆகியோர் இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு பின்னர் பேசுவதாக கூறியுள்ளனர்.

எங்களது இந்த முயற்சிக்கு கேரளாவின் பிரபல எழுத்தாளர் சி.ஆர்.நீலகண்டன் அவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நன்றி.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 9787678939. 

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு முழு வெற்றி


இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்

அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்

இருவரும் சொல்வது :-

திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் :( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொ£டர்ந்தவர்.)

முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேனி உண்ணாவிரதப்பந்தலில் திரு.கொள்த்தூர் மணி, திரு.கம்பம் அப்பாசு, திரு. வைகோ, திருவிசயகுமார், திரு.கு.ராமகிருசுணன் உள்ளிட்டோர்.

திரு. வைகோ, திரு.கொளத்தூர் மணி, திரு.விசயகுமார்(தமிழக பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற பொறியாளர்கள் சார்பில் முல்லைப்பெரியாறு காணொளியில் பேசுபவர்). ஆகியோர் இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு பின்னர் பேசுவதாக கூறியுள்ளனர்.

எங்களது இந்த முயற்சிக்கு கேரளாவின் பிரபல எழுத்தாளர் சி.ஆர்.நீலகண்டன் அவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நன்றி.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 9787678939. 

Dec 7, 2011

திரு.வைகோவை சந்திக்கப்போகிறேன்


முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சில கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறேன்.

முல்லைபெரியாறு பிரச்சனைக்கான தீர்வை எளிமையாக சுருக்கமாக ஒரு பக்க கடிதமாக தயார் படுத்தியுள்ளேன்.

ஒரு கேரள தமிழனின் எதார்த்த கோரிக்கை என்ற தலைப்பில் இந்த கடிதத்தை தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ளேன். 


முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு  முழுமையான ஆறுதலை தரும்.  

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

திரு. வைகோ அவர்களே, திரு.நெடுமாறன் அவர்களே, திரு கொளத்தூர் மணி அவர்களே இந்த கடிதத்திற்கு உங்களிடம் இருந்து ஆறுதலான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் அயல்மாநில உறவாய்
ஒரு கேரள தமிழன்.

Dec 6, 2011

முல்லைபெரியாறு : மீடியா ஆட்டம் அடக்க புதிய வைகைஅணை


முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரள தமிழக மக்கள் அமைதிகாக்கிறார்கள். ஆனால் சிறு சிறு கும்பல்களை தூண்டி விட்டு வேடிக்கை காட்டி வருகிறது இருமாநில மீடியாக்கள்

ஆனால் சத்தம் இல்லாமல் சமரச பேச்சுக்கு தயாராகிவிட்டார்கள் இருமாநில போராட்ட குழுவினரும். 

கேரளாவில் போராடும் முல்லை பெரியாறு பாதுகாப்பு போராட்டகுழுவினர் எளிமையான ஒரு தீர்வை முன்வைத்தார்கள். அந்த தீர்வை நாங்கள் நூற்றாண்டுகளாக எதிர்பார்த்திருக்கிறோம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர் தமிழக போராட்ட குழுவினர்.

முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழகம் தண்ணீர் எடுக்கும் பகுதியில் மேலும் கூடுதலாக இரு சுரங்கபாதைகளை ஏற்படுத்துதல். இந்த சுரங்கபாதைகள் மூலம் முழுமையாக தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டு வருதல் அதாவது (அணையில் நீரை தேக்காமல் நேரடியாக தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு வருதல்).

இந்த திட்டம் தான் விரைவில் தீர்வாக அமைய இருக்கிறது.

இதற்காக மதுரை வைகை அணை அருகே புதிய வைகை என்ற பெயரில் 4 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அணையை கட்டி முடித்து விட்டார்கள் தமிழக விவசாயிகள்.
இந்த திட்டத்தை தமிழகம் முதலில் முன்வைத்தால் கேரள அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே கேரள போராட்ட குழுவே முன்வைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைக்குமேல் இருக்கும் உயிர்பயத்தை போக்க வந்த கடவுளாக இந்த திட்டத்தை கேரள போராட்ட குழு காண்கிறது. 

கேரள போராட்ட குழுவை பொருத்தவரை கேரளாவின் புதிய அணை திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் கேரள மீடியாக்கள் இதை வெளியிடுவதில்லை. அதே போல தமிழக விவசாயிகள் கூடுதல் கால்வாய் திட்டத்தை வரபிரசாதமாக நினைக்கிறார்கள். ஆனால் தமிழக மீடியாக்களுக்கு இது பிடிக்கவில்லை. 

பிரச்சனைக்கு சுமூக தீர்வு இருக்கும்போது இருமாநில மீடியாக்களும் போடும் ஆட்டம் விரைவில் அடங்க இருக்கிறது. இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தமிழக கேரள போராட்டக்குழுவினர் சந்தித்துபேசும் சூழலை ஏற்படுத்தியுள்ளேன்.

