அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.
கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது.
ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.
50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.
திமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.
திமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.
தேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.
மொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.
ஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.
இப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.
தற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.
அந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.
கனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா? அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்ச...
-
பதிவர் திரு. தொப்பிதொப்பி அவர்களின் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற பதிவுக்கு செலுத்தும் தலைவணக்கம் தான் இந்த பதிவு: வலைபதிவர்கள் ...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் செய்தி படிக்க இங்கு க்ளிக் .. . அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது இன்று இரவு முன்னாள் மத்திய தொலை த...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. ...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
லஞ்சம் வாங்கக்கூடாது, இயன்றவரை தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்திவிடவேண்டும் என்ற கொள்கை உடையவர் ...