அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்திவருகின்றது.
தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது.
ராசாவி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு திமுக தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பால் காங்கிரசு நிலைகுலைந்தது. அதனால் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐக்கு காங்கிரசு மறைமுக தடைவிதித்தது.
காங்கிரசின் இந்த செயலுக்கு பிரதமர் தன் மவுன கண்டனத்தை தெரிவித்தார். சி.பி.ஐ கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவதில் குறுக்கிடக்கூடாது என்பதை தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை நேற்று தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த பேச்சில் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்தே கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ புது திட்டம் போட்டுள்ளது.
ராசா வீட்டில் சோதனை நடந்த கையோடு கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் செயலுக்கே திமுக கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மாற்றாக நீராராடியாவின் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், அதன் அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இது ஓரளவு கவுரவம் காக்கும் என திமுக எதிர்பார்க்கிறது. அதற்கு அதிக எதிர்ப்பு இருக்காது என்றும் சி.பி.ஐ நம்புகிறது.
நடக்கட்டும் சி.பி.ஐ சோதனைநாடகங்கள். இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்ப்பதை தவிர இந்திய குடிமகன் வேறு என் செய்ய முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கோவையில் என்னுடன் பணியாற்றும் பெண்நிருபர் ஒருவர் எழுத்துக்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வலைப்பதிவில் எழுதியிருந்த கட்டுரைகளை கொடுத...
-
தேர்தல் களத்தில் எதிரணியின் பலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் யுக்தியை சன்தொலைகாட்சி மூலம் திமுக பெற்றுவருகிறது. நடுநிலை ஊடகம் போல காட்டி...
-
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரசு ஒருநாள் அவகாசம் கேட்டதை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இன்று ராசினாமா செய்வதில்லை என திமுக அறிவித்துள்ளது...
-
வண்டிப்பெரியாறு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு கேட்டு போரடிவரும் போராட்டகுழுவில் உள்ள ஒரு மலையாளியின் குரலை தான் தற்போது க...
-
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கான எளிமையான தீர்வுகளை கோவை பத்திரிக்கையாளர்களுக்கு இன்று விளக்கம் அளித்தோம். கோவை பத்திரிக்கையாளர் மன...
-
ஐயா மனசாட்சியுள்ள தமிழர்களே குறைந்தபட்சம் பேரிடர் மேலாண்மையையாவது செயல்படுத்த சொல்லுங்கள். பசித்தால் பிள்ளையையும் கொன்று தின்ன தயங்கமாட்ட...
-
‘‘ நான் ஊழலை பொறுக்காதவள் ’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா. இந்திய வரலாற்றில் இரண்டு மிக...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
மிகவும் கேவலத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன். சில தமிழக தமிழர்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக போனது தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும் என்பத...
-
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு , சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளா...
No comments:
Post a Comment