‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது கோத்தபய ராசபட்சேவின் வாக்குமூலம். இந்த வாக்குமூலம் தான் நிதர்சன உண்மையும் கூட.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். தக்க சமயத்தில் மீண்டும் ஈழப்போரை ஏற்று நடத்துவார் என்பது வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களின் வாதம். இவர்களின் ஆணித்தரமான பேச்சு பிரபாகரன் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
சக்கரை நோயால் அவதியுற்று இருந்த பிரபாகரன் மீண்டும் பழைய யுத்வேகத்துடன் களத்தில் இறங்க சில ராசதந்திர நடவடிக்கைகளை கையாண்டாக வேண்டும். உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருவதாக பலரும் நம்புகின்றனர்.
உலகநாடுகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து ஆயுதங்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார் ராசபட்சே. போர்நெறிகளை மீறி நச்சுகுண்டுகளை பயன்படுத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதைவிட இந்த கொடூரத்தை சர்வதேச சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் என்பதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈழம் இறுதிபோரின் முதல்சுற்று தோழ்விக்கு இதுதான் முக்கிய காரணம்.
அடுத்து ஈழம் அமைய ஒரே வழி இந்தியா(தமிழகம்).
இலங்கை இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்து கொடுக்க இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.
ராசிவ் கொலை என்ற ஒற்றை பேச்சில் ஈழத்தை அழித்து வருகிறது இந்தியா. இந்த பேச்சை மாற்றும் சக்தி தான் ஈழம் இறுதிப்போரின் இரண்டாம் பாகம். இந்த ஆயுதம் தயாராகி விட்டால் மருத்துவ ஓய்வில் இருக்கும் பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றி உலகை உரைய வைப்பார்.
காலம் கணிகிறது. காத்திரும்போம் ராசபட்சேவின் நரிவேசம் கலையும் கனத்துக்காக.
இந்தியாவின் மீது வெறுப்பை கொட்டி தீர்க்கும் உலக தமிழர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவூட்டுகிறோம்
‘‘இந்தியா ஒன்றும் ராசீவ் பரம்பரையின் பரம்பரை சொத்து அல்ல.’’
‘‘ ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்தை விட, 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து தான் மிக முக்கியமானது.’’
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
சென்னை: தமிழகத்தில் தமிழ் ஈழம் அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு பேக்ஸ் மூலம் மிரட்டல் வந்ததாக அவர் கூறியுள்ளார். இது கு...
-
திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 140 சுயேட்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சாயபட்டறை பிரச்சனையை அர...
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
தமிழ்மணம் வலைபதிவுகளை இணைக்க கட்டணம் கேட்பதை ஏற்க முடியாது. தமிழ்மணம் நிதிசேகரிப்பது தவறு இல்லை. அதற்கு விளம்பர யுக்தியை கையாளலாம். அதற்கா...
இனி என்ன தான இந்தியா தலையால் நின்றாலும் ஈழத்தமிழர்கள் என்றும் இந்தியா என்ற நாட்டிற்கு துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி
ReplyDelete