Showing posts with label முல்லைப்பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப்பெரியாறு. Show all posts

Jul 9, 2012

கூச்சல் கலவரம் அமைதியுடன் உயிர்த்தது உயிர்

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு சுமூக தீர்வுகளை அலசும் மக்கள் மேடையை அமைத்திருந்தோம். இந்த உயிர் கூட்டமைப்பு கோட்டயம் நூலக அரங்கில் 7தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. கேரள தமிழகத்தில் இருந்து சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் பலர் வந்திருந்தனர்.

பாதுகாப்பு கருதி கம்பம் அப்பாசு அவர்கள் கேரள செல்ல தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். தடையும் செய்துவிட்டனர். கம்பம் அப்பாசு அவர்களின் வாழ்த்து செய்தியுடன் தமிழ்மலர் குழு துணிவுடன் கேரளா சென்றது. 


கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கம்பம் அப்பாசு தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இது ஒரு நல்ல முயற்சி, இது வெற்றிபெற வேண்டும். அடுத்த கூட்டம் மதுரையில் நடத்தலாம். அதில் நிச்சயம் நான் கலந்துகொள்வேன் என்று கம்பம் அப்பாசு அவர்கள் தெரிவித்தார்.

கூட்டம் துவங்கி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆளும் காங்கிரசு கட்சியின் எம்.எல்.ஏ.,பல்ராமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. புதிய அணை என்பது கேரள மக்களை ஏமாற்றும் வேலை. இது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட ஒன்று. அரசிலுக்கும் வியாபாரத்துக்குமாக முல்லைப்பெரியாறு பிரச்சனையைய அரசியல்வாதிகள் கையாள்கிறார்கள். புதிய அணை ஒருபோதும் தேவை இல்லை. என்பதை பல்ராமன் பதிவு செய்தார்.  கேரளாவின் பல எழுத்தாளர்களும் புதிய அணை ஒரு ஏமாற்று வேலை என்று பேசினர்.

12 மணியளவில் கேரள மீடியாக்கள் முல்லைப்பெரியாறு போரட்டக்குழு என்ற பெயரில் 20 பேருடன் வந்தார்கள்.

மேடைக்கு பின்னும், சுற்றிலும் கேமராக்களை உயர்த்திப்பிடித்து நின்றார்கள். கேமராக்கள் தயாரானதும் வந்த 20 பேரும் கூட்டத்திற்கு எதிராக கோசம் எழுப்பினார்கள். சி.பி.ரோய் ஒழிக, ஆனந்த் வெளியேறுக. கேரள மக்களுக்கு எதிரான இந்த கூட்டத்தை தடை செய்க என்று கூச்சலிட்டார்கள். தமிழ்மலர் குழுவை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டார்கள். பல மலையாள தோழர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றார்கள். 

சமயம் பார்த்து காத்திருந்த காவல்துறையினர் கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை தடை செய்தார்கள். பிரச்சனை பெரிதாகமல் இருக்க ஆனந்தை வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்க சொன்னார்கள். ஆனால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கூட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தோம். 2 மணி நேரம் கூச்சல் நீடித்தது. தங்கள் தேவை முடிந்ததும் மீடியாக்கள் அவரவர் அலுவலகம் நோக்கி புறப்பட்டன. மீடியாக்கள் போன பின்பு அந்த 20 பேரும் நடையை கட்டினர்.

பின்னர் ஒலிப்பெருக்கி இல்லாமலே எங்கள் கூட்டம் தொடர்ந்தது.
சி.பி.ரோய்
சி.பி.ரோய் தன் கருத்தை அழமாக பதிவு செய்தார். உடனடி மற்றும் நிரந்தர தீர்வு புதிய சுரங்கம் மட்டுமே என்று வலியுறுத்தினார். ஆனந்த் பேசும்போது மீண்டும் அரங்குக்குள் நுழைந்த சிலர் தொடர்ந்து கூச்சல் இட்டுக்கொணடே இருந்தார்கள். உரத்த குரலில் பேசிய ஆனந்த் எதிர்ப்பாளர்களை நேரடி விவாதத்தில் எதிர்கொண்டார்.


பின்னர் தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி பேசியது ;
அணை  பலமாக உள்ளது. 142 அடியாக நீரை உயர்த்திக்கொள்ளலாம்  என 2002ல் சி.டபிள்யு.சி 2006ல் உச்சநீதிமன்றம். 2012ல் உயர்மட்ட குழுவும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகம் தாராளமாக 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள முடியும். தமிழக காவல்துறையை அனுப்பி இதை செயல்படுத்தவும் நீதிமன்றத்தின் அனுமதி உள்ளது. ஆனால் தமிழகம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறது. கேரள மக்களின் பய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது. அதனால் தான் மாற்று தீர்வான சுரங்க கால்வாய் திட்டத்தை பரிசீலிக்கிறது. இதை கேரளா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு ஈகோ பிரச்சனையாக பார்க்காமல் இரு மாநில நல்லுரவை மட்டுமே பார்க்க வேண்டும்.

இன்று இடுக்கி அணைக்கு 50 வயது. இந்த அணைக்கும் 100 வயது ஆகும். அப்போது அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவீகளா அல்லது தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்துவீர்களா? அதையே தான் முல்லைபபெரியாறு விசயத்திலும் தமிழகம் செய்கிறது.

தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி
புதிய சுரங்க திட்டத்தை வலியுறுத்தும் எங்களை தமிழக மக்கள் தங்களுக்கு எதிரானவர்களாக தான் பார்க்கிறார்கள். காரணம் அவர்களுக்கு 142 அடி நீரை உயர்த்திக்கொள்ள உரிமை இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சனையை உணர்ச்சிபூர்வமாக அணுகும் திரு. வைகோ, நெடுமாறன், கம்பம் அப்பாசு போன்றவர்கள் கூட புதிய சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செயலலிதா தலைமையிலான தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இந்த சந்தர்ப்பத்தை கேரள அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


எங்களை தாக்குவதாலோ, எங்களுக்கு எதிராக கோசம் எழுப்புவதாலோ, சரியான தீர்வை மறைத்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஈகோ பார்ப்பதை விட்டுவிட்டு. மக்கள் மன்றத்தில் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம். இன்று வரை எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதில்லை. மக்கள் மேடை பல நதிநீர் பிரச்சனைகளை தீர்த்துள்ளது. அதற்கான ஒரு துவக்கம் தான் இந்த உயிர். இது நிச்சயம் உயிரித்து உயர்ந்து நிற்கும்.

நன்றி.

ஆனந்த் பேசியது அடுத்த பதிவில்.

times of india

deccan chronicle

The hindu

tamil.oneindia

newindianews



Jul 3, 2012

உயிர் தமிழ் மலையாள மக்கள் கூட்டமைப்பு


அரசாங்கங்கள் புறம்திருப்பி நிற்கின்றன!...
அரசியல்கட்சிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதே இல்லை!...
பொதுமக்கள் நாம் ஓரு மேசையின் முன்பு இருந்து 
பேசித்தீர்த்துக்கொள்வது அல்லாமல் வேறு என்ன வழி?...
பொதுமக்கள் தமக்குள் பேச துவங்கும்போது
இயல்பாகவே பிறக்கிறது மக்கள் தீர்வு!

அறிவுக்களஞ்சியமான கோட்டயம் பொது நூலகத்தில்
‘‘உயிர்’’ என்ற அறிமுகத்தில்
தமிழ், மலையாள எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும்
ஒரு பகல் ஒன்று கூடுகிறார்கள்.

இது ஒரு போர் அல்ல!..
அதனால் இங்கு எதிராளிகள் இல்லை!..
கிழக்குக்கு மேற்கு எதிராளி என்று யார் சொன்னது?..
ஆனாலும் நாம் பிரிந்து நின்று சவால் விட்டோம்!..
பரசுபரம் மோதிக்கொள்ள கொம்பு சீவிக்கொண்டோம்!
இரத்ததின் நிறத்தை கூட காண முற்பட்டோம்!
அப்போதும் கூட ஒரு மேசையும்,
அதனை சுற்றிலும் பல நாற்காலிகளும் ஆளில்லாமல் கிடந்தது...

ஒரு வம்சத்தின் வேர்களாய் இருந்தோம் நாம்!...
மொழியிலும், பண்பாட்டிலும், வாழ்க்கையிலும்
பொதுநிலையை பங்கிட்டுக்கொண்டவர்கள்.,
இங்கே வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்போம்.

ஒரு மேசையின் சுற்றும் இருந்து
தமிழ் மலையாள எழுத்தாளர்களும்
சிந்தனையாளர்களும், விவசாயிகளும் பேச துவங்குகிறார்கள்!
எவ்வளவு முயன்றும் தீராத முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு
சுமூகமான தீர்வுகளை அலசுகிறார்கள்!

