‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 6 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
சொற்பம் லண்டன் தமிழர்கள் ராசபட்சேவுக்கு தண்ணிகாட்டினார்கள் என்றால் அந்த நாட்டு அரசாங்கம் அவர்கள் உணர்வை மதித்திருக்கிறது. ஆனால் இங்கோ ?
ஒன்றும் இல்லை, நேற்று கோவையில் இலங்கை எம்.பி விரட்டியடிக்கப்பட்டதே லண்டம் சம்பவம் நடந்ததால் தான். அத இல்லாமல் இருந்திருந்தால் போராட்டகாரர்கள் சிறையி, இலங்கை எம்.பி போலீசு மரியாதையுடன் விழாவிலும் கலந்திருப்பார் என்பது தான் நிதர்சன உண்மை.
இங்கு போராட்டங்கள் ஒடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போராட்டமும் விலையற்றதாக்கப்படுகிறது. முத்துகுமார் போன்ற பலர் உயிரை மாய்த்தாலும் ஒன்றும் சம்பவிப்பதில்லை. காரணம் அரசியல் நாடகங்கள்.
இதை மாற்ற வேண்டும். இந்தியாவில் ஈழத்துக்கான ஆதரவு வந்துவிட்டால் போதும் ஈழம் மலர்ந்துவிடும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே இதை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது விடுதலைபுலிகள் அமைதிகாப்பதும் இந்த காரணங்களுக்காக தான். சென்ற மாவீரர் நாள் அறிக்கையும் அதை தான் வலியுறுத்தி உள்ளது.
தற்போது மீண்டும் ஈழக்குரூரங்களை உலகம் கவனிக்க துவங்கியுள்ளது. இதை நீர்த்துப்போசெய்ய முயற்சிகள் நடக்கலாம். அதைவிட அரசியலாக்கி தேர்தலில் ஆதாயம் தேடும் அவலங்கள் அரங்கேரலாம்.
தயவு செய்து தமிழர்களே அதை அனுமதித்துவிடாதீர்கள்.
வெருக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் வேறு வழி இல்லை, தமிழ் ஈழம் அமைய ஒரே வழி தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் தான்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் மனமாற்றம் தான் மிக முக்கியம். இது அரசியல்வாதிகளின் கையில் சிக்கியுள்ள போலிசனநாயகநாடு.
இங்கு நாம் என்ன செய்தாலும் ஆட்சியாளர்களை தாண்டி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. ஆட்சியாளர்கள் அனுமதித்தால் மட்டுமே நம் போராட்டங்கள் வெற்றிபெறும்.
ஈழம் அமைய நாம் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? ஆட்சியாளர்கள் மனதில் ஈழகொடூரங்களை எப்படி பதியவைப்பது. அவர்கள் கல்நெஞ்சை எப்படி இளக செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
சுதந்திரத்தின் போது மக்கள் எதிர்பார்த்தது மன்னராட்சிக்கு ஒழிந்து மக்களாட்சி மலரட்டும் என்பதை தான். அதற்காக தான் இந்தியா என்ற நாட்டை ஏற்றார்...
-
2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை ...
-
கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்,...
-
இந்தியாவில் படித்தவர்களிடம் ஒரு முட்டாள் தன அலை அவ்வப்போது வீசுவது உண்டு. ஊழலுக்கு எதிராக பணக்கார வர்க்கம் மெழுகுவர்த்தி ஏந்தியது, டெல்லி ...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து. இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியு...

தனிஈழம் அமைவது தமிழக அரசியல் தலைவர்கள் கையில் உள்ளது. /////////////////
ReplyDeleteஇருக்கலாம் ஆனால் நீங்கள் புகைப்படம் போட்டிருக்கும் இருவரால் முடியாது