Showing posts with label ராசா. Show all posts
Showing posts with label ராசா. Show all posts

Dec 16, 2010

குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம் - கனிமொழி பேட்டி

அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். 

இது குறித்து கனிமொழி கூறியதாவது :  அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ., தனது பணியை செய்கிறது. இதற்கு நாங்கள் எதிராக இருக்க மாட்டோம். இந்த விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம். இந்த சோதனை மூலம் நாங்கள் திறந்த மனதாக இருக்கிறோம் என்பது புலப்படுகிறது.  சி.பி.ஐ சோதனை காரணமாக எங்கள் கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்றுள்ளார்.

கனிமொழி வீட்டில் இன்னமும் சி.பி.ஐ சோதனை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மிகுந்த மூளைசலவைக்கு பின் கனிமொழி சி.பி.ஐ சோதனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்தே இந்த பேட்டி. விரைவில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடக்கலாம்.

Popular Posts