Mar 22, 2012

கேவலமான தமிழ் இனமாகும் தமிழ்நாட்டு தமிழர்கள்


ஐயா மனசாட்சியுள்ள தமிழர்களே குறைந்தபட்சம் பேரிடர் மேலாண்மையையாவது செயல்படுத்த சொல்லுங்கள். 

பசித்தால் பிள்ளையையும் கொன்று தின்ன தயங்கமாட்டான் தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.  அன்று இந்தியன் என்பதற்கு கேவலப்பட்டேன். இன்று தமிழன் என்பதற்கே கேவலப்படுகிறேன். போதுமடா உங்கள் தமிழ்உண்ர்வு.

எனக்கு தெரிந்து உலகில் இவ்வளவு கேவலமான இனத்தை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சிங்களவர் எவ்வளவோ மேல்.

கூடங்குளத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவே போராடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டும் போராட்டக்காரர்கள் தேசதுரோகிகளாக தெரிகிறார்கள். 

கூடங்குளத்தை திறக்க வேண்டும் என்று கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், வடஇந்தியாவில் எங்காவது ஒரு மாநிலத்தில் போராட்டம் நடக்கிறதா? ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அத்தனை ஒரு ஆத்திரம். வாய் கொஞ்சம் நீளமானாலும் நல்ல அடிமைகள் தமிழர்கள் என்பதை 21ம் நூற்றாண்டிலும் நிரூபித்து விட்டீர்கள். 
தினமலர் பத்திரிக்கை எவ்வளவு கொச்சைப் படுத்தியுள்ளது பார்த்தீர்களா? ஏசி அறையில் இருந்துகொண்டு எதை எழுதினாலும் சூத்திர தமிழன் நம்பாமலா இருப்பான். எத்தனை பெரியார் வந்தாலும் என்றுமே நீங்கள் பார்ப்பணர்களுக்கு அடிமைகள் தனடா! 
அணு உலை திறக்கப்படுவதற்கு முன்பு அதை சுற்றியுள்ள 30.கி.மீ பகுதியில் பேரிடர் மேலான்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விதி. அது செயல்படுத்தபடவில்லை. இந்தியாவில் அணு சக்தி மூலம் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. கூடங்குளம் மூலம் தமிழகத்துக்கு அதிகபட்சமாக 150 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே ஆச்சரியம் தான். இத்தனையும் தெரிந்தும் கூடங்குளம் திறக்க வேண்டும் என்றும். அதற்கு எதிரானவர்கள் தேசதுரோகிகள் என்றும் கூறுவது எவ்வளவு கொடூரமானது. கூடங்குளத்தில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே. அவர்களும் மனிதர்கள் தானே.

தினமலர் போன்ற பத்திரிக்கைகள் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழர்களை அடகுவைக்கிறது. அதுதெரியாத இந்த அடிமை தமிழர்கள், ஆமாம் போட்டே தன் சொந்த இனத்தையும் அழிக்க துடிக்கின்றனர்.

ஐயா தமிழர்களே கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். சொற்பம் மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களின் உணர்வை கொல்வதற்கும் தயாரான நீங்கள் நிச்சயம் கொடியவர்களே. 

பசித்தால் உணவை தான் சாப்பிட வேண்டும் மலத்தை அல்ல. வளர்க்கும் ஆடுமாடுகளை தான் அடித்து தின்ன வேண்டும். சொந்த குழந்தையையும் சகோதரரையும் அல்ல. 

தமிழ்நாட்டு தமிழர்களே உங்கள் இதயம் கல் அல்ல என்றால் கூடங்குளம் அணு உலையை திறக்கும் முன்னர் பேரிடர் மேலாண்மையை செயல்படுத்த சொல்லுங்கள். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லுங்கள். 

மின்வெட்டு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவு தெரிவித்தீர்களானால் நீங்கள் மனதநேயம் அற்ற அற்ப இனம் என்பது மட்டும் உண்மை. 

Mar 3, 2012

கூடங்குளத்திற்காக பணம் வாங்கிய தினமலர்


யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். 

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்காக அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது.ஆப்பிரிக்காவில் இருந்து பணம் வாருகிறது. உதயகுமார் பணம் வாங்கியதற்கு இதோ ஆதாரம் கிடைத்து விட்டது. உதயகுமார் இன்று கைது, நாளை கைது, சி.பி.ஐ செக், பீதி, மீதி, சீரியல் என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியது தினமலர். 

உதயகுமார் பணம் வாங்கினார் என நாராயணசாமி சொல்கிறார், பிரதமர் சொல்கிறார், ரசியா சொல்லிவிட்டது. ஆரம்பத்தில் மக்கள் நம்பினார்கள். ஆனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தினமலரின் கூப்பாடு மக்களிடையே வேறுவிதமான சந்தேகத்தை எழுப்பியது.

கூடங்குளம் அணு உலைக்காக உண்மையில் பணம் வாங்கியது யார்? வாசகர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர். இப்போது அவசரஅவசரமாக ஆதாரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தினமலர்.