கேரள மக்களுக்கு உயிர் பயம்!
தமிழக மக்களுக்கு உயிர் ஆதாரம்!
இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு
சுமூக தீர்கவுகளை அலசிப்பார்ப்போம்...

நமது பசுமை கனவுகளுக்கு நிகழ்காலம் கொடுப்போம்!
கேரள மக்கள் பயப்பீதியில் இருந்து மீள நம்பிக்கை தருவோம்!

இந்த சந்திப்பு ஒரு துவக்கம் மட்டுமே...

கருகிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உயிர்கொடுப்பதால்,
இந்த சந்திப்பு ‘உயிர்’ என்று அறியப்படுகிறது!!

எவ்வளவு வாழ்த்தினாலும் தீராத இந்த சந்திப்பு,
வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்!.

முதல் சந்திப்பு

கோட்டயம் பொது நூலகத்தின்
கே.வி.எசு. மேனன் அரங்கம்
2012 சூலை 07 சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
நாம் ஒரு மக்கள் மேடையை கட்டமைப்போம்...

தொடர்புக்கு :
சிவிக்சந்திரன் : 09633751353
சி.பி. ரோய் : 09447200707
சி.ஆனந்த் : 09787678939

Jun 29, 2012

ஆனந்த் குழு ஊடகங்களின் இருட்டடிப்பு

முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தமிழக கேரளாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் தரப்பட்டது. ஆனால் ஒரு தமிழ் ஊடகத்தில் கூட உண்மை நிலை எழுதப்படவில்லை. விவாதிக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் கேரள பிரதிநிதியாக ஆனந்த குழுவில் இடம்பெற்றிருந்த கே.டி தாமசை சந்தித்து முழுமையான அறிக்கையை கேட்டுப்பெற்றேன்.

அதில் இறுதி வரிகள் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

In Case This Suggestion Finds Favour With The Hon`Ble Supreme Court, The Safety Concerns Of The Sok(So Kerala) And The Requirements Of The So Tn( So Tamil Nadu) Would Be Met From The Existing Dam After Completing The Left Over Strengthening Measures And Construction A New Tunnel For Evacuation Of Reservoir Water 

The Empowered Committee Humbly Suggests That For An Amicable Resolution Of The Long Pending Dispute Between The Two Neighbouring States The Alternatives Are Worth Exploring With The Party States



இந்த வரிகளுக்கு கீழ் தான் நீதிபதி ஆனந்த், கே.டி தாமசு, லட்சுமணன், நிபுணர்கள் தட்டே, மேத்தா ஆகிய ஐந்து பேரும் கையெழுத்திட்டுள்ளனர்.

8 பக்கங்களில் இந்த திட்டம் குறித்து வரவேற்று எழுதியுள்ளனர். இரு மாநிலங்களும் இதை தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு குழுவில் இருந்த 5 பேரும் கூடுதல் வரவேற்பை பதிவு செய்துள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த திட்டம் குறித்து தமிழ் ஊடகங்கள் ஒரு வரி கூட எழுதாதது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு.

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உச்சநீதிமன்றம் இதை தீவிரமாக பரிசீலிக்கிறது. ஒரு ஆண்டுக்குள் இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை உலகத்தில் எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே தான் மக்கள் மன்றத்தில் இதை வைத்திருக்கிறோம். வரும் 7ம் தேதி கேரள தமிழக மக்கள் சந்தித்து பேசும் ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளோம். 

தமிழக ஊடகங்கள் எங்களை புறக்கணித்தாலும், நிச்சயம் ஒரு நாள் எங்கள் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். இந்த நம்பிக்கையில் தொடர்கிறது எங்கள் முயற்சி...

Jun 19, 2012

முல்லைப்பெரியாறு புதிய நீர்வழி சுரங்கம்


முல்லைப்பெரியாறு அணை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தி வடகிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. வடகிழக்கே குமுளி தேக்கடி அருகே பூமிக்கு அடியில் சுரங்க கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகம் கூடலூருக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த சுரங்க கால்வாய் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தில் 104 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 104 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் இந்த சுரங்க கால்வாழ் வழி தண்ணீர் கொண்டு வர முடியாது. 104 அடிக்கு மேலுள்ள தண்ணீரை தமிழகம் நோக்கி கொண்டு வரலாம். 104 அடியில் இருந்து 136, 142, 152 அடி வரை உயரும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. 

பிரச்சனை என்னவென்றால் : அணை பலவீனமாக உள்ளது 136 அடிக்கு மேல் தண்ணிரை உயர்த்தினால் அணையில் கூடுதல் நீர்கசிவு ஏற்படுகிறது. இது அணை உடைய வழிவகுக்கும் என கேரள கூறியது. இதை தொடர்ந்து அணை பலப்படுத்தும் பணிகளுக்காக 152 அடியில் இருந்து நீர் மட்டத்தை 136 அடியாக தமிழகம் குறைத்துக்கொண்டது. பின்னர் அணை பலப்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்தது. அணை பலப்படுத்தப்பட்ட பின்னரும் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்த கேரளா அனுமதிப்பது இல்லை. தொடர்ந்து அணை உடைந்துவிடும் என்ற பீதியை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறது.

அணை உடைந்துவிடுமா? அணை பலமாக உள்ளதா? என்ற விவாதத்தை கடந்து நாங்கள் ஒன்றை வலியுறுத்துகிறோம். அது மனிதநேயம் அடிப்படையிலானது. அணைக்கு கீழ் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். ஒரு அணை உடைந்துவிடும் என்ற பீதியை கிளப்பி விட்டால் அந்த அச்ச உணர்வை போக்குவது கடினம். அதற்கு அவர்களை முழுமையாக சமாதானப்படுத்தும் வழிமுறைகளை காண்பாது தான் மனிதநேயம். அத்தகு மனிதநேயம் தமிழர்களுக்கு உள்ளது என்று நம்புகிறேன்.

மாற்று தீர்வாக தற்போது 104 அடியில் உள்ள சுரங்க கால்வாயின் ஆழத்தை 50, 34 அடியாக தாழ்த்துவது. அல்லது இதற்கு நிகராக புதிய சுரங்கம் ஏற்படுத்துவது என்பதை வலியுறுத்துகிறோம். இது இப்போது நாங்கள் சொல்லும் திட்டம் அல்ல. அணையை கட்டிய பென்னி குயின் தனது டைரி குறிப்பில் எழுதிவைத்துள்ள திட்டம்.

இந்த பணியை செய்தால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை தேக்கவேண்டிய ஆவசியம் இருக்காது. நேரடியாக ஆற்றை திருப்பி தமிழகத்துக்கு கொண்டுவர முடியும். இதனால் தற்போது கிடைக்கும் நீரின் அளவை விட 5 மடங்கு தண்ணீர் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்கும்.

அணையில் தேக்கும் தண்ணீரின் அளவை மேலும் குறைப்பதன் மூலம் கேரள மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும். இது இரு மாநில மக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சம் ரூ. 1 கோடி ரூபாய் இருந்தால் போதும். தமிழகத்தை பொருத்தவரை இந்த தொகை பெரியது அல்ல.

இந்த திட்டம் குறித்து தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் திரு கம்பம் அப்பாசு, கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் திரு. சி,பி ரோய் ஆகியோர் கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.


இந்த திட்டம் குறித்து விவாதிக்க தமிழக கேரள விவசாயிகள் சந்திப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. வரும் சூலை 7 தேதி கோட்டயத்தில் வைத்து இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் கேரளாவை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

அன்பார்களே கேரள தமிழக நல்லுரவுக்காக உங்களால் இயன்ற குரல்கொடுங்கள்.

Jun 13, 2012

முல்லைப்பெரியாறு கேரள-தமிழக விவசாயிகள் சந்திப்பு


தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த விவசாயிகள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் சந்தித்து ஆலோசனைகளை பகிரும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்

வரும் சூலை மாதம் 7 தேதி கொச்சியில் வைத்து இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கேரளாவில் இருந்து முல்லைப்பெரியாறு போராட்டக்குழு முன்னாள் தலைவர் சி.பி.ரோய், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமசு (நீதிபதி ஆனந்த் குழுவில் கேரள பிரதிநிதியாக இருந்தவர்) எழுத்தாளர்கள் சிவிசங்கரன், நீலகண்டன், வழக்கறிஞர் காளிங்கராசு, திருவனந்தபுரம் தமிழ் சங்கம் உட்பட பலரும் கலந்துகொள்கின்றனர். 

