Sep 30, 2014

செயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்

தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார். 

2. செயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை  கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.   

ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் செயலலிதா செய்த படிப்படியான தவறுகள்:

1. நீதிபதியிடம் தான் தற்போது தமிழக முதல் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பதவியை ராசினாமா செய்து விட்டு இந்த நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று கூறியிருக்க வேண்டும். 

2. தீர்ப்பின் நகலை பெற்றுக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பி கவர்னரிடம் ராசினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேல்முறையீட்டு வழிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

3. செயலலிதா தமிழக முதல் அமைச்சராகவும், கூடவே இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார். எனவே கீழமை நீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக செயலலிதாவை கைது செய்திருக்க முடியாது.

 அதிமுக வழக்கறிஞர்கள் பதட்டத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

4. தீர்ப்பை எதிர்ப்பது, 100 கோடி அபராதத்தை எதிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு!. நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார் என்ற சட்டப்பிரச்சனையை தான் அதிமுக வழக்கறிஞர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது சாமீனுக்காக அலைவது மிக முட்டாள் தனமான நடவடிக்கை!

5. தமிழக முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கலாம். இதனால் கவர்னர், மாநில காவல் ஆணையர், தலைமை செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பார்கள். (செயலலிதா கைது செய்யப்பட்ட விடயம் அடுத்த நாள் தான் கவர்னருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்)

இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக செயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். எனவே மேலே சொல்லபடும் காரணங்கள் எல்லாம் குழந்தை தனமானது எனலாம்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் செயலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் என்பது சரிதான். ஆனால் அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. முறையாக கவர்னர் தான் இதை அறிவிக்க வேண்டும். அல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி அல்ல. தன்னிச்சையாக பதவிஇழக்க முதலமைச்சர் பதவி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அதற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை கர்நாடக நீதினமன்றம் காலில்போட்டு மிதித்துள்ளது. இதை தமிழகம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தான் கேவலமாக உள்ளது.

முதலமைச்சர் பதவியை கீழமை நீதிமன்ற நீதிபதி பறிக்க முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தமிழக அரசுக்கு நிகழ்ந்த இதே நிலையை இந்திய அரசுக்கு நிகழ்வதாக ஒப்பிட்டு பாருங்கள். பிரதமரை பதவிநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? சனாதிபதிக்கா? அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதிக்கா?

 மெத்த படித்த கனவான்களே இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேவலப்படுத்தாதீர்கள். உலகம் உங்களை பார்த்து உரக்க சிரிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் செயலலிதாவுக்கு எதற்கு சிறையில் சொகுசு அறை? இதிலிருந்தே தெரியவில்லையா சட்டம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது என்று!

கர்நாடக வழக்கறிஞருக்கு முறையாக ஆணை கிடைக்கவில்லையாம் அதனால் செயலலிதா சாமீன் வழக்கில் வாதாட முடியாது என்கிறார். அதை அனைவரும் சரி என ஒப்புக்கொள்கிறோம். அதே போல  முறையாக கவர்னருக்கு அறிவித்து விட்டு தானே செயலிதாவை கைது செய்திருக்க வேண்டும். அதை ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? 

தூக்கு தண்டனை விதித்தவுடன் நீதிபதியே எமனை போல தூக்கு கயிறை வீசி குற்றவாளியை அங்கேயே கொல்வது போல உள்ளது நீதிபதி குன்காவின் செயல். நல்லவேளை நீதிபதி குன்கா செயலிதாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கவில்லை. அப்படி விதித்திருந்தால் உடனே தன் முன் இருக்கும் சுத்தியலை எடுத்து வீசி கொன்றிருப்பாரோ என்னவோ?  

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக முதலமைச்சர் என்ற மாண்புமிகு பதவியை கேவலப்படுத்தாதீர்கள். 

ஒரு நிறுவனத்தில் எடுபடி வேலை செய்யும் நபரை பணிநீக்கம் செய்யவே விதிமுறைகள் இருக்கிறது. அதைவிட கேவலமானதா முதல் அமைச்சர் பதவி? கொஞ்சமாவது அறிவுபூர்வமாக யோசியுங்கள்!

