Jul 3, 2012

உயிர் தமிழ் மலையாள மக்கள் கூட்டமைப்பு


அரசாங்கங்கள் புறம்திருப்பி நிற்கின்றன!...
அரசியல்கட்சிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதே இல்லை!...
பொதுமக்கள் நாம் ஓரு மேசையின் முன்பு இருந்து 
பேசித்தீர்த்துக்கொள்வது அல்லாமல் வேறு என்ன வழி?...
பொதுமக்கள் தமக்குள் பேச துவங்கும்போது
இயல்பாகவே பிறக்கிறது மக்கள் தீர்வு!

அறிவுக்களஞ்சியமான கோட்டயம் பொது நூலகத்தில்
‘‘உயிர்’’ என்ற அறிமுகத்தில்
தமிழ், மலையாள எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும்
ஒரு பகல் ஒன்று கூடுகிறார்கள்.

இது ஒரு போர் அல்ல!..
அதனால் இங்கு எதிராளிகள் இல்லை!..
கிழக்குக்கு மேற்கு எதிராளி என்று யார் சொன்னது?..
ஆனாலும் நாம் பிரிந்து நின்று சவால் விட்டோம்!..
பரசுபரம் மோதிக்கொள்ள கொம்பு சீவிக்கொண்டோம்!
இரத்ததின் நிறத்தை கூட காண முற்பட்டோம்!
அப்போதும் கூட ஒரு மேசையும்,
அதனை சுற்றிலும் பல நாற்காலிகளும் ஆளில்லாமல் கிடந்தது...

ஒரு வம்சத்தின் வேர்களாய் இருந்தோம் நாம்!...
மொழியிலும், பண்பாட்டிலும், வாழ்க்கையிலும்
பொதுநிலையை பங்கிட்டுக்கொண்டவர்கள்.,
இங்கே வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்போம்.

ஒரு மேசையின் சுற்றும் இருந்து
தமிழ் மலையாள எழுத்தாளர்களும்
சிந்தனையாளர்களும், விவசாயிகளும் பேச துவங்குகிறார்கள்!
எவ்வளவு முயன்றும் தீராத முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு
சுமூகமான தீர்வுகளை அலசுகிறார்கள்!

கேரள மக்களுக்கு உயிர் பயம்!
தமிழக மக்களுக்கு உயிர் ஆதாரம்!
இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு
சுமூக தீர்கவுகளை அலசிப்பார்ப்போம்...

நமது பசுமை கனவுகளுக்கு நிகழ்காலம் கொடுப்போம்!
கேரள மக்கள் பயப்பீதியில் இருந்து மீள நம்பிக்கை தருவோம்!

இந்த சந்திப்பு ஒரு துவக்கம் மட்டுமே...

கருகிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உயிர்கொடுப்பதால்,
இந்த சந்திப்பு ‘உயிர்’ என்று அறியப்படுகிறது!!

எவ்வளவு வாழ்த்தினாலும் தீராத இந்த சந்திப்பு,
வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்!.

முதல் சந்திப்பு

கோட்டயம் பொது நூலகத்தின்
கே.வி.எசு. மேனன் அரங்கம்
2012 சூலை 07 சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
நாம் ஒரு மக்கள் மேடையை கட்டமைப்போம்...

தொடர்புக்கு :
சிவிக்சந்திரன் : 09633751353
சி.பி. ரோய் : 09447200707
சி.ஆனந்த் : 09787678939

2 comments:

  1. பார்த்துக் கொண்டிருக்கிறோம் நல்ல முடிவுக்காக

    ReplyDelete
  2. நல்ல முடிவு கிட்ட வேண்டும். இந்த பிரச்சனையை கையில் எடுத்து இரு மாநிலங்களிலும் சில கைகூலிகள் பிணம் தின்ன உள்ளது.

    ReplyDelete

Popular Posts