Jul 13, 2011

வைகோ உண்மையில் ஒரு கோ தான்

தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.

ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட  மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது. 

கோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.

தெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். 

கோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...

Jul 10, 2011

1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை

ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள் என்று தான் மெத்தபடித்த பலரும் நினைத்திருக்கின்றனர். ஆனால் நாகரீகத்தின் ஊற்று ஆதிவாசிகள் தான் என்பதை அவர்களுடன் நெருங்கி பழகும்போது தெரிந்துகொள்ளலாம்.


உலகின் முதல் மனிதர்களான அட்டப்பாடி ஆதிவாசிகளை குறித்து எழுத துவங்கியுள்ளேன். நான் ஏற்கனவே எழுதி பாதியில் நின்றிருக்கும் அறிவகம்(அறிபரிபூரணம்) கட்டுரைக்கு இந்த புத்தகம் முடிவுரையாக அமையலாம். பிரபஞ்சம் தோற்றம், மனித தோற்றம், வாழ்க்கைமுறை, கடவுள் என பல புலம்படாத ரகசியங்களுக்கு ஆதிவாசிகளிடம் விடைகண்டுகொண்டேன்.

காட்டில் வாழும் ஆதிவாசிகள் எவ்வளவு அரசியல் அறிவுக்கூர்மை உடையவர்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் இந்த பதிவு.

1947ல் நாங்கள் அடிமைகள் ஆனோம் என்று அட்டப்பாடி ஆதிவாசிகள் உறக்க சொன்னபோது நான் மட்டுமல்ல என்னோடு வந்த நிருபர் பட்டாளமே ஆடிப்போனது.

அட்டப்பாடி ஆதிவாசிகளின் கனத்த குரலை அப்படியே தருகிறேன்:

அறிவுக்கு எட்டிய நினைவு வரை நாங்கள் இந்த காட்டில் சுதந்திரமாக தான் வாழ்ந்துள்ளோம். ஆங்கிலேயர் கூட எங்களை ஆட்சி செய்ய முற்படவில்லை. மாறாக எங்களுக்கு உதவிகளை செய்தார்கள். எங்களிடம் இருந்து சட்டதிட்டங்களை கற்றார்கள். எங்கள் ஊர் மூப்பன்களை(ராசாக்கள்) சிறம்தாழ்ந்து வணங்கி விடைபெற்றார்கள். 

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் இனி இந்தியா என்ற நாட்டின் குடிமக்கள் என்ற பறைஓதினார்கள். எங்களுக்கு அப்போதைக்கு அது பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் வனபாதுகாப்பு ராணுவம் என்ற போர்வையில் எங்களை ஒடுக்க அடிக்க ஒடியன்கள் வரும்போது தான் திக்குதெரியமால் சிதறிப்போனோம்.

இன்று எங்கள் காடு எங்களிடம் இல்லை. எங்கள் வாழ்க்கைமுறை எங்களிடம் இல்லை. எங்களை நாகரிகம் அற்றவர்கள் என்ற முத்திரை குத்தி அடிமைத்தனத்தை நாகரிகமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.

எங்களுக்கு தேவை காடு குறித்த கல்வி அறிவு, எங்களுக்கு தேவை வாழக்கையை செப்பனிடுவதற்கான கல்வி அறிவு. ஆனால் எங்கள் கல்விமுறையை பூண்டோடு அழிந்து இன்று புதிய மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். 
இன்று மழைபெய்யும், இங்கு விதைமுளைக்கும், இந்த செடி இந்த நோயுக்கு மருந்து, இந்த செடி உணவு, இந்த செடி விசம், இதுதான் கடவுள்நெறி, இதுதான் வாழ்க்கை என்றிருந்த எங்கள் வாழ்க்கைநெறியை முற்றிலும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மருதி, மருதன், வேலன், மத்தி, வள்ளி, விராலி, கூத்தாடி வெள்ளருக்கன், என்று தாவரங்களின் பெயர்களை சூடிமுடித்த எங்கள் குலத்தில் இன்று சோசப், சூசை, பீட்டர், அகமது, அன்வர், அசின் மீனா, நயன்தாரா என்ற பெயர்களின் குழந்தைகள் வளர்கின்றனர். 

