Oct 24, 2009

தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம். - தங்கபாலுவுக்கு மிரட்டல் வந்ததாம்.

சென்னை: தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு பேக்ஸ் மூலம் மிரட்டல் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தங்கபாலு இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று குண்டுமிரட்டல் வந்தது. எனக்கு வந்த பேக்ஸ் செய்தியில், ‘தமிழ்நாட்டில் தமிழ் ஈழம் அமைப்போம்’ என்று கூறப்பட்டிருந்தது. தமிழகத்தை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள், இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பேக்ஸ் செய்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Posts