தமிழகம் சார்பில் ஐந்து மாவட்ட பெரியார் நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு, தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், இயக்குனர் அரவிந்த், இன்னும் பல எழுத்தாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்

திரு.நெடுமாறன், திரு கு.ராமகிருசுணன், திரு.கொளத்தூர் மணி உள்ளிட்டோரையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த கூட்டத்தில் கேரள தமிழக மக்களுக்கு முழுமையான பயனை தரும் புதிய நீர்வழி சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளோம்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனை முடிவுகளை கேரள தமிழக அரசுகளுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம். 

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் வலைப்பதிவர்கள் உள்ளிட்டோர் தொடர்பு கொள்ளவும். 

ஆக்கபூர்வமான சிந்தனைகள் நிச்சயம் நல்ல தீர்வை தரும்.

தொடர்புக்கு தமிழ்மலர் :9787678939      tamilmalarnews@gmail.com

நன்றி...

May 5, 2012

முல்லைப்பெரியாறு முயற்சிக்கு வெற்றி


முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக புதிய சுரங்கம் அமைக்கும் திட்டத்தை வலியுறுத்தி இருந்தோம். இது தொடர்பாக கேரள தமிழக விவசாய மற்றும் போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து அவர்களின் சம்மதத்தையும் வெளியிட்டிருந்தோம். திரு கம்பம் அப்பாசு, மற்றும் சி.பி ரோய் ஆகியோர் முழு மனதுடன் சம்மதித்து பேசிய சி.டியை வெளியிட்டிருந்தோம்.


இரு மாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய சுரங்க கால்வாய் திட்டம் குறித்து நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவிடமும் அறிக்கை கொடுத்திருந்தோம். அதன் பயனாக தற்போது அந்த திட்டத்தை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வாக 2 திட்டங்களை உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. 1. புதிய அணை. 2. புதிய சுரங்க கால்வாய். இதில் இரண்டாம் திட்டமான புதிய சுரங்க கால்வாய் திட்டம் இரு மாநிலத்தவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகவும் அமையும் என்று உயர்மட்ட குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு படிப்படியான வெற்றி கிடைத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Feb 22, 2012

முல்லைப்பெரியாறு கொலைநடுங்க வைக்கும் படுபாதகம்


மிகவும் வருத்தத்துடனும், பீதியுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை புதிய கால்வாய் என்ற திட்டத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக கேரள தமிழக மக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் ஆகியோரை சந்தித்து பேசி வருகிறோம். பல மகிழ்சியான கருத்துரைகளை கடந்து சில வேதனையான கருத்துக்களையும் பகிராமல் இருக்க முடியவில்லை.

முல்லைப்பெரியாறு என்ற பிரச்சணைக்கு சிலர் மறுமுகம் கொடுத்து வருகின்றனர். இதை இருமாநில மக்களும் எப்படி முறியடிப்பார்கள் என்ற பீதி இப்போதே கொலைநடுங்க வைக்கிறது.

தங்கள் இலக்கை அடைய உயிர்பலிக்கும் தாயாரக இருக்கும் சில குரூர எண்ணக்காரர்களை பற்றி தான் இங்கு எழுதுகிறேன். 

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் சில இனவெறியர்கள் ஒரு இலக்கை சாதிக்க துடிக்கின்றனர். 

திருவிதாங்கூர் அரசர் செய்த வரலாற்று பிழையை திருத்துகிறோம் என்ற பேரில் எந்த பிரச்சனைக்கும் தாயர் என்ற மனநிலையில் உள்ளனர்.

பெரியாறு முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆங்கிலேய அரசு திரவிதாங்கூர் மன்னரை மிரட்டி நதியை அணை கட்டி திருப்பி விட்டது. அதை நாங்கள் மீட்டெடுபோம் என்று விசமத்தை பரப்பி வருகிறார்கள். இதற்கு கேரளாவின் முக்கிய பத்திரிக்கையும் உடந்தையாக கொம்பு சீவி வருகிறது. எவ்வளவு உயரிபலி கொடுத்தேனும் நதியை மீட்பது ஒன்று எங்கள் குறிக்கோள் என்கின்றனர். 

அதே பாணியில் தமிழகத்திலும் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உள்ளன. பீர்மேடு, தேவிகுளம் பகுதியை மீட்டுவிட வேண்டும் என கொலைவெறி பிடித்து அலைகிறார்கள். இதற்காக இன கலவரத்தை ஏற்படுத்தவும் தயாராகி வருகிறார்கள். (அபாயகரமான உண்மை என்பதால் அந்த அரசியல்வாதிகள், பத்திரிக்கைகள் பெயரை குறிப்பிடவில்லை)  

கேரள ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்து ஒற்றை கேள்வியை முன் வைத்தோம்.

2006ல் தண்ணீரை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அதை கேரளா மதிக்கவில்லை. அதே போல 2012 ல் கேரளாவுக்கு சாதகமாக புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தால் அதை தமிழகம் ஏற்றுக்கொள்ளுமா? 

ஒருவர் சட்டென உச்சசநீதின்றம் தீர்ப்பளித்தால் மதித்து தானே ஆக வேண்டும் என்றார். பின்னர் ஏன் 2006ல் நிறைவேற்றவில்லை என்ற கேள்விக்கு மவுனம் மட்டுமே பதில்.

நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிக்கப்போவதில்லை பின்னர் எதற்கு இவ்வளவு பொருட்செலவில் விவாதங்கள்?    நிபுணர் குழுவையும் பத்திரிக்கைகளையும் வாழ வைக்கவா?

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னனியில் ஒரு இனக்கலவரத்தை தூண்டி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள இரு பிரிவினரும் தயாராக இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொம்பு சீவிக்கொண்டு இருக்கிறார்கள். 

தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் கலவரம் வெடிக்க காத்திருக்கிறது. இரு பிரிவினரும் வரலாற்று பிழையை திருத்தி தங்கள் ஆற்றையும், பகுதியையும் மீட்டெடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த போருக்கு துவக்கம் இட நீதிமன்ற தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வரும் நாள் போருக்கான மணி அடித்துவிடும். ( எத்தனை மக்களுக்கு மரண மணியோ?) 

பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகம் மீட்கப்போவதும் இல்லை, பெரியாற்றை கேரளம் மீட்கப்போவதும் இல்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை கலவரக்காரர்களும் இராணுவமும் கொன்று குவிப்பது மட்டும் உண்மை. 

கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப்பெரியாறு, பீர்மேடு, மூணாறு பகுதியில் வாழும் அப்பாவி மக்களுக்கு சமாதி கட்டும் அந்த கோரத்தை அரங்கேற்ற நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை மானுடம் பேசும் நல்லுலகம் எப்படி முறியடிக்கும் என்று தெரியவில்லை....

வருத்தங்களுடன்...

Jan 25, 2012

தினமலரில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது.


முழு பூசணிக்காயை எவ்வளவு நாள் தான் சோற்றில் மறைக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தினமலரில் தமிழ்மலரின் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகி உள்ளது.  

புதிய அணைக்கு மாற்றாக புதிய காழ்வாய்கள் வெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழ்மலரில் தொடர்ந்து எழுதிவருகிறோம்.

தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு மற்றும் கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் சி.பி.ரோய் ஆகியோர் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் பேட்டி அடங்கிய சி.டியை வெளியிட்டிருந்தோம். 

கேரள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தினத்தந்தியில் மட்டும் சிறு செய்தி வந்திருந்தது. தி இந்து ஆங்கில பத்திரிக்கை இரண்டுமுறை விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. 

தினமலர் பத்திரிக்கைக்கு இப்போது ஏனொ சிறு நல்ல புத்தி வந்துள்ளது. புதிய அணை வேண்டாம் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

தினமலர் செய்தி :-
புதிய அணை தேவையில்லை
 போராட்டக் குழு முன்னாள் தலைவர் அறிவிப்பு

கோட்டயம்: "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை விட, அங்கு புதிய சுரங்கக் கால்வாய் அமைத்து, அணை நீர்மட்டத்தைக் குறைக்கலாம்' என, முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் முன்னாள் தலைவர் சி.பி.ராய் தெரிவித்தார். 

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தற்போதுள்ள அணைக்குப் பதிலாக, அங்கு புதிய அணை அமைப்போம் என, கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து, முல்லைப் பெரியாறு போராட்டக் குழு முன்னாள் தலைவர் சி.பி.ராய் கூறியதாவது: 

முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது அல்லது தற்போதுள்ள அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் புதிய அணை கட்டுவது எல்லாம் தேவையற்றது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தாலே, அணைக்கு பாதுகாப்பு கிடைத்து விடும். அதற்காக, தற்போதுள்ள அணையில் 104 அடி சுரங்கக் கால்வாய்க்குப் பதிலாக, 50 அடி உயரத்தில், புதிய சுரங்க கால்வாய் அமைத்து, அதன் மூலம் நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியாகவே இருக்கும். அதற்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தாலும், தானாகவே சுரங்க கால்வாய் வழியாக வெளியேறி விடும்.

அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க, ஏற்கனவே தமிழக அரசு ஒப்புக் கொண்டு உயர்மட்ட குழுவிடம் தெரிவித்துள்ளது. எனவே, புதிய சுரங்க கால்வாய் அமைக்க தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. மேலும், இது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் தரும். 

இவ்விஷயத்தில் கேரள அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். பின்னர், இவ்விஷயத்தை நீதிபதி கே.டி.தாமசிடம் அளிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசு ஆயுதமாக கருதக் கூடாது. அதற்கு பதிலாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயல வேண்டும். இவ்வாறு, சி.பி.ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இவர், இதே கருத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தான், அவரை போராட்டக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் செய்தி :-  http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html

கேரள அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை கொடுத்துள்ளோம். தமிழக அரசும் இப்போது இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

Jan 23, 2012

சி.சி.எல் கேரளா கலாதிமாறன் ரகசிய உத்தரவு

சி.சி.எல் கிரிக்கெட் முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என கலாதிமாறன் செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சி.சி.எல் எனப்படும் சினிமா நடிகர்கள் பங்குபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதன் முக்கிய பங்குதாரராக சன்டிவி நெட்வொர்க் தலைவர் கலாதிமாறன் உள்ளார். போட்டிகள் அனைத்தும் சன், சூரியா, உதயா, போன்ற இவரது சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 

இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு பிரச்சனை வெடித்தவுடன் என்ன ªச்ய்வது என்று தெரியவில்லை. சென்னை, கேரளா அணிகள் மோதும் போட்டியை சென்னை அல்லது கொச்சியில் நடத்தினால் மட்டுமே பார்வையாளர்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை வேறு வழியில்லாமல் ஆந்திராவில் நடத்தினார்கள். 100 பார்வையாளர்கள் கூட இல்லாததால் ஆட்டம் ஆடும் பெண்கள் கூட சோர்ந்து போனார்கள். 

இந்நிலையில் வரும் 28ம் தேதி கேரள&பெங்கால் அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக கேரள நடிகர்கள் அணி சென்னை வர உள்ளது. இந்த நேரத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சனை பூதகரமாக்கப் பட்டுவிடக்கூடாது என்பதில் சன் குழுமம் முனைப்புடன் செயல்படுகிறது. இதற்காக தினகரன், சூரியன் எஃப் எம், சன் டிவி உட்பட செய்தியாளர்களுக்கு புது உத்தரவு வந்துள்ளது. சி.சி.எல் போட்டி முடியும் வரை முல்லைப்பெரியாறு பிரச்சனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

அதே போல பாசமலர் நக்கீரனுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை கொதிக்கும் தண்ணீரில் கொல்லப்பட்ட தமிழன் என்று செய்தி வெளியிட்ட நக்கீரன், இப்போது கேரள சென்னை அணிகள் மோதிய படங்களை எக்சுகுளூசீவ் படங்களாக வெளியிட்டுள்ளது.

கேரள நடிகைகள் நடிக்ககூடாது என விரட்டியடித்தனர். மலையாள விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளின் படங்களை போட்டு எச்சரித்தனர். இப்போது அணி அணியாய் நடிகர்கள் கேரள செல்கிறார்கள். இதில் எல்லாம் உங்கள் தமிழ் உணர்வு விதிவிலக்கா? அல்லது தமிழ்பற்று நடிகைகளுக்கு மாட்டும் தானா? நடிகர்களுக்கு இல்லையா? இதில் கூட உங்கள் ஆணாதிக்கம் தானே தெரிகிறது.

கலாநிதிமாறனுக்கும், நக்கீரன் கோபாலுக்கும், தினமலர் மகேசுக்கும் வியாபாரத்துக்காக முல்லைப்பெரியாறு, தமிழ்பற்று இவைகளை ஓதுகிறார்கள். இதை புறிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஈழப்போர் உச்சகட்டத்தின் போது குழந்தைகளையாவது மீட்க குரல்கொடுங்கள் என்று கெஞ்சியபோது மவுனம் சாதித்த அப்துல்கலாம் இப்போது சாமாதனாம் நிலைநாட்ட இலங்கை சென்றுள்ளார். சத்தியமா சொல்ரேங்க அப்துல்கலாம் இப்ப பணத்துக்காக மட்டும் இலங்கை போகலை தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட சென்றுள்ளார்.

என் பாட்டி பாணியில் வயிர்எரிந்து சொல்கிறேன் ஈழக்குழந்தைகளின் ஆன்மா அப்துல்கலாமை சும்மா விடாது. போலிகளின் முகத்திரை நிச்சயம் ஒருநாள் கிழியும். அன்றாவது அவன் அயோக்கியன் என்பதை இந்த உலகம் நம்பட்டும்.

Jan 22, 2012

கேரளா அரசின் ரகசிய தகவல் சேகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் தரை மட்டத்தில் இருந்து 34, 50, 84 அடிகளில் சுரங்கம் அமைத்து பெரியாற்று நீரை தமிழகம் முழுமையாக பயன்படுத்த முடியும். இந்த எளிமையான தீர்வை வலியுறுத்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். 

முதற்கட்டமாக இருமாநில போராட்ட குழுவினரிடம் இந்த திட்டத்தை விளக்கினோம். திட்டத்தின் கூர்மையை புரிந்து கொண்ட தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். 

தமிழகத்தின் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கம்பம் அப்பாசு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் திட்டத்தை வரவேற்றார். அவரது பேட்டியை தமிழ்மலர் இணைய தளத்தில் ஒளிப்பரப்பினோம். தொடர்ந்து கேரளாவின் இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், ஏசியா நெட் உட்பட செய்தி சேனல்கள் ஒளிபரப்பின.

கேரளாவில் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு குழு தலைவர் சி.பி.ரோய் திட்டத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டு வந்தார். அதை கேரள முதல்வர், இந்திய பிரதமர் ஆகியோருக்ரு அனுப்பி வைத்தார். இதனால் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வின்போது கேரள அரசு மிகவும் மவுனம் சாதித்தது. 

கேரளாவில் தமிழகத்துக்கு ஆதரவான குரல் ஒலித்ததை தமிழக ஊடகங்கள் பெயருக்கு கூட கண்டுகொள்ளவில்லை.

மனம் தளராமல் தொடர்ந்து எங்கள் முயற்சி பாதையில் பயனித்தோம்.

கேரள எழுத்தாளர்களின் ஆதரவை திரட்டினோம். திட்டத்தை புரிந்துகொண்ட அத்தனைபேரும் முழுமையான ஆதரவை தெரிவித்தனர். சி.ஆர்.நீலகண்டன், சிவிச்சந்திரன், லதா, நாயர் உட்பட பல பிரபல எழுத்தாளர்களும் ஆதரவு குரல் தந்தனர்.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அதிகமாக பேசப்பட்ட கேரளாவின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பிரேசமசந்திரனை சந்தித்து பேசினோம். திட்டத்தின் கூ;ர்மையை புரிந்துகொண்ட அவர் சில சந்தேகங்களை முன்வைத்தார். தேக்கடி சுற்றுலாமையம் காணாமல் போய்விடும் என்பது தான் அவரது சந்தேகம். அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, மூணாறு போன்ற இடங்களை குறிப்பிட்டோம்.

உண்மையை புரிந்துகொண்ட அவர் இந்த திட்டத்தை கேரள அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் ஜனவரி 24 தேதியில் நடக்கும் உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு பரிசீலனைக்கு பின்னர் முழுமையான ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திட்டத்தின் தீவிரத்தை புரிந்துகொண்ட கேரள அரசு எங்களிடம் முழுமையான திட்ட மாதிரி வடிவத்தை தயாரித்து தர கோரியுள்ளது.  

பாதி கிணறு தாண்டிவிட்ட மகிழ்ச்சில் அடுத்து தமிழகம் பக்கம் எங்கள் திட்டத்தை திருப்பி உள்ளோம்.

எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழக மக்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

Jan 5, 2012

முல்லைப்பெரியாறு அணைக்கு சிறுவாணி ஒப்பந்தமா?


முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது. 

