May 5, 2012

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு வெற்றி


முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக புதிய சுரங்கம் அமைக்கும் திட்டத்தை வலியுறுத்தி இருந்தோம். இது தொடர்பாக கேரள தமிழக விவசாய மற்றும் போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து அவர்களின் சம்மதத்தையும் வெளியிட்டிருந்தோம். திரு கம்பம் அப்பாசு, மற்றும் சி.பி ரோய் ஆகியோர் முழு மனதுடன் சம்மதித்து பேசிய சி.டியை வெளியிட்டிருந்தோம்.


இரு மாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய சுரங்க கால்வாய் திட்டம் குறித்து நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவிடமும் அறிக்கை கொடுத்திருந்தோம். அதன் பயனாக தற்போது அந்த திட்டத்தை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக 2 திட்டங்களை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. 1. புதிய அணை. 2. புதிய சுரங்க கால்வாய். இதில் இரண்டாம் திட்டமான புதிய சுரங்க கால்வாய் திட்டம் இரு மாநிலத்தவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகவும் அமையும் என்று உயர்மட்ட குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு படிப்படியான வெற்றி கிடைத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

3 comments:

  1. பார்ப்போம் நல்லதாக நடந்தால் மகிழ்ச்சிதான்

    ReplyDelete
  2. நல்லது நடந்தால் சரிதான்

    ReplyDelete
  3. நிச்சயமாக இது இருமாநில மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்ல படியாக அமைய வேண்டும். தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Popular Posts