‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். தக்க சமயத்தில் மீண்டும் ஈழப்போரை ஏற்று நடத்துவார் என்பது வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். இவர்களின் ஆணித்தரமான பேச்சு பிரபாகரன் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
சக்கரை நோயால் அவதியுற்று இருந்த பிரபாகரன் மீண்டும் பழைய யுத்வேகத்துடன் களத்தில் இறங்க சில ராசதந்திர நடவடிக்கைகளை கையாண்டாக வேண்டும். உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருவதாக பலரும் நம்புகின்றனர்.
உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து ஆயுதங்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார் ராசபட்சே. போர்நெறிகளை மீறி நச்சுகுண்டுகளை பயன்படுத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட இந்த கொடூரத்தை சர்வதேச சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈழம் இறுதிபோரின் முதல்சுற்று தோழ்விக்கு இதுதான் முக்கிய காரணம்.
அடுத்து ஈழம் அமைய ஒரே வழி இந்தியா(தமிழகம்).
இலங்கை இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்து கொடுக்க இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.
ராசிவ் கொலை என்ற ஒற்றை பேச்சில் ஈழத்தை அழித்து வருகிறது இந்தியா. இந்த பேச்சை மாற்றும் சக்தி தான் ஈழம் இறுதிப்போரின் இரண்டாம் பாகம். இந்த ஆயுதம் தயாராகி விட்டால் மருத்துவ ஓய்வில் இருக்கும் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றி உலகை உரைய வைப்பார்.
காலம் கணிகிறது. காத்திரும்போம் ராசபட்சேவின் நரிவேசம் கலையும் கனத்துக்காக.
இந்தியாவின் மீது வெறுப்பை கொட்டி தீர்க்கும் உலக தமிழர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவூட்டுகிறோம்
‘‘இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.’’
‘‘ ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்தை விட, 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து தான் மிக முக்கியமானது.’’
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி
ReplyDelete