26 comments:

  1. Brilliant Article................

    ReplyDelete
    Replies
    1. அதென்ன முதல் அமைச்சர் என்ற பதவிக்கு தனியான மரியாதை வேண்டிக்கிடக்கு. சுருக்கமாகச் சொல்லப் போனால் முதல் அமைச்சர் என்பவர் மக்களின் முதன்மைக்கூலி. ஆனால் தற்பொழுது எல்லாமே மாறி விட்ட காரணத்தால் இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம். யோக்கியமான மனுஷியாக இருந்தால் தன் மேல் குற்றச்சாட்டு வந்த போது பதவியை விட்டு விலகி அல்லவா இந்த வழக்கை சந்தித்தி இருக்க வேண்டும்.

      Delete
    2. sottathalayan appadi seaithana da

      Delete
  2. A good view point and this presence of mind will come to free people who are not slaves. One should keep free thinking people also around to be of help in such testing times.

    ReplyDelete
  3. Excellent analysis! But, not for a good reason.

    How we can reduce corruption, if you people try to support corrupted poeple.
    As a common man, we should pray to get like this judgment all corrupted people.

    Do you people have enough ability to advice her to avoid further corruptions? If yes, please do that.

    ReplyDelete
  4. நீங்களா? இப்படி எழுதியிருக்கீங்க?

    ReplyDelete
  5. இதை படிக்கும் போது இது ஒரு சத்தான விஷயமாகத் தோன்றும். ஆனால் நிலை அவ்வாறு இல்லை. இந்த விஷயம் கைது விவகாரத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். சிறையிலடப்படுவதற்குப் பொருந்தாது.

    கைது நடவடிக்கை என்பது வேறு, தண்டனை மூலம் சிறையிடப்படுதல் என்பது வேறு. அரசியல் சாசன சட்டம் தவிர பிற கிரிமினினல் மற்றும் கிரிமினல் சம்மந்தமான விஷயங்களை முதலில் கீழமை நீதி மன்றம்தான் விசாரிக்கும். அதில் தரப்படும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாமே தவிர, கீழமை நீதி மன்றம் தண்டனையே தரக்கூடாது என்றோ, அதை அமுல் படுத்தும் அதிகாரம் இல்லை என்பதோ தவறு.

    ஜெயலலிதா(ஒரு மாநில முதல்வர்) தான் எங்கு செல்லும் போதும் கவர்னரிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவரை சிறையில் அடைத்த பின்னர் அது கவர்னருக்குத் தெரியவில்லை என்று,அவர் ஒருநாள் முழுக்க காணாமல் போய் விட்டார் என்று கவர்னர் கருத இடம் இல்லை.

    இது தன்னிச்சையாக பதவி இழப்பு இல்லை. சட்டத்தினால் உண்டான, இந்திய தலைமை நீதிமன்றத் தீர்ப்பினாலும் உண்டானது. பின்பற்றப் பட்ட நடைமுறையில் தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    One should understand the difference between 'the arrest' and 'the imprisonment'. This is not an arrest to follow the procedures as stated in the above article.

    ReplyDelete
    Replies
    1. Clear explanation between arrest and imprisonment.

      Delete
  6. first of all now she is not CM, so avoid using word CM. Now she ex CM

    ReplyDelete
  7. திரு. பெயரிலி

    செயலலிதாவுக்கு தண்டனை கொடுத்ததை பற்றி இங்கு குறை சொல்லவில்லை. தமிழக முதல் அமைச்சரை கைது செய்த முறையை பற்றி தான் குற்றம்சாட்டுகிறேன். செயலலிதா பிரதமராக இருந்திருந்தால் நீதிபதி குன்கா இப்படித்தான் நடந்திருப்பாரா? அதை சட்டம் ஏற்றுக்கொள்ளுமா?

    செயலலிதா மீது இன்னும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை. உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்னர் தான் அவரை குற்றவாளி என்று சொல்ல முடியும். கீழமை நீதிமன்றம் குற்றவாளி என்று கருதி இருக்கிறது. அதை உறுதி செய்து குற்றவாளி என அறிவிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத் தான் உள்ளது.
    அதுவரை செயலிதா குற்றம் சாட்டப்பட்டவர் தான்.

    முதல் அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி ஏற்கா விட்டால், இன்று வரை தமிழக முதல் அமைச்சர் காணவில்லை, அல்லது கர்நாடக நீதிமன்றத்தால் கடத்தப்பட்டார் என்பது தான் வழக்காக இருந்திருக்கும். வழக்கு அரசியல் அமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கும். கவர்னர், குடியரசு தலைவர், உள்துறை ஆகியவை விளக்கம் அளித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

    கர்நாடக நீதிமன்றம் தன் இலட்சுமண ரேகையை மீறி இருக்கிறது.

