Jan 23, 2012

சி.சி.எல் கேரளா கலாதிமாறன் ரகசிய உத்தரவு

சி.சி.எல் கிரிக்கெட் முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என கலாதிமாறன் செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சி.சி.எல் எனப்படும் சினிமா நடிகர்கள் பங்குபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய பங்குதாரராக சன்டிவி நெட்வொர்க் தலைவர் கலாதிமாறன் உள்ளார். போட்டிகள் அனைத்தும் சன், சூரியா, உதயா, போன்ற இவரது சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு பிரச்சனை வெடித்தவுடன் என்ன ªச்ய்வது என்று தெரியவில்லை. சென்னை, கேரளா அணிகள் மோதும் போட்டியை சென்னை அல்லது கொச்சியில் நடத்தினால் மட்டுமே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை வேறு வழியில்லாமல் ஆந்திராவில் நடத்தினார்கள். 100 பார்வையாளர்கள் கூட இல்லாததால் ஆட்டம் ஆடும் பெண்கள் கூட சோர்ந்து போனார்கள். 

இந்நிலையில் வரும் 28ம் தேதி கேரள&பெங்கால் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக கேரள நடிகர்கள் அணி சென்னை வர உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சனை பூதகரமாக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் சன் குழுமம் முனைப்புடன் செயல்படுகிறது. இதற்காக தினகரன், சூரியன் எஃப் எம், சன் டிவி உட்பட செய்தியாளர்களுக்கு புது உத்தரவு வந்துள்ளது. சி.சி.எல் போட்டி முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல பாசமலர் நக்கீரனுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை கொதிக்கும் தண்ணீரில் கொல்லப்பட்ட தமிழன் என்று செய்தி வெளியிட்ட நக்கீரன், இப்போது கேரள சென்னை அணிகள் மோதிய படங்களை எக்சுகுளூசீவ் படங்களாக வெளியிட்டுள்ளது.

கேரள நடிகைகள் நடிக்ககூடாது என விரட்டியடித்தனர். மலையாள விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளின் படங்களை போட்டு எச்சரித்தனர். இப்போது அணி அணியாய் நடிகர்கள் கேரள செல்கிறார்கள். இதில் எல்லாம் உங்கள் தமிழ் உணர்வு விதிவிலக்கா? அல்லது தமிழ்பற்று நடிகைகளுக்கு மாட்டும் தானா? நடிகர்களுக்கு இல்லையா? இதில் கூட உங்கள் ஆணாதிக்கம் தானே தெரிகிறது.

கலாநிதிமாறனுக்கும், நக்கீரன் கோபாலுக்கும், தினமலர் மகேசுக்கும் வியாபாரத்துக்காக முல்லைப்பெரியாறு, தமிழ்பற்று இவைகளை ஓதுகிறார்கள். இதை புறிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஈழப்போர் உச்சகட்டத்தின் போது குழந்தைகளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று கெஞ்சியபோது மவுனம் சாதித்த அப்துல்கலாம் இப்போது சாமாதனாம் நிலைநாட்ட இலங்கை சென்றுள்ளார். சத்தியமா சொல்ரேங்க அப்துல்கலாம் இப்ப பணத்துக்காக மட்டும் இலங்கை போகலை தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட சென்றுள்ளார்.

என் பாட்டி பாணியில் வயிர்எரிந்து சொல்கிறேன் ஈழக்குழந்தைகளின் ஆன்மா அப்துல்கலாமை சும்மா விடாது. போலிகளின் முகத்திரை நிச்சயம் ஒருநாள் கிழியும். அன்றாவது அவன் அயோக்கியன் என்பதை இந்த உலகம் நம்பட்டும்.

3 comments:

  1. நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.மிகவும் அருமை.தொடர்க.

    ReplyDelete
  2. நன்றி திரு. எசாலத்தான்.

    ReplyDelete
  3. APJ Nallavaraa kettavaraa ?

    ReplyDelete

Popular Posts