புதிய அணையின் உரிமை முழுக்கமுழுக்க கேரளாவுக்கு தான். ஆனால் பராமரிப்பு பணியை கேரளா-தமிழகம்-மத்தியஅரசு ஆகியவை இணைந்து செயல்படுத்த தயார் என கூறியுள்ளார் கேரள முதலமைச்சர். இதே கருத்தையே உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய உள்ளனர்.

புதிய அணை குறித்த தமிழகத்தின் பதிலில் தான் இருக்கிறது கேரள கனவுக்கான பிடிப்பு. புதிய அணை பராமரிப்பு குறித்த நீதிபதி ஆனந்தின் கேள்விக்கு தமிழகம் ஒரு வாரத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய அணை பலமாக உள்ள நிலையில் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தமிழக வழக்கறிஞர் உடனடியாக தெரிவித்தார். ஆனால் இது குறித்து அரசின் நிலைபாட்டை தெரிந்து அறிவிக்கும்படி கூறியுள்ளது உயர்மட்ட குழு. இது தான் கேரள மகிழ்ச்சியின் காரணம்.

சிறுவாணி அணை போன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏற்க தாயர் என்றுள்ளது கேரளா. ஆனால் சிறுவாணிக்கும் பெரியாற்றுக்கும் பெயரிலேயே வேறுபாடு உள்ளது என்பதை தமிழக&கேரள அரசுகள் கவனிக்க வேண்டும்.

சிறுவாணி அணை என்பது குடிநீருக்காக மட்டும் கட்டப்பட்ட ஒரு சிற்றணை. இங்கிருந்து கோவை மாநகராட்சி பம்பு &குழாய் வாயிலாக மிகச்சிறிய அளிவில் மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும். 

இந்த அணை ஒப்பந்தப்படி சிறவாணி அணையின் முழு உரிமை கேரளாவுக்கு உரியது. அணை பராமரிப்பு, பாதுகாப்பு, நீர்மட்டம் நிர்ணயித்தல், சுற்றுலா அனுமதி என அத்தனை உரிமையும் கேரளாவுக்கே உள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகம் தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு விலைநிர்ணயமும் இருக்கிறது. மேலும் பராமரிப்பு செலவாக ஆண்டுதோறும் கேரளா கோடிக்கணக்கில் வாங்கிக்கொள்கிறது. சிறுவாணி அணைநீரால் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்கர் கூட விவசாம் செய்யபடுவதில்லை. 

ஆனால் பெரியாறு என்பது நேர் தழைகீழானது. சிறுவாணியை காட்டிலும் பலமடங்கு பெரியது பெரியாறு. குடிநீர், விவசாயம், மின்உற்பத்தி என பல்முறை பயன்பாடுகள் பெரியாறு அணையால் சாத்தியப்படுகிறது. தற்போது இதன் உரிமை, பராமரிப்பு நீர்பயன்பாடு அனைத்தும் தமிழகத்தின் கையில் உள்ளது. தமிழகம் எப்போது வேண்டுமானாலும் நீரை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. 

ஆனால் கேரளா வலியுறுத்தும் சிறுவாணி மாதிரி ஒப்பந்தத்தில் கட்டப்படும் புதிய பெரியாறு அணையில் தமிழகத்துக்கு எந்தத உரிமையும் இருக்காது. சிறுவாணியில் எப்படி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறதோ அதே நிலை பெரியாறு அணையிலும் ஏற்படும். 16 டி.எம்.சி தண்ணீருக்கு வாடிக்கையாளர் உரிமை மட்டும் என்ற பரிதாப நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். 

சிறுவாணி என்பது ஒரு மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் உள்ள ஒரு சிற்றணை. இந்த அணையின் ஒப்பந்த மாதிரியை 5 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், மின்தேவையை பூர்த்தி செய்யும் பெரியாறு அணையோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது. 

மேலும் ஆயுள் காலம் முழுவதும் உரிமை உள்ள ஒரு அணையை தமிழகம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? 999 குத்தகை ஒப்பந்தம் அணைக்கு அல்ல அணையின் நீர்பிடிப்பு இடத்துக்கு தான் என்பதை கேரளா தெளிவு படுத்திக்கொள்ளட்டும்.

எந்த நிலையிலும் தற்போதைய அணையை இழப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஈடு செய்யமுடியாத இழப்பாகவே இருக்கும். பென்னிக்குயிக்கை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இந்த இழப்புக்கு எந்தவிதத்திலும் தயாராக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

இறதியாக சிறுவாணி அணைக்கு அருகில் நதிக்கரையில் வசிப்பவர் என்ற பெருமையோடு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 

சிறுவாணி அணைக்கு உரிமையாளர் கேரளாவாக இருந்தாலும், கட்டுமானத்தின் போது கூலி ஆட்களுக்கு தமிழகம் இலவசமாக தந்த அரிசியை மூட்டைகளாக அடிக்கினால் அது சிறுவாணி அணையை விட உயரமாக வரும். இதற்காக வாழ்நாள் முழுவதும் நாங்கள் தமிழகத்துக்கு கடமை பட்டுள்ளளோம் என்றார் ஒரு மலையாள கூலித்தொழிலாளி. அடித்தட்டு மக்களிடம் உள்ள இந்த உயரிய எண்ணம் அரசியல்வாதிகளிடமும் ஊடகங்களிடமும் இல்லையே ?

Jan 3, 2012

முல்லைப்பெரியாறு தமிழகம் தோற்றுவிடுமா?


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் நேற்றைய தினம் தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை தினமாக அமைந்துள்ளது. கேரளாவுக்கு ஒரு படி முன்னேற்றத்தின் தெம்பு கிடைத்துள்ளது.

புதிய அணை கட்டி அதை இருமாநில அரசுகளும் பராமரித்துக்கொள்ளுமா? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி தான் இப்போது தமிழகத்தை முள்முனையில் நிறுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் தமிழகம் தனது உரிமையை எந்தவிதத்திலும் இழந்துவிடக்கூடாது. புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்ற சம்மதம் தெரிவித்தாலே தமிழகத்தின் முழு உரிமையும் ஒட்டுமொத்தமாக பரிக்கப்பட்டுவிடும்.

இப்போது இன்னும் 884 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு தமிழகத்தின் முழு பராமரிப்பில் இருக்கிறது. தண்ணீர் திறந்துவிடும் சாவியும் தமிழகத்திடம் தான் இருக்கிறது. புதிய அணையில் இது தமிழகத்துக்கு சாத்தியப்படாது. மேலும் ஒரு காவிரிப்பிரச்சனைக்கு தமிழகம் தள்ளப்படும்.

கம்பம் அப்பாசு
காவிரிப்பிரச்சனையில் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் கர்நாடகா கையில் உள்ளது, அணையும் கர்நாடகா கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தமிழகத்தால் ஏமாந்து நிற்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் முல்லைப்பெரியாற்றில் அணை கட்டுப்பாடு தற்போது நமது கையில் உள்ளது. இதை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.

சுண்ணாம்புகல்லால் கட்டப்பட்ட அணை பலவீனமாக உள்ளது. இதனால் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள மக்கள் பயப்பீதியில் உள்ளனர் என்ற கேரளாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு கேரளா கூறுவது போல அணையை டீகமிசன் செய்யவேண்டும் என்பதை மனிதாபிமான அடிப்படையில் தமிழகம் செவிசாய்க்கலாம். ஆனால் அதற்காக புதிய அணை கட்டி புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொண்டால் மிகப்பெரிய இழப்பு தமிழகத்துக்கு தான்.

ஒரு அணையை டீகமிசன் செய்வது என்றால் கேரளாவின் கனவு போல அணையை உடைப்பது அல்ல. அணையின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக்கொள்வது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை தமிழகம் 5 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. 

வைகை அருகே ராயப்பட்டி என்ற இடத்தில் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை தமிழகம் தயார்படுத்தி உள்ளது.  மலை உச்சியில் முல்லைப்பெரியாறு அணையில் தேக்க வேண்டிய கூடுதல் தண்ணீரை நேரடியாக கீழே கொண்டுவந்து ராயப்பட்டியில் தமிழகம் தேக்கிக்கொள்ளும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 110 அடிக்கும் குறைவாக தண்ணீரை நிலைநிறுத்தலாம். எவ்வளவு தண்ணீரை நிலைநிறுத்தலாம் என்பதை தாராளமாக கேரளாவே முடிவு செய்யலாம். அணையே இல்லாமலும் பெரியாற்றை தமிழகத்துக்கு திருப்பிக்கொண்டுவரும் வழிமுறைகளையும் தமிழகம் தயார்நிலையில் வைத்துள்ளது.

இதற்கு தற்போது உள்ள 104 அடி சுரங்கத்தை வெறும் 34, அல்லது 50 அடியாக தாழ்த்தினால் போதுமானதாகும்.