    ReplyDelete
  8. தேவியர் இல்லத்தின் வருகைக்கு மகிழ்ச்சி

    செயலலிதா என்ற தனிமனிதருக்காக எழுதவில்லை. தமிழக முதல் அமைச்சருக்கு ஏற்பட்ட அவமரியாதைக்காக எழுதப்படுகிறது. நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட எழுதப்படுகிறது.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன முதல் அமைச்சர் என்ற பதவிக்கு தனியான மரியாதை வேண்டிக்கிடக்கு. சுருக்கமாகச் சொல்லப் போனால் முதல் அமைச்சர் என்பவர் மக்களின் முதன்மைக்கூலி. ஆனால் தற்பொழுது எல்லாமே மாறி விட்ட காரணத்தால் இந்த அளவுக்கு ஆர்ப்பாட்டம். யோக்கியமான மனுஷியாக இருந்தால் தன் மேல் குற்றச்சாட்டு வந்த போது பதவியை விட்டு விலகி அல்லவா இந்த வழக்கை சந்தித்தி இருக்க வேண்டும்.

      நீங்களும் பத்திரிக்கையாளர் என்பதால் உங்கள் வட்டாரத்தில் தெரியாத உள் ரகசியமே இருக்காது அல்லவா? இது வெறுமனே 66 லட்சம் விசயமல்ல. நான் கேள்விப்பட்ட வரைக்கும் பெங்களூர் நண்பர்கள் சொன்னதை வைத்து கணக்கிட்டு இந்த தொகையைப் போல நீதியை வழிக்கு கொண்டு வர விலைக்கு வாங்க. பத்து அல்லது இருபது மடங்கு தொகை செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தீர்களா?

      மானங்கெட்ட பிழைப்பு.

      Delete
    2. திரு தேவியர் இல்லம்

      உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளர் இப்படி கேட்பது வியப்பாக உள்ளது.

      முதல் அமைச்சர் பதவியை மாண்புமிகு என்று தான் அரசியல் சாசனம் சொல்கிறது. பிரதமர் பதவிக்கும் முதல் அமைச்சர் பதவிக்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பிரதமரும் ஒரு அரசாங்கத்தின் முதல்வர். முதல் அமைச்சரும் ஒரு அரசாங்கத்தின் முதல்வர். இதில் என்ன வேறுபாடு இருக்கிறது? இரண்டுமே அரசாங்கங்கள் தானே!

      செயலலிதா செய்த தவறுகளுக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை. செயலலிதா செய்தது தவறு என்பதை உச்சநீதிமன்றம் தான் உறுதி செய்ய வேண்டும். நீதியை விலைக்கு வாங்க பணம் கைமாறப்பட்டது என்றால் அதில் நீதிமன்றம் தான் முதல் குற்றவாளி.

      ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் உடனே அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அது அரசியல் பழிவாங்கும் குற்றச்சாட்டாக கூட இருக்கலாம். செயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதை நான் குறை சொல்லவில்லை. அவரை கைது செய்து சிறையில் அடைத்த முறையை தான் குறை சொல்கிறேன். ஒரு மாநில முதல் அமைச்சரை கவர்னர் தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

      நன்றி.

      Delete
  9. Very good and Excellent advise....

    ReplyDelete
  10. முதலாவதாக அம்மா அவர்கள் தீர்ப்பு வரும் நாளில் பதவியை ராஜினாமா செய்து விட்டு நீதி மன்றம் சென்றிருக்கலாம். ...

    அடுத்த படியாக தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே பதவியை இழந்து விட்டார் அம்மா, பிறகு சாதாரண மனிதனாக விட்ட அவரை கைது செய்ய தடை செய்ய முடியாது.
    100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட பிறகு
    பல்லாயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்
    செய்யப்பட்ட அசாதாரண வழக்கு இது. .

    அவதூறு வழக்கில் சாதனை செய்து வருபவருக்கு தெரியாத விஷயமா இது. ..?!

    ReplyDelete
    Replies
    1. திரு. பெயரிலி

      தன்னை ஒரு நிரபராதியாக வாதிடும் செயலலிதா எதற்காக முன்கூட்டியே தனது பதவியை ராசினாமா செய்ய வேண்டும்?

