Nov 27, 2010

இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு


இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.

அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.

 ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.

ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.

சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.

4 comments:

  1. நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
    சபரி ஷங்கர்
    www.kanavukuseyalkoduppom.org

    ReplyDelete
  2. திரு. சபரி சங்கர்

    உங்களது நல்ல மனசுக்கு நன்றிகள்.

    தமிழகத்தின் பல அரசு பள்ளிகளில் இதே நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் சில அரசு பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செருப்பு வழங்கியுள்ளன. ஆனாலும் இன்னும் பல பள்ளிகளில் இந்த அவலம் தொடர்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான வறுமை கொடூரங்கள் உள்ளன.

    படத்தில் உள்ள பள்ளி மாணவிகள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருடன் பேசி நாளை தருகிறேன்.

    நிகழ்ச்சி அன்றே இதை அங்கிருந்த சில தொண்டு நிறுவனங்களிடம் நினைவு படுத்தி இருந்தோம். அவர்களும் உதவுவதாக சொல்லி உள்ளனர்.

    உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த பராட்டுக்கள்.

    நன்றி.

    ReplyDelete
  3. நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , நான் ஒரு மதுரயில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் , அதன் மூலம் பல ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவி வருகிறேன்.

    நான் அவர்களுக்கு உதவ பள்ளி தலைமையாசிரியர் முகவரி தரவும்


    மேலும் எங்கள் மாணவர்கள் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள www.kanavukuseyalkoduppom.org

    சபரி ஷங்கர் Mobile Number : 96777 35704

    ReplyDelete
  4. நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
    சபரி ஷங்கர்
    www.kanavukuseyalkoduppom.org

    ReplyDelete

Popular Posts