1988ல் கூடங்குளம் அணுமின்நிலைய அடிக்கல் நாட்டவிழா மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் எந்த பணியும் சட்டபூர்வமாக நேர்மையாக நடக்கவில்லை. முறையாக கட்டுமானம் நடக்கவில்லை. திருட்டுதனமாக மறைந்து மறைத்து கட்டப்பட்ட சட்டவிரோத கூடாரம் தான் கூடங்குளம் அணுமின் நிலையம்.

அன்று மக்கள் போராடத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது தினத்தந்தி, தினகரன், பத்திரிக்கைகள் தான். தமிழகம் கூண்டோடு அழியும் என தலைப்பு செய்தி வெளியிட்டன. இதனால் வெகுன்டெழுந்த மக்கள் இன்று வரை போராடி வருகிறார்கள். இதை நன்கு உணர்ந்த மத்திய அரசு பத்திரிக்கை வாயிலாகவே தமிழர்களை முட்டாள்களாக்க நரித்தந்திரம் தீட்டியது.

கூடங்குளம் திறக்கப்படாமல் இருக்க உதயகுமார், பட்டினி போராட்டம் எல்லாம் ஒரு காரணமே அல்ல. மத்திய அரசு நினைத்தால் இரவோடு இரவாக போராட்ட கூடாரத்தை காலி செய்துவிட முடியும். ஆனால் பிரச்சனை அது அல்ல. 

அணு உலையை திறக்கும் முன்னராக தேசிய பேரிடர் மேலாண்மையை திட்டத்தை சுற்றுவட்ட 30 கி.மீ மக்களுக்கு செயல்படுத்த வேண்டும். இதற்கு முதல்கட்டமாக அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது திடீர் என அணு உலை விபத்து ஏற்பட்டால் ஏற்படும் கதிர்வீச்சுகளில் இருந்து எப்படி உயிர்தப்பிப்பது என்ற தற்காப்பு முறைகளை மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கு அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கையொப்பம் இட்டு ஆவணம் தயார் செய்ய வேண்டும்.

அந்த காலத்தில் மக்களின் வருமையை பயன்படுத்தி கோதுமை மூட்டை தருகிறோம் என்று ஏமாற்றி கையொப்பம் பெற்று விட்டனர். ஆனால் இன்று அது நடக்காது. விபத்து குறித்து விளக்க சென்றால் விளக்கமாத்து (சீமாறு) அடி தான் விழும். இது மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. இதற்காக தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பயன்படுத்த முடிவு செய்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

கூடங்குளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மையை செயல்படுத்தாமல் இருக்கவும், மக்கள் எண்ணங்களை திசை திருப்பவும் தினமலர் பணம் வாங்கி உள்ளது, இதற்காக மத்திய அரசிடம் தினமலர் பேரம் பேசி முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளது. 

தினமலரில் தினமும் 2 முழு பக்கத்தில் கூடங்குளத்தில் அணு உலை திறப்பதற்கான ஆதரவு செய்தியை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் கோவை, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தொழில்துறையிரை தூண்டி விட்டு போராட்டம் நடத்துவதாகவும் உறுதிகொடுத்துள்ளனர். 

கோவை, புதுச்சேரி பகுதிகளில் தினமலரே பல அமைப்புகளை போராட்டம் நடத்த தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் லெட்டர் பேடு கட்சிகள், அமைப்புகள் என்று செய்தி வெளியிட்டது தினமலர். இன்று அதே அமைப்புகளை அழைத்து போராட்டம் நடத்துங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடுகிறோம். காவல்துறை அனுமதி வாங்கித்தருகிறோம் என்றுள்ளனர். 

கோவையில் மற்ற பத்திரிக்கைளில் வெளிவராது தினமலரில் மட்டும் தினமும் முன்று போராட்ட செய்திகள் வருகிறது. செய்தி வெளியான பத்திரிக்கைகளை உடனுக்கு உடன் டெல்லிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அலுவகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மின்வெட்டு, வெளிநாட்டு சதி என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் அணுஉலைக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்துவது. 

உதயகுமார் மீது அவதூறு, தேசியபாதுகாப்பு என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட மக்கள் மீது தமிழர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவது. 

- இந்த இரண்டு பணிகளை கனகச்சிதமாக செய்து முடித்துள்ளது தினமலர்.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமலே அணுஉலையை திறக்கும் சூத்தரத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்போகிறது மத்திய அரசு.

சங்கரன்கோவில் இடைதேர்தல் முடிந்ததும் அணுஉலை திறக்கப்பட உள்ளது. தங்கள் முழு சக்தியையும் திரட்டி போராடும் மக்களை ஒடுக்க எந்த எல்லைக்கும் தாயராக உள்ளது ராணுவம். செத்துமடியும் மக்கள் தேசதுரோகிகளாவும், பணம்வாங்கிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதும் தினமலர் தேசிய நாளிதழாகவும் பட்டம் சூட்டப்போகிறது.

இறுதியாக தமிழர்களே உங்கள் மனசாட்சியிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்
தற்போதைய மின்வெட்டுக்கு கூடங்குளம் திறக்கப்படாதது தான் காரணமா?

Popular Posts