      குற்றவாளி என கருதிய கர்நாடகா நீதிமன்றம் தான் செயலலிதாவை ராசினாமா செய்து வர அறிவுறுத்தி அனுப்பி இருக்க வேண்டும்.

      செயலலிதா மீதான 12 வழக்குகளில் சென்னை நீதிமன்றங்கள் இந்த மாண்பை தான் கடைபிடித்தன. இத்தகு உயரிய பண்பு இல்லாமல் கர்நாடக நீதிமன்றம் கீழ்த்தரமாக நடந்துகொண்டது.

      Delete
    2. தன்னை நிரபராதியாக கருதும் ஜெயலைலிதா அவர்கள் ஏன் 18 வருடம் வழக்கை இழுக்க வேண்டும்?

      Delete
  11. கீழ் நீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பலர் அப்பீல் செய்யாமல், அல்லது வசதி காரணமாகவே. ., விரும்பியோ தண்டனை யை ஏற்றுக் கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் களே! அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தானா? குற்ற வா ளிக‌ள் இல்லை யா? பிறகு கீழ் நீதிமன்றம் எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. திரு. மகேசு

      ஒருவர் விரும்பியோ, வசதி இன்மையாலோ தன்னை குற்றவாளி என ஒப்புக்கொண்டால் சட்டப்படி அவர் குற்றவாளி தான். தான் நிரபராதி என்பவரை வலுக்கட்டாயமாக குற்றவாளி என்று சொல்ல கீழ்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

      வழக்குகளை விரைவாகவும் எளிமையாகவும் விசாரிப்பதற்காக தான் கீழமை நீதிமன்றங்கள் உள்ளன.

      Delete
    2. இந்திய திருநாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கற்பழித்து கொல்கிறார்கள் .அவனை தூக்கில் போட சட்டம் சொன்னால் அதை எதிர்க்கிறார்கள்.பச்சிளம் குழந்தைகளை கருணையே இல்லாமல் பிறந்தவுடன் தூக்கி எறிந்துவிடுகிறார்கள் அதை தடுக்கவோ விழிப்புணர்வு ஏற்படுத்தவோ இங்கு ஆளில்லை.டாஸ்மாக் என்ற ஒன்றின் மூலம் நாட்டை குடிகார நாடாக மாற்றி பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் அளவுக்கு வந்தும் கூட அதை தடுக்கவோ நிறுத்தவோ செய்யும் அளவுக்கு இங்கு யாரும் முயல்வதில்லை.இலவசங்கள் கொடுத்து மக்களை மறைமுக பிச்சைக்காரர்களாக மாற்றும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட யாரும் இல்லை.தொண்டன் எனப்படும் அந்த அப்பாவியை தனக்கு கிடைத்த சம்பளமில்லாத அடிமை என நினைத்து அவனை அவனின் கடைசி காலம் சுயமாக சிந்திக்க விடாமல் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளை இனம்காண இங்கு யாரும் இல்லை.முதல்வர் மற்றும் பிரதமர்,ஜனாதிபதி போன்ற பதவிகள் நாட்டின் மிக உயர்ந்த கௌரவமான பதவிகள். அந்த நாற்காலிகளில் அப்பழுக்கில்லாத உயரிய தலைவர்கள் எல்லாம் அமர்ந்த பெருமை மிகு நாடு நம் நாடு.அதில் ஊழல் செய்பவனும் , பொய்வேஷம் புனைந்தவனும் , குற்றவாளிகளாக இருப்பவனும் ,அப்பாவி மக்கள் பணத்தை சுருட்டி தான் சுகபோக வாழ்வு வாழ்பவனும் மட்டுமே அதில் அமர்கின்றான்.எல்லையில் நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல தண்ணீர் இல்லாமல் உறக்கம் இல்லாமல் நாட்டை காக்க தன உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.தான் கற்ற கல்வி மூலம் விண்வெளிக்கு ராக்கெட் விட்டு அதில் வெற்றி பெற வேண்டுமே இந்திய திரு நாட்டை உலகநாடுகளின் மத்தியில் தலைநிமிர செய்ய வேண்டுமே என்று ஒவ்வொரு வினாடியும் போராடும் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் சாதனைகளும் தியாகங்களும் நம் கண்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். சச்சின் சதம் அடித்தார் என்பதற்காக நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருதை அவருக்கு கொடுத்து அந்த விருதை மிகவும் கேவலப்படுத்திய நாடுதானே இது. தான் சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ அப்பாவி மக்களை பலிகடா ஆக்கும் ஒருவரை தலைவன் என்று கொண்டாடும் நாடு தானே இது. அப்படிப்பட்ட நாட்டில் தவறு செய்தவனை தண்டித்தால் அது குற்றமே. எப்படியோ எந்த நாட்டினரும் இந்தியாவை துண்டாடலாம் பணம் மட்டும் கொடுத்தால் போதும். வாழ்க பாரதம்.

