இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை காப்பி குடிப்பது முதற்கொண்டு இரவு தூங்கி அடுத்தநாள் விழிக்கும் வரை சுரண்டப்படுகிறேன். 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு அடிமை வம்சம் தமிழனாக தான் இருக்க முடியும்.
இந்தியா என்ற நாட்டுக்கு அடிமையானாலும் பரவாயில்லை என பல்வேறு இன கலாச்சார மக்கள் தலைவணங்கினார்கள். எதற்காக? சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேருவின் சுயநலனுகளுக்காகவா? அம்பேத்கார் என்ற மனிதரின் அரசியல் சாசனத்துக்காக தான்.
ஆனால் இன்று அந்த அரசியல் சாசனம் தான் பின்பற்றப்படுகிறதா? இல்லை அரசியல் கட்சிகளின் சாசனம் பின்பற்றப்படுகிறதா?
இந்தியாவின் முதல் குடிமகன்(சனாதிபதி) எப்படி ஒரு தலையாட்டு பொம்மையாக இருக்கிறாரோ அதே போலதான் அத்தனை குடிமகக்களும் இருக்கிறார்கள்.
நானும் என் அடுத்தடுத்த தலைமுறையும் தொடர்ந்து அடிமைகளாகவே இருக்கவேண்டும் என்பது தான் இந்த இந்தியாவின் இறையாண்மையா?
இதுல எதபத்தி வேணும்னாலும் பேசு என் இந்தியாவை பற்றி பேசினா அழுதுருவேனு ஒரு கூட்டம் வேர.
இந்தியா இந்தியா எனும் அறிவிலிகளே அப்படி என்ன உங்கள் இந்தியாவில் இப்போது உள்ளது. பழம் பெருமையை விட்டு நடப்பு உலகை பேசுங்கள்.
உலகில் ரத்தவெறி கொண்ட நாற்றம் பிடித்த நாடாகதானே இந்தியா இருக்கிறது.
இறையாண்மை என்ற ஒற்றை சொல்லில் அடிமையாக இரு என்றால் அப்படி ஒரு நாடே எனக்கு தேவை இல்லை.
என் உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பாவது இருக்க வேண்டும். அது இல்லாதபோது இந்த நாட்டிற்கு நான் மட்டும் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்.
ஓட்டுபோட மட்டும் தான் மக்கள். மசோத சட்டம் இதெல்லாம் அவர்கள் தலையெழுத்து என்றால் தூக்கி எரியுங்கள் உங்கள் குப்பை இந்தியாவை.
ஒரு பண்டிட் குடும்பத்துக்காக 60 ஆண்டுகளாகியும் நான் இன்னும் வருமைகோட்டுக்கு கீழே தான் இருக்க வேண்டுமா?
குடியேற்ற நாடு காசுமீருக்காக மூன்றில் 2 பங்கு நிதியை செலவு செய்யும் இந்தியா ஏன் சொந்த குடிமக்களின் பசிக்கு சோறுபோட கூட மறுக்கிறது.
இதே நிலை நீடித்தால் தமிழ்நாடும் ஒரு குடியேற்ற நாடு தான் என்ற உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டி இருக்கும்.
புரியாதவர்கள் அம்பேத்கார் எழுதிய அரசியல் சாசனம் 370 பிரிவை படித்து தெளிந்துகொள்ளுங்கள்
சுயராசியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் தேசத்தியாகி. ஆனால் அதே முழுக்கத்தை இன்று நான் பேசினால் தேசதுரோகி. அப்படி என்னட உங்க மண்ணாங்கட்டி இறையாண்மை கொள்கை.
அரசியல் தூய்மை, அதிகார நேர்மை, ஆட்சியில் சமநிலை அப்படி ஒரு இந்தியாவை காட்டுங்கள். நான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்படுகிறேன். அதை விட்டுவிட்டு நாங்க இப்படி தான் ரத்த வெறிபிடித்து அலைவோம். அதற்கு நீ அடிபணிந்தேயாகவேண்டும் என்றால் அதற்கு சாவு மேல்.
இந்தியா என்றால் இறையாண்மை மிக்க நாடு என்றுதானே மதிப்பளித்தோம். ஆனால் இன்று என்ன இறையாண்மை இந்தியாவில் உள்ளது.
இலங்கை போர் குற்றங்களை விசாரிக்ககூடாது, இந்திய போர்குற்றங்களை விசாரிக்ககூடாது, குவோட்ரோசியை விசாரிக்ககூடாது, அலைகற்றை ஊழலில் சனியனின் தங்கைகளை விசாரிக்க கூடாது. ஒரு பண்டிட் குடும்பம் காசுமீரில் நடத்தும் அட்டூழியங்களை விசாரிக்கக்கூடாது. இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பவனை மட்டும் தேசபாதுகாப்பு சட்டத்தில் விசாரிக்க வேண்டும். இதுதான் உங்கள் இறையாண்மை கொள்கையா?
முதலில் இந்த 60 ஆண்டு காலங்களாக நாடாளுமன்றத்தில் முறைகேடாக நிறைவேற்றப்பட்ட அத்தனை மசோதாக்களையும் ரத்து செய்யுங்கள். அத்தனை வெளியுறவு கொள்கைகளையும் அடியோடு நீக்குங்கள். மக்களுக்கு தெரியாமல் இயற்றப்பட்ட அத்தனை அரசியல் சட்டங்களையும் கிழித்து எரியுங்கள். நேர்மையான புதிய சட்டங்களை இயற்றுங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள் அதற்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அது முடியாது என்றால் எனது சுயராசியத்தை அமைக்க எனக்கு உரிமை இருக்கிறது. நான் அமைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஊழல் இந்தியாவை இன்னும் பொத்தி வைத்து பெருமைபட்டுக்கொள்ளுங்கள்.
அடிமை தமிழனே(இந்தியனே) இன்னும் எத்தனை சந்ததிகள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பது உன் கனவு?