நாங்கள் 1947 முதல் சுதந்திரம் பறிபோன அடிமைகளாகியுள்ளோம். எங்கள் இனம் தோன்றியது முதல் 1947 வரை சுதந்திர இனமாக தான் இருந்தது. இன்று எங்களை இந்தியர் ஆட்சிசெய்கிறார்களாம். எங்களுக்கு ராசா இந்தியர்கள் தானாம். நாங்கள் இந்தியர்களின் சட்டதிட்டத்தை மதித்து காடுகளுக்குள் செல்ல கூடாதாம். ரேசன் கடையில் அரிசியை வாங்கி தான் உண்ண வேண்டுமாம். காடுகளில் விவசாயம் செய்யகூடாதாம். விறகு முறித்தாலும் குற்றமாம்.

இயேசு உங்கள் பாவங்களை கழுவி ரட்சிக்க வருகிறார். அல்லா அழைக்கிறார் என்று தினமும் ஒரு குழு வருகிறது. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? இவர்களின் வாகனங்களை எல்லாம் காட்டுக்கள் அனுமதிக்கும் வனத்துறை உணவுபொருட்களை கொண்டு செல்லும் எங்கள் மாட்டுவண்டியை கூட அனுமதிப்பது இல்லை.

எங்கள் கிராமங்களில் நாங்கள் தன்னாட்சி நடத்துவதில் இந்தியர்களுக்கு அப்படி என்ன எதிர்ப்பு? யார் இந்த இந்தியார்கள்? 

இந்தியர்களால் எங்கள் மொழியை காப்பாற்ற முடியுமா? எங்கள் கலையை காப்பாற்ற முடியுமா? எங்கள் கல்வியை காப்பாற்ற முடியுமா? எங்கள் வாழ்க்கை முறையை காப்பாற்ற முடியுமா? எங்கள் மருத்துவத்தை காப்பாற்ற முடியுமா? எங்கள் ஆட்சிநெறிகளை காப்பாற்ற முடியுமா? எங்கள் கடவுள்நெறிகளை காப்பாற்ற முடியுமா? 

ஆதிவாசிகளின் இந்த உணர்ச்சிமிகு வாதத்தில் நியாயம் இருக்கிறது.  இந்த உணர்வு ஏன் தமிழனுக்கு இல்லை? 

தெற்குசூடான் உதயமானதுபோல் தமிழ்ஈழம் மலர வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   

உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்குசூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது.

சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், கருப்பர் இனத்து சிறுவர்  சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக்கொடியுடன் குதித்து கும்மாளம் இடுவதை, ஊடகத்திரைகளில் காணும் போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும் இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.

தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண் டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது.

நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களின் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்த தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப்போர், முழக்கம் செய்யும்போது எந்த சக்தி அந்த தீர்வை தடுத்து விட முடியும்? உலகின் மிகப்பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னோரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியகக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று.

வடக்கு சூடான் பகுதியில் அராபியர்களின் வழித்தோன்றல்களும், நூபியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில் கருப்பர் இன மக்களும், இயற்கை வழிப்பாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறிஸ்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால் 56 முதல் 72 வரை உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.

1989 ல் திடீர் புரட்சியை நடத்திய ராணுவ தளபதி உமல்அல்பசீர், குடியரசு தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்று வரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில் தொடர் ராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே அல்பசீர் அரசால் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.

 பாய்ந்தோடும் நைல் நதியில் அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன்அல்பசீருக்கு 87 சதவீத ஆயுதங்களை சீனாதான் வாரி வழங்கியது. ரஷியா தன் பங்குக்கு 8 சதவீத ஆயுதங்களை தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக.

தெற்கு சூடானில் முதலில் ராணுவத்தில் பணி ஆற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்கராங், சூடான் மக்கள் விடுதலைப்படையின் தலைவர் ஆனார். 2005 ம் ஆண்டு விமான விபத்தில் அவர் மாண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை 2011 ம் ஆண்டு ஜனவரியில் பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று முடிவு செய்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமெரிக்க குடியரசு தலைவர் ஓபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஏதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். திட்டமிட்டவாறு வாக்குப் பதிவை நடத்தாவிடில் சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

தெற்கு சூடானில்தான் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே தங்கள் துணை இல்லாமல் தனிநாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று சூடான் அரசும், அதற்கு துணையாக சில அதிபர்களும் கூறி வந்தது உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது.