      Delete
    3. இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் பலரும் நான் ஊழலுக்கு ஆதரவாக எழுதியிருப்பதாகவும், குற்றத்தை ஆதரித்து தண்டனையை எதிரிப்பதாகவும் கருதுகிறார்கள். நீதிமன்றங்களின் அத்துமீறலை சுட்டிக்காண்பிப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

      நீதிமன்றங்களே அநீதி இழைக்கும் போது சாமான்ய மனிதர்கள் தவறு செய்யாமல் இருப்பார்களா என்பது தான் என் கேள்வி. இந்த கேள்விக்கு ஏன் யாரும் பதில் சொல்ல முன்வருவதில்லை? நீதிபதிகளை கேள்வி கேட்க பயப்படும் மக்கள் அரசியல்வாதிகளை மட்டும் விமர்சிக்க தகுதி உடையவர்களா?

      மீண்டும் சொல்கிறேன் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக சனநாயகத்தை கேவலப்படுத்தாதீர்கள்.

      நீதிபதிகள் சர்வாதிகாரிகள் அல்ல என்பது தான் எனது வாதம்.

      Delete
  12. very true... there is no difference between this judge and the rulers

    ReplyDelete
  13. இப்படியான முட்டாள்த்தனமான கட்டுரை எழுதுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. சொல்லப்பட்ட 3 வழிகள் கொக்கைப் பிடிக்க அதன் கண்ணில் வெண்ணெய் வைத்துப் பிடிக்க வேண்டும் என்றவன் கதையாக இருக்கிறது. கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிமன்றம். அதன் தீர்ப்பை உயர் நீதிமன்றம் அதற்கு மேலே உச்ச நீதிமன்றம் மட்டுமே மாற்றி அமைக்க முடியும். சட்டத்தின் முன் எல்லோரும் - அரசன் ஆண்டி- சமன் என்பது நீதித்துறையின் கோட்பாடு. இதே சட்டத்தின் கீழ் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டு பதவி இழந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்துள்ளார்கள். ஆனால் ஒரு மாநில முதல்வர் ஊழல் வழக்கில் பதவி இழந்தது இதுவே முதல் தடவை. ஊழலுக்குத் துணை போகிறவர்களே ஜெயலலிதாவுக்குக் குடை பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்களே ஊழல் பேர்வளிகளாக இருக்க வேண்டும். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி சொத்துக்களை வாங்கியிருக்கிறார். அப்படியில்லை யாராவது சொல்ல முடியுமா? நீதிபதி டி குன்ஹா சாட்சியத்தின் அடிப்படையி்லேயே தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ஜெயலலிதா நிரபராதி என்றால் 18 ஆண்டுகள் இந்த வழக்கை இழுத்தடித்தது ஏன் என்று சொல்ல முடியுமா? இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. திரு வேலுப்பிள்ளைத் தங்கவேலு

      நீதிமன்றத்தின் அத்துமீறலை சுட்டிக்காட்டினால் உடனே ஊழலுக்கு ஆதரவாக எழுதியதாக குறிப்பிடுகிறீர்கள். ஊழலை எதிர்கும் அதே தைரியம் ஏன் நீதிமன்றத்தின் அத்துமீரலை எதிர்க்க வருவதில்லை?

      நீங்கள் எல்லாம் அடிமைகளாக பிறந்தவர்கள், அப்படித்தான் சிந்திப்பீர்கள். உங்கள் பிள்ளைகளாவது மாற்றி யோசிக்கட்டும்...

      நன்றி.

      Delete
  14. Fantastic.... I support for it.. She will come back... Hope for the best. Malaysian Indian

    ReplyDelete

Popular Posts