இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர்.
கோவை வாளையாரில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தில் ரதீசு பயிணித்துள்ளார். 52 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். கஞ்சிக்கோடு அருகே வந்தபோது பேருந்தை மறித்து ஏறிய 10 பேர் கொண்ட கும்பல் ரதீசை வெட்டி கொலைசெய்துள்ளது. இந்த கொலை வெறி தாக்குதலில் மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பாரதிய சனதா மற்றும் டி.வை.எப்.ஐ அரசியல் கட்சிகளிடையே மோதல் நடந்தது. கொலை செய்யப்பட்ட ரதீசு பாரதிய சனதா கட்சியில் பொருப்பில் உள்ளவர். எனவே இது அரசியல் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலக்காட்டில் பா.ச.க.,வினர் பந்த் அறிவித்துள்ளனர். இதனால் இன்னும் பதட்டம் அதிகரித்துள்ளது.
எப்போதும் வாகன நெரிசல் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (எண் 47) ஒடும் பேருந்தை மறித்து பேருந்தில் உள்ள 50 பேர் முன்னிலையில் ஒருவரை கொலைசெய்ய முடிகிறது என்றால் என்னவென்று சொல்வது?
பகையை, கொலை, வன்முறை இவற்றை வளர்க்க தான் அரசியல்கட்சிகள் என்றால் முதலில் மூடுவிழா கொண்டாட வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
No comments:
Post a Comment