Oct 3, 2014

பழி தீர்த்த கர்நாடக நீதிபதிகள் ?

செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. 

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம் ஆனால் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பது நியாயம் தான். ஆனால் ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் செயல்படும் போது அதை சுட்டிக்காட்ட ஏன் பயப்பட வேண்டும்?

நீதிபதி குன்கா அப்பட்டமாக பழி தீர்த்திருக்கிறார். இதற்கு குன்கா விளக்கம் அளித்தாக வேண்டும். 

‘‘18 ஆண்டுகள் நீதிமன்றத்தை இழுத்தடித்தாய், அதற்காக நீதிமன்றம் என்றால் என்ன என்பதை காண்பிக்கிறேன்’’ என ‘‘இது தான்டா போலீசு’’ என்ற பானியில் நீதிபதி குன்கா செயல்பட்டிருக்கிறார். குன்காவுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றமும் செயல்படுவது தான் வேதனையாக இருக்கிறது.

நீதிபதி என்பவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் எதிரியாக செயல்படக்கூடாது. நீதிபதி குன்கா செயலலிதாவின் நேருக்கு நேர் எதிரியாக செயல்பட்டுள்ளார்.

செயலலிதாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். குற்றவாளியை விமர்சிக்க எந்த நீதிபதிக்கும் அதிகாரம் இல்லை. செயலலிதாவை விமர்சித்தன் மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியாகி இருக்கிறார் குன்கா.

ஒருவரை குற்றவாளி என நீதிபதி கருதினால் அதற்கான விளக்கத்தை குற்றம் சாட்டப்பட்டவரிடம் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளிக்க அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவகாசம் அளிக்காமல் நேரடியாக தண்டனையை அறிவித்திருக்கிறார். இதன் உள்நோக்கம் என்ன என்பதை குன்கா விளக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை சிறைப்படுத்த போகிறோம். ஒரு தேசிய கட்சியின் தலைவரை சிறைபடுத்தப்போகிறோம் என்ற பகுத்தாயும் திறன் கூட இல்லாமல் ஒரு மரமண்டை போல செயல்பட்டிருக்கிறார் குன்கா.

தமிழக காவல் ஆணையரிடம் தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து கேட்காமல் தான்தோன்றித் தனமாக பழி தீர்த்திருக்கிறார் குன்கா.

குன்காவின் தவறுகளை மூடி மறைக்கும் விதமாக கர்நாடக உயர்நீதிமன்றம் செயல்பட்டிருக்கிறது. முதல் நாள் அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் வாதத்தை கேட்க முடியாது என்று கூறியிருக்கிறது. இது மிக மோசமான அநீதி. 

 சாமீனில் இரண்டு வகை உண்டு.

1. சாட்சிகளை கலைத்துவிடுவார், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பித்து விடுவார். இந்த காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யும் போது நீதிமன்றம் உரிய சாமீனை கோரி அவரை உடனடியாக விடுதலை செய்கிறது.

2. கிழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துவிட்டால் மேற்கொண்டு அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இல்லை. மேல்முறையீடு செய்யாமல் தலைமைறைவாகி விடுவார் என்பதற்காக தான் சாமீன் கோர வேண்டும். செயலலிதாவை பொறுத்தவரை மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கிறார். மட்டுமல்லாது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராகவும் இருப்பவர். இப்படிப்பட்டவர் தலைமறைவாக 100% வாய்ப்பே இல்லை. 

இப்படிப்பட்டவரை உடனடியாக சாமீனில் விடுதலை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தயங்கியதன் காரணம் என்ன? பழிவாக்கும் நடவடிக்கையா என்பதை விளக்க வேண்டும்.

முதல் நாள் அரசு தரப்பு வாதம் இல்லாமல் வழக்கு நடத்த முடியாது என்று கூறிய நீதிபதி, இரண்டாம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் ஏற்றதன் நோக்கம் என்ன? ஏன் செயலலிதா தரப்பு வாதத்தை 1 நிமிடம் கூட கேட்கவில்லை. நீதிபதி யாருக்கு பயந்தார்? தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொன்னதன் காரணம் என்ன? உரிய காரணம் சொல்லாமல் வழக்கை ஒத்திவைக்கும் நீதிபதியின் மனநிலை என்ன?

