Apr 2, 2011

தோல்வி பயம்: வேலூரில் கண்கலங்கிய கருணாநிதி


சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார்.

நான் முதலமைச்சர் தானா? தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தம்பிமார்கள் எவ்வளவு காலம் பொருத்துக்கொள்வார்கள்? கேரளாவில் மகாபலி மன்னன் போல என்னை துரத்த பார்க்கிறார்கள், பூணூல் கும்பல் என்து ஆட்சியை அகற்ற துடிக்கிறது. இப்படி எல்லாம் பேசிக்கொண்டு போன கருணாநிதி இறுதியில் எங்களை தோல்வியடைய செய்தாலும் உங்களை மறக்க மாட்டேன் என்று உருக தொடர்ங்கினார். பேச்சு குழைய சற்று கண்கலங்கி விட்டார். அப்படியே அமைதியாக பேச்சையும் முடித்துக்கொண்டார். 

வழக்கமாக 10 மணிக்கு மேலும் பேச்சை தொடரும் கருணாநிதி சேலம் கூட்டத்தில் 10 நிமிடம் முன்பே பேச்சை முடித்தார். இன்றைய வேலூர் கூட்டத்தில் 45 நிமிடம் முன்னரே பேச்சை முடித்துக்கொண்டார்.

வெளியான நான்கு கருத்துக்கணிப்புக்கே இப்படி தோல்வி பயம் தொற்றிக்கொண்டதே. இன்று வெளியாகும் அடுக்கடுக்கான கருத்துக்கணிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்? அதை எல்லாம் விட மே 13 தோல்வியை எப்படி தாக்கிக்கொள்வார் தாத்தா?

5 comments:

  1. அம்புட்டுதேன் ...தாத்தாவுக்கு டாட்டா இப்படி அழுது ஜெயிக்க பாக்குறாரு நம்பாதீங்க

    ReplyDelete
  2. மீண்டும் தி.மு.க-கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்

    ReplyDelete
  3. நாளைய தமிழகம் உங்களிடம் உள்ளது.
    உழைத்திடுவோம் வெற்றி நமதே..

    ReplyDelete
  4. ADMK sure win.
    DMK never chance to get victory.

    ReplyDelete
  5. AIADMK WILL RULE TAMILNADU AGAIN........

    ReplyDelete

Popular Posts