Dec 12, 2010

இன்று இரவு ராசா கைது ? : மத்திய அரசு கவிழும் சூழல்



ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 

செய்தி படிக்க இங்கு க்ளிக் ...

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது



இன்று இரவு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்படலாம். அடுத்த கனமே மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பபெற திமுக தயாராகிவருகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் - உளவுதுறை அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுவரும் செய்தியின் அடிப்படையிலேயே அமைகிறது இந்த செய்தி.

இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திடீர் என நேற்று மாலையே முதல்வர் வருகை ரத்துசெய்யப்பட்டது. இதற்கு முதல்வரின் உடல்நிலை சரியில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் மனநிலை தான் காரணம் என்பது இலைமறை செய்தி.

ராசா கைது குறித்து நேற்று காலையே முதல்வருக்கு பிரணாப் முகர்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த கருணாநிதி, ராசா கைது செய்யப்பட்டால் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திமுக திரும்ப பெரும். அதே போல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், திமுகவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் விபரத்தையும் கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

கருணாநிதியின் இந்த அதிரடி காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் என்பதை போட்டு உடைத்துள்ளார் பிரணாப் முகர்சி.

கனிமொழி தற்கொலை செய்துகொள்வதாக சொன்ன நீராராடியாவின் தொலைபேசி பேச்சால் கனிமொழி தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அதையும் மீறி கனிமொழி வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்த திட்டமிட்டிருப்பது தான் திமுக வை உச்ச கோபத்திற்கு கொண்டுபோயுள்ளது.

இந்த பிரச்சனையை தன்மான பிரச்சனையாக கருதி மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவீரமாகியுள்ளார். அதே நேரத்தில் செயலலிதாவின் ஆதரவை நம்பவும் காங்கிரசு தயங்குகிறது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு காங்கிரசு வந்துள்ளதாக தெரிகிறது.

இன்று நள்ளிரவு முதல் மத்திய மாநில அரசியல் சூடு அனல்பறக்கபோகிறது.

Popular Posts