அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி.
தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம்.
இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி.
ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.
இந்த கேவலத்தை எப்படி சமாளிப்பது? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க என்ன செய்வது?
நீண்ட யோசனையின் விளைவாக விடுதலைபுலிகள் நினைவு பொறிதட்டியிருக்கிறது.
பிரதமர், சோனியா, அப்புறம் நம்ம முத்தமிழ் வி.... களை விடுதலைபுலிகள் கொல்ல திட்டம் போட்டுள்ளனர் என்ற அறிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டது. ஊடகங்கள் இந்த நாய்பிசுகெட்டை கவ்விக்கொண்டு சி.பி.ஐ சோதனையை விட்டுவிடுவார்கள் என்பது தான் திமுக தலைமையின் எதிர்பார்ப்பு
ஆனால் ஊடகங்கள் சும்மாவா?
அதையும் கவ்விக்கொண்டது. அப்புறம் இதையும் விடவில்லை. இப்போதும் விடுதலைபுலிகள் ஊடுருவல் என்பதை விட கருணாநிதியின் வீட்டில் சோதனை என்ற பிசுகெட்தான் அதிக சுவையாக உள்ளது என்கிறன ஊடகங்கள்.
பாவம் தாத்தா தான் ஏமாந்துவிட்டார்.
காங்கிரசு சி.பி.ஐயை வைத்து திமுகவை மிரட்டுகிறது. திமுக விடுதலைப்புலிகளை காட்டி காங்கிரசை மிரட்டுகிறது.
இவர்கள் பங்கு பிரச்சனைக்கு சி.பி.ஐயும் விடுதலைப்புலிகளையும் பகடைகாயக்கியது தான் காலத்தின் கொடுமை.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
செயலலிதாவை தீவிரவாதி என்று கருதி பிணை மறுத்திருக்கிறதா கர்நாடக உயர்நீதிமன்றம்? கர்நாடகாவில் செயலலிதாவுக்கு எதிராக சட்ட தீவிரவாதம் கட்டவிழ்...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
என்னத்தை சொல்ல சுயமா எந்திரிக்க முடியாது, சுயமா நடக்க முடியாது, சுயமா செய்யவேண்டிய எதுக்கும் போக முடியாது, ஞபாகம மறதி, அசீரணம், ஆனால் தம...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
திமுக கூட்டணியில் காங்கிரசை கழட்டிவிட்டுவிட்டு சரத்குமார் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. தேமுதிகவுடன் காங்கிரசு கூ...
தள்ளாத வயதில்,போகப் போகும் வயதில் ஆசைகள் அதிகமாகுமாம்!ஒரு கதை என் ஞாபகத்தில் வருகிறது:ஒரு வயதானவர் இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்தாராம்!பிள்ளைகளுக்கு என்ன குறை வைத்தோமென்றே புரியவில்லை!ஒவ்வொரு ஆசைகளாகக் கேட்டார்களாம்!இல்லை,இல்லயென்று தலையை ஆட்டிய கிழவர் கடைசியாகக் கேட்ட கேள்விக்கு ஆம் என்று தலையாட்டினாராம்!மண்,பெண்,பொன்னென்று மூன்றாக ஆசைகளைப் பிரிப்பார்கள்!இந்தக் கிழவருக்கு முதலிரண்டும் ஓக்கே!மூன்றாவது தான் இன்னமும் வேண்டும்!!!
ReplyDelete