இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர்.
கோவை வாளையாரில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தில் ரதீசு பயிணித்துள்ளார். 52 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். கஞ்சிக்கோடு அருகே வந்தபோது பேருந்தை மறித்து ஏறிய 10 பேர் கொண்ட கும்பல் ரதீசை வெட்டி கொலைசெய்துள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பாரதிய சனதா மற்றும் டி.வை.எப்.ஐ அரசியல் கட்சிகளிடையே மோதல் நடந்தது. கொலை செய்யப்பட்ட ரதீசு பாரதிய சனதா கட்சியில் பொருப்பில் உள்ளவர். எனவே இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் பா.ச.க.,வினர் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது.
எப்போதும் வாகன நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (எண் 47) ஒடும் பேருந்தை மறித்து பேருந்தில் உள்ள 50 பேர் முன்னிலையில் ஒருவரை கொலைசெய்ய முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது?
பகையை, கொலை, வன்முறை இவற்றை வளர்க்க தான் அரசியல்கட்சிகள் என்றால் முதலில் மூடுவிழா கொண்டாட வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
பதிவுக்கு தமிழ்மணத்தின் கட்டண சேவை தவறானது என்பது பதிவர்களுக்கு புரியாமல் போனது வேதனையே. தமிழ்மணத்தின் முதல்பக்கம் முழுவதும் கட்டணசேவையில்...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4 இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெ...
-
வலபதிவுகளில் சில பின்னூட்டங்களை படிக்கும்போது தானக நமக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த சிரிப்பை அடக்க சிலமணிதுளிகள் பிடிக்கும். அப்படி இன்று அ...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
No comments:
Post a Comment