சூடான் ராணுவமும், அரசு ஏவிய ஆயுதப் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால் வீடு, வாசல் இழந்து வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும் ஏறத்தாழ இருபது லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு பின்னர் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டது.

உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ந்தேதி முதல் 15 ந்தேதி வரையிலும், ஆறு நாட்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக்கொண்டு இருந்தன.
 

ஆனால் வாக்குப் பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர் தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர். வாக்கு அளிக்கப்பதிவு செய்து கொண்டோர் 39,47,676 பேர். வாக்கு அளித்தவர்கள் 38,41,994 பேர். செல்லுபடியான வாக்குகள் 38,37,406 பேர். தனிநாட்டுக்கு ஆதரவு 37,92,518 பேர். எதிர்ப்பு 44,888.

தெற்கு சூடான், சுதந்திர தேசக்கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம் திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்புர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே உலகத் தலைவர்களுள் பலர் அதை குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை 2012 ம் ஆண்டில் நடத்துவது என தீர்மானித்து உள்ளனர்.

வடக்கு, தெற்கு, மேற்கு டர்புர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்புர் மாநிலம் அமைப்பதா? அல்லது தற்போது உள்ளவாறு மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா? என்பதை அந்த வாக்குப் பதிவு முடிவு செய்யும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம், யாருக்கு சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல்பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2004 ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.

2005 ம் ஆண்டு மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ம் ஆண்டு ஜூலை 14 ம் நாள் அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அல்பீசீரை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் திஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல்பசீரை இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா.மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம்.

சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Jul 9, 2011

தொப்பிதொப்பிக்கு தேசபற்றை சொல்லிக்கொடுங்கள்

பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு.

சென்னை தீவுதிடலில் தில்சன் என்ற சிறுவன் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாப்படுத்தி எழுதியிருக்கிறார். காரணம் இவர் தேசபற்று முற்றியவர் என்பதை நிரூபிக்க தக்கதருணம் அமைந்ததை பயன்படுத்தி இருக்கிறார்.

தொப்பிதொப்பியின் மனிதநேயமற்ற பதிவு : சூப்பர் ஸ்டார் தில்சன் சுட்டுக்கொலை

தேசபற்று என்பது ராணுவம், ஆட்சியாளர்கள், அரசுஅதிகாரிகள் இவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அல்ல. இவர்கள் மட்டுமே தேசமும் அல்ல. நாட்டுமக்கள் தான் ஒரு நாடு என்பதை மனிதநேயம் அற்ற ராசபட்சே போன்ற குரூரர்களுக்கு எப்படி புரியவைப்பது?

இந்திய வரிபணத்தில் பாதிக்குமேல் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. எதற்காக இந்த ராணுவம்? நிலநடுக்கம், பூகம்பம், கடல்சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மக்களை மீட்பதற்காக தான் இந்த ராணுவம் தேவைப்படுகிறது. 

ஆனால் இந்திய ராணுவத்திலோ அணுகுண்டுகள் தயாரிக்க, அபாகரமான ஆயுதங்கள் தயாரிக்க, பீரங்கிகள் வாங்க என ஆயுதக்குவியலுக்காக தான் ராணுவ செலவினங்கள் செய்யப்படுகிறது. பேரிடர் வந்தால் வேகமாக செயல்பட தேவையான ஆயுதங்கள் வாங்க சல்லி பைசா செலவிடுவதில்லை. அதே போல பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.

காசுமீர் எல்லையில், அசாம் எல்லையில், வங்கம் எல்லையில், ஈழம் எல்லையில் இந்திய ராணுவம் செய்வது என்ன என்று தயவு செய்து தொப்பிதொப்பி போன்றவர்களிடம் கேட்டுதெரிந்து விடாதீர்கள். 

காசுமீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து காசுமீர் மக்களிடம் கேளுங்கள், சென்னையில் ஏசி அறையில் உக்கார்ந்துகொண்டு வலைபதிவு எழுதும் தொப்பி தொப்பியிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்.

அசாம் எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தொப்பிதொப்பியை விட அசாம் மக்களுக்கு தானே நன்றாக தெரியும். தமிழக & இலங்கை கடலில் உள்ள இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் மீனர்வர்களை விட அதிகம் தெரிந்தவரா தொப்பி தொப்பி.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் தொப்பிதொப்பியின் தம்பியாக இருந்தால் தொப்பிதொப்பியின் உண்மையான தேசபற்று தெரிந்திருக்கும்.