இந்த திட்டத்தை கேரளாவில் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், மாத்ருபூமி, மாத்யமம் போன்ற பத்திரிக்கைகளும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள படைப்பாளிகள் சங்கமும் ஆதரவளித்துள்ளது. 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். தமிழகத்தில் 5 மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

மக்களிடையே மட்டும் எட்டியுள்ள இந்த திட்டத்தை தமிழக ஊடகங்களிடமும், கேரள தமிழக அரசிடமும் கொண்டு சேர்க்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.

புதிய அணையை விட புதிய காழ்வாய் என்ற எளிமையான திட்டத்துக்கு கேரள தமிழக அரசுகள் முன்வர வேண்டும். இன்றல்ல என்றானாலும் அது தான் நிரந்தர தீர்வு.

Dec 27, 2011

கேரள போராட்டக்குழு தலைவர் வெளியேற்றப்பட்டார்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

கடந்த சனிக்கிழமை (24.12.2011) கொச்சியில் நடந்த கேரள எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த தீர்வை விளக்கினோம். பலத்த கர ஒலியுடன் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். 

பிரபல எழுத்தாளர்கள் திரு. சிவிசந்திரன், திரு. சி.ஆர் நீலகண்டன், முனைவர் லதா, உட்பட பலரும் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள். புதிய அணை வேண்டாம் என்பதை முல்லைப்பெரியாறு பேராட்டக்குழு தனது 6ம் ஆண்டு துவக்க நாளில் அறிவிக்க வேண்டும் என்று திர்மானம் நிறைவேறியது.

இடுக்கி சப்பாத்துவில் போராட்டத்தின் 6ம் ஆண்டு துவக்க நாளில் எங்களை பேச அழைத்தார்கள்.

25.12.2011 கிறித்துமசு தினத்தன்று 5ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. 

// ஒரு போராட்டம் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். பிரச்சனையே பிரச்சனைக்கு தீர்வாகாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கதவு அடைக்கப்பட்டதும், 9 கதவுகள் திறந்துள்ளன. புதிய அணை தேவை இல்லை. அதே நேரத்தில் தற்போதைய அணையின் பயன்பாட்டை குறைக்க தமிழகம் முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் போராட்ட வெற்றியை உறுதி செய்யுங்கள். ஒரு போராட்டத்தின் வீரியத்துக்கு அதன் முழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய டேம்(அணை) புதிய கரார்(ஒப்பந்தம்) என்ற உங்கள் முழக்கத்தை மாற்றுங்கள். பிரச்சனை ஒரு வாரத்தில் தீரும் என்பதை வலியுறுத்தி பேசினேன்.//

 தொடர்ந்து இதை பலரும் வலிறுத்தினார்கள். ஆனால் அங்கிருந்த சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  புதிய அணை ஒன்று தான் தீர்வு, 999 ஒப்பந்தத்தை மாற்றியே தீரவேண்டும் என முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தார்கள். இதனால் பதட்டம் ஏற்பட துவங்கியது. சிலர் செருப்புகளை எறிந்தார்கள். 

உடனடியாக போராட்ட குழு தலைவர் சி.பி ரோய், எழுத்தாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் எங்களை மீட்டு பத்திரமாக கோவைக்கு அனுப்பி வைத்தார்கள். 

தொடர்ந்து அப்போதே இந்தியாவிசன் செய்தி சேனலில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது. புதிய அணை வேண்டாம் என்று போராட்டக்குழு தலைவர் உறுதிபட தெரிவித்தார். இதை கேட்டதும் சிலர் ரோய் அவர்களை தாக்கினார்கள். 
ஆனாலும் திரு. ரோய் தனது முடிவில் மாற்றம் இல்லை. இலக்கு இல்லாத போராட்டத்திற்கு தலைமை தாங்க நான் தயாரில்லை என்பதை கூறினார். இதை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் கலவரத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் அங்குள்ள மக்களின் நியாயமான குரலின் சத்தம் அடங்கிப்போனது.

திரு.ரோய் அவர்கள் தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு தனிமனிதனாக போராட்டத்தை துவங்கிய திரு.ரோய் நேற்று தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டார். 

போராட்டக்குழுவில் இருந்து துரோகி பட்டம் கட்டி வெளியேற்றப்பட்டது குறித்து ரோயிடம் மீடியாக்கள் கேட்டன.

அவரின் பதில் உண்மையில் கண்கலங்க வைத்தது.

// 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த போராட்டத்தை நான் தான் துவங்கி வைத்தேன். இன்று வரை தலைவர் பொறுப்பில் இருந்து போராட்டத்தை அமைதி வழியில் நேர்வழியில் நடத்தி வந்துள்ளேன். மக்களின் உயிர்பாதுகாப்பு ஒன்று தான் முக்கியம். அதை தமிழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அதை ஏற்க வேண்டும். 

உயிர்பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் விளையாட்டுகளுக்கும் வியாபாரத்துக்கும் இடம் கொடுக்க கூடாது. புதிய அணை தேவை இல்லை என்பதை நான் இன்று உணர்ந்துகொண்டேன். இந்த உணர்வு இடுக்கியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் படிப்படியாக வரும். அப்போது ஒட்டுமொத்த கேரள மக்களும் புதிய அணை வேண்டாம் என்று முழங்குவார்கள். அன்று அதை அரசியல்வாதிகள் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.//
இவ்வாறு திரு ரோய் கூறினார்.

திரு ரோய், மற்றும் திரு கம்பம் அப்பாசு ஆகியோர் பேசிய சிடியை முழுமையாக ஒளிபரப்பி சுமூகதீர்வை தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தியாவிசன் செய்தி சேனலுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமூக தீர்வு வரும் வரை எங்கள் முயற்சி தொடரும்.

Dec 22, 2011

சீமான், வைகோ தீக்குளிக்க முயற்சி

நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

கேரளாவில் ஒரு கோடி தமிழர்கள் இருக்கிறோம். இன்று வரை முல்லைப்பெரியாறுக்காக யாரும் யாரையும் அடிக்கவில்லை என்பது தமிழ்தாயின் மீது சத்தியம். தனிப்பட்ட வைராக்கியத்துக்காக ஒரு சிலர் போடும் ஆட்டத்தை பெரிதுபடுத்தி குளிர் காய்கின்றன பத்திரிக்கைகள். 

கேரள தமிழர்களுக்காக தயவு செய்து தமிழக தமிழர்கள் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். தமிழகத்தை விட கேரளாவில் நாங்கள் மிகமிக பாதுகாப்பாக இருக்கிறோம்.

சில உதாரணங்களை சொல்கிறேன்.

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை என்ற வாசகத்தை எனது வீட்டிலும், வாகனத்திலும் எழுதி வைத்துள்ளேன். அதை பார்க்கும் போதெல்லாம் தமிழக போலீசாருக்கும் மக்களுக்கும் பதட்டம் பற்றிக்கொள்ளும். எதுக்கு இப்படி எழுதியிருக்கிறீங்க, கைது பண்ணீடுவாங்க என்று பலரும் சொல்வார்கள். அவர்களுக்கு நான் தரும் ஒற்றை பதில்

‘நான் கேரள தமிழன். எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு’ இந்த பதிலுக்கு தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி உட்பட பலரும் தலைவணக்கம் தந்திருக்கிறார்கள்.

கேரளாவில் முழுமையான கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஈழம் ஊச்சகட்ட போர் நடந்துகொண்டிருக்கும்போது மேதகு பிரபாகரன் படத்தை கண்டாலே தமிழக காவல்துறையினர் பிடிங்கி கிழித்து விடுவார்கள். படம் வைத்திருப்பவரை தமிழ் தீவிரவாதி என்ற பட்டம் குத்தி வட்டம் போட்டு பின்தொடர்வார்கள். 

ஆனால் கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் ஈழம் குறித்த மூன்று குறும்படங்களை வெளியிட்டார்கள்.

இன்று வரை மேதகு பிரபாகரன் படம் பொறித்த ஆடைகளை கேரள தமிழர்கள் கம்பீரமாக அணித்து நடக்கிறோம். அந்த படத்தை பார்த்து தலைவணக்கம் செலுத்திய மலையாளிகள் பலர்.

கேரளாவில் வண்டிபெரியாறு, ஏலப்பாறை, கட்டப்பனை, ஆலுவா, கொச்சி உட்பட பகுதிகளில் காமராசர் சிலைகள் இன்றளவும் கம்பீரமாக இருக்கின்றன. ஆனால் கோவை, ஈரோடு உட்பட பல பகுதிகளில் காமராசர் சிலைக்கு சாக்கு போட்டு மூடி போலீசார் பாதுகாப்பு இருக்கின்றனர். ஒரு சிலைக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நீங்கள் கேரள தமிழர்களின் பாதுகாப்பு பற்றி ஏன் குடித்து விட்டு ஆடுகிறீர்கள்.  

