Apr 17, 2014

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் யாருக்காக?

பெண் வன்கொடுமை சட்டத்தை எவ்வளவு உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு உச்சத்தில் வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். பெண்கள் ஓட்டு முக்கியம் என்பது அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் தெரியும். அதே நேரத்தில் ஆண்கள் ஓட்டை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. இங்கு வாக்கு அரசியலை தாண்டி இந்த சட்டத்தை ஆய்வு செய்வோம். 

ஒரு பெண் புகார் கொடுத்தாலே உடனடியாக ஆணை கைது செய்து சிறையில் அடைக்கலாம். முதலில் கைது, பின்பு தான் விசாரணை. முதல் இரண்டு வாய்தாக்களுக்கு பிணை கிடையாது. விசாரனையில் அந்த ஆண் நிரபராதியாக கூட இருக்கலாம். ஆனால் அதை பற்றி எல்லாம் சட்டத்திற்கு கவலை இல்லை. தன் நியாயத்தை குறைந்தபட்சம் சொல்ல கூட அந்த ஆணுக்கு வாய்ப்பு இல்லை. சிறைக்கு பின்பு தான் எல்லாமும். இது ஒரு சட்டமா? இந்த சட்டம் பெண்களை பாதுகாக்கவா அல்லது பேரம் பேசவா? 

ஆண்களை அடிமைப்படுத்த நினைத்த எந்த சட்டமும், ஆட்சியும் வென்றதாக சரித்திரம் இல்லை என்பது வரலாறு. சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டும். இதற்கு ஆதரவாக ஆண்கள் குரல்கொடுக்க தயங்குவது ஏன் என்பது தான் இப்போது வரை எனக்கு விசித்திரமாக உள்ளது.

ஆண்களே பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உடனடியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். எந்த தருணத்திலும் நீங்கள் பேரம் பேசப்படலாம்.  

பெண் வண்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

1. பெண்களுக்கு பாதுகாப்பானது
2 ஆண்களுக்கு ஆபத்தானது
3. பணம் பேரம்பேச போலீசாருக்கு கிடைத்த இன்னொரு வழி

No comments:

Post a Comment

Popular Posts