நாளை கம்பத்தில் நடக்கும் வைகோ உண்ணாவிரத பந்தலில் இது குறித்து பேச உள்ளேன். தமிழர்கள் பச்சைகொடி காட்டி விட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கேரள போராட்டக்குழுவை தமிழகத்துக்கு அழைத்துவந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.  

தமிழக தமிழர்கள் இரக்க குணம் அற்றவர்களா?


தமிழர்கள் உலகம் முழுவதும் பல பிரச்சனைகளுக்காக பல்வேறு பட்டினி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இன்று தமிழனை நோக்கி ஒரு பட்டினி போராட்டம் போராட்ட நடக்கிறது. அந்த பட்டினி பாராட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் குறைந்தபட்சம் காதுகொடுத்தாவது கேட்க வேண்டாமா? காதுகொடுத்து கூட கேட்க மறுக்கும் மனித தன்மையற்றவனா தமிழன்?
உண்மையில் முல்லைப்பெரியாறு அணை பலமுடன் உள்ளதா பலவீனமாக உள்ளதா அது இரண்டாம் பட்சம். ஆனால் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள 70 லட்சம் மக்கள் மரணபயத்தில் இருக்கிறார்களே? இவர்கள் மரண பயத்திற்கு தமிழக மக்கள் இன்று வரை மதிப்பளிக்காதது ஏன்?

முல்லைப்பெரியாறு போராட்ட குழுவினரின் போராட்டத்திலும் கோரிக்கையிலும் முழுமையான நியாயம் இருக்கிறது. அது ஏன் தமிழர்களுக்கு புரியவில்லை?

வழவழவென கட்டுரையை நீட்டவில்லை சுருங்க சொல்கிறேன்.

முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என போராடும் கேரள குழுவினர் ஒரு எளிமையான தீர்வை முன்வைத்து கடந்த 6 ஆண்டுகளாக போராடுகின்றனர். 

அணையை உடைக்கவோ புதிய அணை கட்டவோ நாங்கள் சொல்லவில்லை. அணையின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.

தமிழகம் தற்போது நீர் எடுக்கும் பகுதியில் ஏற்கனவே பென்னி குயிக் மற்றும் எம்.சி.ஆர் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட மாற்று தீர்வுகளை செயல்படுத்த தயாராக வேண்டும்.

தற்போது உள்ள சுரங்கபாதைகளை போல கூடுதலாக மேலும் 2 சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் பிரதான அணைக்கான அழுத்தத்தை குறைக்க முடியும். தமிழகத்துக்கும் முழுமையாக தண்ணீரை எடுத்து செல்ல முடியும். இதற்கு கூடுதல் நிதி செலவுகளோ, ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த திட்டத்தைதான் நிரந்தர தீர்வாக கேரள போராட்ட குழுவினர் வலியுறுத்துகின்றனர். இதை தமிழக விவசாயிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். 

இது குறித்து பெரியாறு நீர்பாசன போராட்டக்குழு தலைவர் கம்பம் அப்பாசு அவர்களை சந்தித்து பேசினேன். இந்த திட்டம் தமிழர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றார். இந்த திட்டம் கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சிக்காலத்திலேயே பரிசீலிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை கூறினார்.

கேரள போராட்ட குழுவும் , தமிழக போராட்ட குழுவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக & கேரள ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மட்டும் ஏற்றுக்கொள்வது இல்லை.

எதனால் இவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை? முல்லைபெரியாறு இவர்களுக்கு ஒரு வியாபாரம். கொழுத்த லாபம் தரும் இந்த வியாபாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.

இது தொடர்பாக கோவை பத்திரிக்கையாளர் மன்றம், பாலக்காடு பத்திரிக்கையாளர் மன்றம், கோவை&பாலக்காடு மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கம் அளித்தேன். தீர்வை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களது மேலிடம் அதை பிரசுரிக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

கூடங்குளம் மக்களின் மரண பயத்திற்கு மதிப்பளிக்கும் திரு வைகோ, திரு. நெடுமாறன், திரு. கொளத்தூர் மணி, திரு. கு ராமகிருசுணன் போன்ற தலைவர்கள் கேரள தமிழர்களின் மரண பயத்தை காதுகொடுத்து கூட கேட்காதது தான் உச்ச கட்ட வேதனை.
  
இறுதி முயற்சியாக நாளை திரு வைகோ, திரு. நெடுமாறன், திரு. கொளத்தூர் மணி, திரு. கு ராமகிருசுணன் ஆகியோரை சந்தித்து பேசுகிறேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றால் நிச்சயம் சுமூக தீர்வுக்கான கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகிறேன்.

Popular Posts