முல்லைப்பெரியாறுக்காக தமிழகத்தின் போராட்டம் 100% நியாயமானது. ஆனால் அதற்காக இன உணர்வை தூண்டிவிட்டு கலவரம், தீக்குளிப்புகளை அரங்கேற்றுவது ஈனபுத்தி அல்லாமல் வேறு என்ன?

சீமானும், வைகோவும், கொளத்துர் மணியும் தீக்குளிக்கட்டும், அதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு தீக்குளிக்க வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

உடனே யாரும் பொங்க வேண்டாம். சீமானும் வைகோவும் தீக்குளிக்க முயன்றால் அதையும் படம்பிடித்து பத்துநாள் செய்தியாக்க ஊடகங்கள் தயாராக இருக்கின்றன.  தினமலர் மட்டும் தீவிரவாதி தீக்குளித்தான் என்று எழுதும் அவ்வளவு தான் வித்தியாசம்.

தமிழர்கர்களே கேரள தமிழக உறவு என்பது மலையாளி தமிழன் என்ற இன உறவோடு நின்றுவிடுவதில்லை. இது 50 லட்சம் கணவன்&மனைவி இரத்த உறவு. 

தமிழகத்தில் உள்ள மலையாளிகளை அடித்துவிரட்டு என்ற உங்கள் போராட்டத்தின் அர்த்தம் என்ன? இந்த 50 லட்சம் குடும்பங்களை பிரித்து சின்னாபின்னமாக்குவதா?, 50 லட்சம் தம்பதிகளை விவாகரத்து செய்து விடலாமா?, 

தயவு செய்து கொஞ்சமாவது அடிப்படையில் யோசியுங்கள்.  

முல்லைப்பெரியாறு போராட்டம் நியாயமானது, ஆனால் அதில் இனவெறியை திணிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.  

தமிழக்தில் ஒரு கலவரம் நடந்தால் அது இருபிரிவினர் மோதல் என்று செய்தியாகிறது. ஆனால் இப்போது மட்டும் மலையாளி தமிழனை தாக்குகிறான், தமிழனை மலையாளி தக்குகிறான் என்று செய்திகள் அனல் பறக்கிறது. இத்தகு ஊடகங்களின் செய்தியை நம்பும் மெத்த படித்தவர்களை என்னவென்று சொல்வது?

Dec 21, 2011

இந்து நாளிதழில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது


முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த நிரந்தர தீர்வை தமிழ்மலரில் எழுதிவந்தோம். இந்த திட்டத்தை இருமாநில போராட்டக்குழுவினரிடம் கொண்டு சேர்திருந்தோம். 

இது தொடர்பான செய்திகளை வெளியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஊடகங்கள் முன்வரவில்லை. மாத்தியமம், மங்களம், மாத்ருபூமி ஆகிய மலையாள பத்திரிக்கைள் மட்டுமே வெளியிட்டு இருந்தன. ஆனால் அவை தொடர்ந்து வலியுறுத்தப்படவில்லை.
கோவை, பாலக்காடு, இடுக்கி என 5 முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியிருந்தோம். பலன் ஏதுமில்லை. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் நேற்று மீண்டும் ஒரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினோம். இதன் பயனாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி:-



The Mullaperiyar Agitation Council has suggested that a new tunnel from a height of 50 ft from the Mullaperiyar reservoir will ensure water to Tamil Nadu while ensuring the security of the people living in the downstream areas.
“This will promise more water from the dam to Tamil Nadu’’ C.P.Roy, chairman of the council said and added that this was a proposal accepted by the Ainthumavatta Periyar Vaigai Passana Association, (an organisation of farmers), president K.M. Abass.
He said that the agitation was not against the people of Tamil Nadu, and while giving more water from the existing dam, the dead water storage could be reduced and it will address the fears of the people.
He said that if the dead water stored in the dam is reduced and the opening of the tunnel is changed near to the dam the security threat is addressed while it will provide more water to Tamil Nadu.
He said that the farmers in Theni, Madurai, Dindigul,Sivaganga and Ramanathapuram depended on the water from the Mullaperiyar dam and they will get more water while the water from the Mullaperiyar dam is stored at the New Vaigai dam and Rayapetti dam. He said that the existing dam could ensure enough water to Tamil Nadu while keeping the dead water storage level below 104 ft and changing the opening of the tunnel.
By this, the maximum capacity of 136 ft can be reduced to 100 ft.
He said that while keeping the water level at 100 ft, more water from the existing dam to Tamil Nadu, is ensured. If the water level in the reservoir is reduced, the threat due to the reservoir-induced tremors could also be less, he said.
இது தொடர்பான சுட்டி:- http://www.thehindu.com/news/states/kerala/article2729061.ece

தமிழ் ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வரும் சனிக்கிழமை(24.12.2011) கொச்சியில் கேரள எழுத்தாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முல்லைப்பெரியாறு குறித்த தீர்வை தீர்மானமாக வலியுறுத்தி வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளனர். 

அன்றைய தினம் கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம் திரு.ரோய்&கம்பம் அப்பாசு ஆகியோர் தீர்வை ஏற்றுக்கொள்ளும் பேச்சு அடங்கிய சி.டியை அளிக்க இருக்கிறோம்.

கேரள முதல்வர் வாயால் இந்த கோரிக்கை விரைவில் வெளிவரும் என்று நம்புகிறோம். அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்

Dec 19, 2011

கூடம்குளம் முல்லைப்பெரியாறு ஒரே தீர்வு

தினமலர் சன்டிவி, நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு கூத்தடித்து கும்மாளம் அடிக்க இந்த இரண்டு விசயங்கள் கிடைத்து விட்டது. ஆனால் தென்மாவட்ட மக்களுக்கு உயிர்/உயிர் ஆதாரம் இரண்டும் கொலைநடுங்க வைத்திருக்கிறது.

கூடங்குளம், முல்லைப்பெரியாறு பிரச்சனைகள் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு செய்தி, சிலருக்கு குடித்துவிட்டு கடங்காரன் கடையில் கல் எறிய கிடைத்த வரப்பிரசாதம். அந்த கயவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணடிப்பதை விட நல்ல விசயத்தையே எழுதுவோம்...

முல்லைப்பெரியாறில் தற்போது உள்ளதை விட ஆழத்தில் கூடுதலாக குழாய்கள் அமைத்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இந்த திட்டம் எங்கள் திட்டம் அல்ல. 1889ல் தென் மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கடவுளாக அவதாரம் எடுத்த பென்னி குயிக் அவர்களின் கனவு திட்டம்.
அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கம்பம் தேனி, மதுரை இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்கள் ஆண்டாண்டு காலம் போராடி வருகிறார்கள். அனால் எந்த ஊடகங்களும் அதை கண்டு கொள்வது இல்லை. காரணம் அதைபற்றி எழுதினால் பிரச்சனை ஏதும் வெடிக்காதே,    

கூடுதல் குழாய்கள் மூலம் தண்ணீரை கூடலூர் பகுதிக்கு கொண்டு வருதல் முல்லைபெரியாறு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த திட்டம் கூடங்குளம் பிரச்சனைக்கும் தீர்வை தரும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 104 அடியில் அதிகபட்சமாக 2000 கன அடி தண்ணீரை தமிழகம் எடுத்து வருகிறது. இதோடு புதிதாக 50 அடி ஆழத்தில் கூடுதலாக ஒரு சுரங்கம் அமைத்து தண்ணீரை தமிழகம் எடுக்கலாம். இதனால் கேரள மக்களின் பயத்தை போக்கி அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிபடுத்த முடியும். 

கூடுதலாக தமிழகம் எடுக்கும் தண்ணீரை கொண்டு கூடலூர், கம்பம், ராயப்பட்டி புதிய வைகை அணை போன்ற பகுதிகளில் 10.டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கலம். இவற்றில் இருந்து 1 முதல் 10 மெகாவாட் மின் உற்பத்தி பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட நீர் மின் நிலையங்களை ஏற்படுத்த முடியும்.

தற்போது முல்லை பெரியாற்று நீரில் நான்கு குழாய்கள் வழி 140 மெகா வாட் மின்சாரம் பெறப்படுகிறது. கூடுதலாக 4 குழாய்கள் அமைப்பதன் மூலம் இதை இரட்டிப்பாக்க முடியும். மேலும் தற்போதைய நவீன மேம்பட்ட கய்ப்ரீட் தொழில்நுட்பத்தில் ஒரே குழாயில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மின்உற்பத்தி மேற்கொள்ள முடியும். 