அதே ஒரு ராணுவ அதிகாரியின் மகளை தொப்பிதொப்பி தெரியமால் இடித்திருந்தால் தன் தேசபற்றுக்கு பாலே ஊற்றியிருப்பார்.

தொப்பி தொப்பி மீண்டும் நினைவூட்டுகிறேன் தேசபற்று என்பது ராணுவத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் வக்காலத்து வாங்குவதல்ல. கடைகுடிமகனின் உணர்வுக்கு கூட மதிப்பளிப்பது தான் உண்மையான தேசபற்று. 

Jul 8, 2011

தொப்பிதொப்பிக்கு தேசபற்றை சொல்லிக்கொடுங்கள்

பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு.

சென்னை தீவுதிடலில் தில்சன் என்ற சிறுவன் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாப்படுத்தி எழுதியிருக்கிறார். காரணம் இவர் தேசபற்று முற்றியவர் என்பதை நிரூபிக்க தக்கதருணம் அமைந்ததை பயன்படுத்தி இருக்கிறார்.

தொப்பிதொப்பியின் மனிதநேயமற்ற பதிவுசூப்பர் ஸ்டார் தில்சன் சுட்டுக்கொலை

தேசபற்று என்பது ராணுவம், ஆட்சியாளர்கள், அரசுஅதிகாரிகள் இவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அல்ல. இவர்கள் மட்டுமே தேசமும் அல்ல. நாட்டுமக்கள் தான் ஒரு நாடு என்பதை மனிதநேயம் அற்ற ராசபட்சே போன்ற குரூரர்களுக்கு எப்படி புரியவைப்பது?

இந்திய வரிபணத்தில் பாதிக்குமேல் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. எதற்காக இந்த ராணுவம்? நிலநடுக்கம், பூகம்பம், கடல்சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மக்களை மீட்பதற்காக தான் இந்த ராணுவம் தேவைப்படுகிறது. 

ஆனால் இந்திய ராணுவத்திலோ அணுகுண்டுகள் தயாரிக்க, அபாகரமான ஆயுதங்கள் தயாரிக்க, பீரங்கிகள் வாங்க என ஆயுதக்குவியலுக்காக தான் ராணுவ செலவினங்கள் செய்யப்படுகிறது. பேரிடர் வந்தால் வேகமாக செயல்பட தேவையான ஆயுதங்கள் வாங்க சல்லி பைசா செலவிடுவதில்லை. அதே போல பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்பட தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.

காசுமீர் எல்லையில், அசாம் எல்லையில், வங்கம் எல்லையில், ஈழம் எல்லையில் இந்திய ராணுவம் செய்வது என்ன என்று தயவு செய்து தொப்பிதொப்பி போன்றவர்களிடம் கேட்டுதெரிந்து விடாதீர்கள். 

காசுமீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து காசுமீர் மக்களிடம் கேளுங்கள், சென்னையில் ஏசி அறையில் உக்கார்ந்துகொண்டு வலைபதிவு எழுதும் தொப்பி தொப்பியிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்.

அசாம் எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் தொப்பிதொப்பியை விட அசாம் மக்களுக்கு தானே நன்றாக தெரியும். தமிழக & இலங்கை கடலில் உள்ள இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் மீனர்வர்களை விட அதிகம் தெரிந்தவரா தொப்பி தொப்பி.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் தில்சன் தொப்பிதொப்பியின் தம்பியாக இருந்தால் தொப்பிதொப்பியின் உண்மையான தேசபற்று தெரிந்திருக்கும்.

அதே ஒரு ராணுவ அதிகாரியின் மகளை தொப்பிதொப்பி தெரியமால் இடித்திருந்தால் தன் தேசபற்றுக்கு பாலே ஊற்றியிருப்பார்.

தொப்பி தொப்பி மீண்டும் நினைவூட்டுகிறேன் தேசபற்று என்பது ராணுவத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் வக்காலத்து வாங்குவதல்ல. கடைகுடிமகனின் உணர்வுக்கு கூட மதிப்பளிப்பது தான் உண்மையான தேசபற்று.  

Popular Posts