Mar 22, 2012

கேவலமான தமிழ் இனமாகும் தமிழ்நாட்டு தமிழர்கள்


ஐயா மனசாட்சியுள்ள தமிழர்களே குறைந்தபட்சம் பேரிடர் மேலாண்மையையாவது செயல்படுத்த சொல்லுங்கள். 

பசித்தால் பிள்ளையையும் கொன்று தின்ன தயங்கமாட்டான் தமிழன் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.  அன்று இந்தியன் என்பதற்கு கேவலப்பட்டேன். இன்று தமிழன் என்பதற்கே கேவலப்படுகிறேன். போதுமடா உங்கள் தமிழ்உண்ர்வு.

எனக்கு தெரிந்து உலகில் இவ்வளவு கேவலமான இனத்தை பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்களுக்கு சிங்களவர் எவ்வளவோ மேல்.

கூடங்குளத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவே போராடுகிறது. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டும் போராட்டக்காரர்கள் தேசதுரோகிகளாக தெரிகிறார்கள். 

கூடங்குளத்தை திறக்க வேண்டும் என்று கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில், வடஇந்தியாவில் எங்காவது ஒரு மாநிலத்தில் போராட்டம் நடக்கிறதா? ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அத்தனை ஒரு ஆத்திரம். வாய் கொஞ்சம் நீளமானாலும் நல்ல அடிமைகள் தமிழர்கள் என்பதை 21ம் நூற்றாண்டிலும் நிரூபித்து விட்டீர்கள். 
தினமலர் பத்திரிக்கை எவ்வளவு கொச்சைப் படுத்தியுள்ளது பார்த்தீர்களா? ஏசி அறையில் இருந்துகொண்டு எதை எழுதினாலும் சூத்திர தமிழன் நம்பாமலா இருப்பான். எத்தனை பெரியார் வந்தாலும் என்றுமே நீங்கள் பார்ப்பணர்களுக்கு அடிமைகள் தனடா! 
அணு உலை திறக்கப்படுவதற்கு முன்பு அதை சுற்றியுள்ள 30.கி.மீ பகுதியில் பேரிடர் மேலான்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விதி. அது செயல்படுத்தபடவில்லை. இந்தியாவில் அணு சக்தி மூலம் 3% மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. கூடங்குளம் மூலம் தமிழகத்துக்கு அதிகபட்சமாக 150 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதே ஆச்சரியம் தான். இத்தனையும் தெரிந்தும் கூடங்குளம் திறக்க வேண்டும் என்றும். அதற்கு எதிரானவர்கள் தேசதுரோகிகள் என்றும் கூறுவது எவ்வளவு கொடூரமானது. கூடங்குளத்தில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே. அவர்களும் மனிதர்கள் தானே.

தினமலர் போன்ற பத்திரிக்கைகள் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழர்களை அடகுவைக்கிறது. அதுதெரியாத இந்த அடிமை தமிழர்கள், ஆமாம் போட்டே தன் சொந்த இனத்தையும் அழிக்க துடிக்கின்றனர்.

ஐயா தமிழர்களே கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். சொற்பம் மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களின் உணர்வை கொல்வதற்கும் தயாரான நீங்கள் நிச்சயம் கொடியவர்களே. 

பசித்தால் உணவை தான் சாப்பிட வேண்டும் மலத்தை அல்ல. வளர்க்கும் ஆடுமாடுகளை தான் அடித்து தின்ன வேண்டும். சொந்த குழந்தையையும் சகோதரரையும் அல்ல. 

தமிழ்நாட்டு தமிழர்களே உங்கள் இதயம் கல் அல்ல என்றால் கூடங்குளம் அணு உலையை திறக்கும் முன்னர் பேரிடர் மேலாண்மையை செயல்படுத்த சொல்லுங்கள். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லுங்கள். 

மின்வெட்டு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவு தெரிவித்தீர்களானால் நீங்கள் மனதநேயம் அற்ற அற்ப இனம் என்பது மட்டும் உண்மை. 

3 comments:

Popular Posts