இந்த திட்டங்கள் மூலம் குறைந்த பட்சம் 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யமுடியும். கூடங்குளத்தில் ஒரு அணு உலை மூலம் 1000 மெகாவாட் திட்டமிடப்பட்டுள்ளது. இதை யூரேனியம், மத்திய அரசு, ரசியா, கதிர்வீச்சு என்ற எந்த செலவும் இல்லாமல் முல்லைப்பெரியாற்றில்
இயற்கையாகவே எடுக்கலாமே. 

தற்போது 5 லட்சம் ஏக்கர் திட்டத்தில் இருந்தாலும் வெரும் ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே நீர்பாசனம் பெருகிறது. ஆனால் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர்பாசணம் அளிக்க முடியும். 

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பொன்னு விளையும் பூமியாகும். தமிழகத்தின் மின்தேவையையும் மத்திய அரசு உதவி இன்றி சுயமாகவே பூர்த்தி செய்ய முடியும்.

இத்தனை நல்ல விசயங்கள் இருக்கும்போது அதை பற்றி விவாதிக்காமல் மலையாளியை அடித்து விரட்டு, தமிழனை அடித்து விரட்டு என இருமாநில ஊடகங்களும் ஆட்டம் போட்டு வருகின்றன. 

இவர்கள் ஆட்டம் அடங்க மீண்டும் ஒரு செயலட்சுமியோ, புவனேசுவரியோ வரவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு நடிகை எதையாவது செய்ய வேண்டும். அப்போது இந்த கருமம் பிடித்த மீடியாக்கள் அந்த பக்கம் ஒடிவீடும். 

பின்னர் இருமாநில மக்களும் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் அந்த நன்னாள் சீக்கிரம் வர மனதுக்குள் வேண்டிக்கொள்வோம்....

Dec 17, 2011

முதுகெலும்பு இல்லாத சில தமிழர்கள்


மிகவும் கேவலத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன். சில தமிழக தமிழர்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக போனது தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும் என்பதில் ஐயமில்லை.

வீரம் பற்றி பேசும் தமிழர்களில் இப்படியும் சில கோழைகள் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

1. முல்லைப்பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளின் கடைகளையும், பத்திரிக்கை அலுவலகங்களையும் அடித்து நொறுக்குபவர்களுக்கு சென்னையில் உள்ள சூரியா டிவி அலுவலகத்தின் மீது ஒரு கல் வீசும் தைரியம் இருக்கிறதா?

2. மலையாளிகளின் கடை விளம்பர பேனர்களை கிளித்து எறியும் வீராசூரர்களுக்கு தினமலர், தினகரன், தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளில் வெளிவரும் மலையாளிகள் விளம்பரங்களை கிழித்து எறியும் தைரியம் உண்டா?, தொலைகாட்சிகளில் ஆலுகாசு, கல்யாண், முத்தூட் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சொல்லவாவாது தைரியம் இருக்கிறதா?

3. முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய கேரள அதிமுக மற்றும் திமுகவை கலைக்க சொல்லும் தைரியம் இருக்கிறதா?

4.ஒன்றும் அறியாத அப்பாவிகள் பயணிக்கும் பேருந்துகள் மீது கல்வீசுபவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் செல்லும் சொகுசு கார்கள், விமானங்களை தடுத்து நிறுத்தும் தைரியம் இருக்கிறதா?

5. கேப்டன் டி.வி நிருபர் ஒருவர் சொல்கிறார் மலையாளிகளை எல்லாம் அடித்து விரட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்ந்து விடுமாம்.  அட அடி முட்டாள்களே இதை தானே கர்நாடகாவில் செய்கிறார்கள். காவிரிப்பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களை அடிக்கும்போது மட்டும் உங்களுக்கு வலிக்கிறதோ?

6. தினகரன் தினமலர் தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளுக்கு கேரளாவில் 1 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது. இந்த பத்திரிக்கைகள் கேரளாவுக்கு அனுப்பக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா? கேரளாவில் இருந்து விளம்பரங்கள் வாங்கக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?

அன்பர்களே கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான உறவு முல்லைப்பெரியாறு மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் 34,500 ஒப்பந்தங்கள் உள்ளன. இதில் 34499 ஒப்பந்தங்கள் சுமூகமாக உள்ளன. இது உலகில் வேறு எந்த இரு அரசாங்கத்திற்கும் இடையேயும் இல்லாத மிகப்பெரிய ஒற்றுமை.

கேரளாவில் 2 தமிழ் எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 5015 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சட்டசபை வரை தமிழில் பெயர்பலகை வைத்துள்ளார்கள். தமிழில் அரசு ஆவணங்கள் உள்ளன. பத்திரப்பதிவு முதல் பிறப்பு&இறப்பு சான்றிதழ் வரை தமிழில் உள்ளது. தமிழ் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. 

தமிழகத்துக்கு வெளியே அதிக தமிழர்கள் வாழும் பகுதியாக கேரளா உள்ளது. எனவே சில முட்டாள் தமிழர்களே!, கேரளா என்றால் மலையாளிகள் மட்டும் தான் என்ற உங்கள் குருட்டு புத்தியை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை ஒரு வியாபாரமாக ஊடகங்கள் கையில் எடுத்துள்ளன. அதற்கு கூழைகும்பிடு போடும் பேடி தமிழர்களே எதார்த்தத்தை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். 

புதிய அணை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி சுமூக தீர்வை வலியுறுத்தி வரும் சம்மந்தப்பட்ட இடுக்கி, தேனி மாவட்ட விவசாயிகள் சொல்வதை கொஞ்சமாவது காதுகொடுத்து கேளுங்கள்.

மீடியாக்கள் அடுத்த பெரிய பிரச்சனை வந்தால் அங்கே போய்விடும். இப்போது கல் எரியும் தியாகிகள் எல்லாம் அப்போது மீடியாக்களுக்கு தமிழ்தீவிரவாதிகளாக தெரிவீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Dec 12, 2011

முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு


முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.ரோய், இதை அறிவித்துள்ளார். 

இடுக்கி மாவட்டம் சப்பாத்துவில் போராட்ட பந்தலில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய் மற்றும் சுரங்கங்களின் ஆழத்தை கூட்டி , அல்லது புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் முழுமையாக தண்ணீரை எடுக்கலாம். இதன் மூலம் தற்போது உள்ள அணையை சமாதான சின்னமாக நிலைநிறுத்தலாம். புதிய அணை தேவை இல்லை. இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என்று திரு ரோய் பேட்டியில் அறிவித்துள்ளார். 

தாழ்வாக புதிய சுரங்கங்கள் வெட்டி தமிழகம் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு போராட்டக்குழ தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்களும் வரவேற்று உள்ளார். 

திரு பென்னிகுயிக் டைரிக்குரிப்பில் உள்ள கூடுதல் கால்வாய்கள் வெட்டும் திட்டத்தை தமிழ்மலரில் எழுதி இருந்தோம். இது தொடர்பாக திரு. கம்பம் அப்பாசு, திரு ரோய் ஆகியோரை சந்தித்து பேசினோம். 

இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இருவரும் ஒரே தீர்வை வலியுறுத்தும் பேட்டி அடங்கிய சி.டியை தமிழ்மலர் ஆசிரியர் திருமதி.உமாமகேசுவரி திரு ரோய் அவர்களிடம் அளித்தார்.

இடுக்கி சப்பாத்துவில் இன்று மாலை இந்த நிகழ்வு நடந்தது. போராட்ட பந்தலில் பட்டினி போராட்டம் நடத்திவரும் அத்தனை பேரும் மகிழ்ச்சி பொங்க சி.டியை பெற்றுக்கொண்டர். திரு.கம்பம் அப்பாசு அவர்களின் பேட்டிக்கு பலத்த கர ஒலி எழுப்பி மலையாளி தமிழர் இனபேதம் இன்றி அத்தனை மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு.ரோய் இது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்டனர். பல ஆண்டுகள் தொடரும் எங்கள் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்த வந்த இந்த ஆதரவு குரலை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறோம் என்றனர். 

இன்று இரவு 8.30 க்கு நடந்த இந்த சந்திப்பு நாளை கேரளாவின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் என்று நம்புகிறோம்.

தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் உரக்க சொல்வோம்...

திரு.ரோய் (கேரள போரட்டகுழு தலைவர்) :  09447200707
திரு கம்பம் அப்பாசு (தமிழக போராட்ட குழு தலைவர்) :  9597844100
தமிழ்மலர் :  9787678939]

எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் தீர்க்கலாம்.

Popular Posts