நீதிபதி என்பவர் நீதிக்கு தலைவணங்குபவராக இருக்க வேண்டும். காரணமே இல்லாமல் இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்வது சரியா? இவருக்கு எல்லாம் நீதிபதி பதவி தேவையா?

நீதிபதி குன்கா மீதான குற்றச்சாட்டுகள் :-

நீதிபதி குன்கா செயலிதாவை ஒரு எதிரியாக சித்தரித்து இருக்கிறார். நீதிமன்றத்தின் அதிகார அத்துமீரலை செயலலிதா மீது செலுத்தி இருக்கிறார். தமிழக காவல் அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததால் தமிழக சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு தூண்டுதலாக இருந்து இருக்கிறார். செயலலிதாவை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து பழி தீர்த்து இருக்கிறார்.

கர்நாடக உயர்நீதினமன்றத்தின் மீதான குற்றச்சாட்டுகள் :- 

விடுமுறை நாளில் தீர்ப்பு அளித்தது தவறு என்ற வாதத்தை முறியடிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் நாடகம் ஆடியுள்ளது. முதல் நாள் அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என்று மனுதாரருக்கு நீதி மறுத்திருக்கிறது. 2ம் நாள் அரசு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. மனுதாரர்கள் மீது கீழ்த்தரமான சர்வாதிகாரத்தனத்தை காட்டியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம் 

எனது பொதுவான சந்தேகம் :-

நீதிபதி குன்கா தமிழ்நாட்டை பழிவாங்கியதன் நோக்கம் என்ன? நீதிபதி குன்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏதேனும் சொந்த பகை உள்ளதா? அப்படி இல்லை என்றால் தமிழக காவல் துறையிடம் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காததன் காரணம் என்ன?

விடுமுறை காலத்தில் குன்கா தீர்ப்பு வழங்கியது தவறு என மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுமுறை என்றாலும் செயலலிதா வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் 2 முறை விசாரித்தது என காண்பிப்பதற்காக நாடகம் ஆடியதன் அவசியம் என்ன? ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்பது தான் விசாரணையா? இந்த வழக்கை விசாரிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நீதிபதி சொல்வது தான் விசாரணையா?

காவிரி பிரச்சனை இருப்பதால் வழக்கை கர்நாடகாவில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செயலலிதா தரப்பு கோரியதன் காரணத்துக்காக தான் கர்நாடக உயர்நீதிமன்றம் இப்படி பழிவாங்கி உள்ளது என்பது எனது ஆழமான சந்தேகம். இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பொது தளத்தில் உரிய விளக்கம் அளிக்க முன்வருமா? அல்லது இன்னும் தனது போலி சர்வாதிகாரத்தை பயன்படுத்துமா?

நீதிபதிகள் சர்வாதிகாரிகள் அல்ல. அதுபோல விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஒரு நீதிபதியை புகழ்ந்து எழுத எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே போல அவரது தவறுகளை சுட்டிக்காட்டவும் உரிமை உள்ளது.

குன்காவின் போலி வீரத்தை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளும் போது, குன்காவின் கீழ்த்தரமான பழிவாங்கும் நடவடிக்கையை சுட்டிக்காட்ட வலைத்தளங்களாவது பயன்படுகிறதே என நினைக்கும் போது சனநாயகத்தின் மீது  நம்பிக்கை துளிர்கிறது.

கர்நாடக நீதிபதி குன்கா, ரத்தினகாலா ஆகியோர் மீது குறைந்தபட்சம் துறைரீதியான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும்.

5 comments:

  1. Very good, super jalra, u think tamils are without brain

    ReplyDelete
  2. romba arivali sir neenga ...poye kozhatha kuttyingala padika vainga ....

    ReplyDelete
  3. இங்கு கர்நாடக நீதிமன்றத்தின் குறிப்பிட்ட நீதிபதிகளை தான் குற்றம் சாட்டி உள்ளேன். கர்நாடக மக்களை அல்ல. எனவே இது கர்நாடக மக்களுக்கு எதிரானதாக கருதக்கூடாது.

    ReplyDelete
  4. Nee sariya loosu mundam ya...

    ReplyDelete
  5. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று படித்ததாக தான் ஞாபகம்

    ReplyDelete

Popular Posts